கீதாஞ்சலி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கீதாஞ்சலி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  04-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-Nov-2011
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  4

என் படைப்புகள்
கீதாஞ்சலி செய்திகள்
கீதாஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 3:13 pm

உன் நினைவுகளில் என் நேரம் இழந்தேன்..
உன் புன்னகையில் என் புத்தியனைத்தையும் இழந்தேன்..
உன் இனிய குரலினில் என் எண்ணங்களை இழந்தேன்..
உன் ஒற்றைக்கண் பார்வையில் என் உறுதியனைத்தையும் இழந்தேன்..
உன் பண்பான பேச்சினில் என் பசி இழந்தேன்..
உன் கனிவான தோற்றத்தில் என் கண்பார்வை இழந்தேன்..
உன் சுகம் கண்டபொழுது முதல் என் சுற்றமனைத்தையும் இழந்தேன்..
உன் இதழ் தந்த இனிமையில் என் இதயத்தை இழந்தேன்..
உன் பிரிவினில் என் பதவி இழந்தேன்... ஆக மொத்தத்தில்..
உன்னில் என்னை இழந்தேனடி...!

எத்தனையோ ஏற்றுக்கொண்டாயே என்னிடமிருந்து...
அத்தனையும் பெரிதல்லடீ உன்னைவிட..!
மொத்தமாக கேட்கவில்லை எதையும் உன்னிடமிருந்து.

மேலும்

நன்று நல்ல சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Sep-2015 9:09 am
நன்று தொடருங்கள் ..... 03-Sep-2015 8:12 pm
கீதாஞ்சலி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2015 12:41 pm

கொடுப்பேன் கொடுப்பேன்...
என்று கொடை வள்ளல் போல் பெசியவளே..!
நீ ஒன்றும் பெரிய வள்ளல் இல்லை... நீ ஓர் சாதாரண வியாபாரி தான்...!
ஏனென்று கேட்கிறாயா என்னை ஏமாற்றியவளே..?

உன் இதழைத் தந்தென் நினைவுகளை எடுத்துக்கொண்டாய்..!
உன் புன்னகையைத்தந்தென் புத்தியனைத்தையும் பறித்துக்கொண்டாய்..!
உன் தேன் குரலால் மதுமயக்கம் தந்தென் மனதைத் திருடிக்கொண்டாய்..!
உன் இதயத்தைத்திணித்தென் உயிரையும் உருவிக்கொண்டாய் ..!

நீ வள்ளல் அல்ல ஒரு கைதேர்ந்த வியாபாரியே..!!

மேலும்

பதிவு செய்வதற்கு முன் சரி பாருங்கள். நல்ல முயற்சி ..... 03-Sep-2015 8:14 pm
நன்று சில இடங்களில் எழுத்து பிழை உண்டு திருத்துங்கள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Sep-2015 1:57 pm
கீதாஞ்சலி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2015 10:46 pm

எழுத்து தளத்தின்
நடு நிலையாளர் திருமதி சியாமளா ராஜசேகர்
அவர்களுக்காக இந்த பதிவு .........
*************************************************************************

எழுத்து நடை மேடையில்
வெண்பா படைத்து
சான்றோர் ஆனீர் !!!!

அக அன்பால்
அனைத்து கவிஞர்களுக்கும்
அன்னையானீர்!!!!!

மனதில் உறுதி
எழுத்தில் இனிமை
நடையில் வீரியம்
தந்தது உமக்கு
தரமான
நடுநிலையாளர் பதவியை ....

விழுவதெல்லாம்
எழுவதற்கே தவிர
அழுவதற்கல்ல என
ஆணித்தரமான
கொள்கையோடு
வெற்றி நடை போட்டீர் !!!

எழுத்துக்களில்
தேன் தொட்டு
சித்திரம் வரைந்தீர்
உம்மை நீர்
நேசித்ததால் !!

கவலைகள்

மேலும்

:) :) நன்றிகள் அம்மா!! 10-Sep-2015 5:18 pm
மிகவும் நன்றி ! 08-Sep-2015 12:27 am
உங்கள் ஆசியுடன் மிக்க நலம் அம்மா . 07-Sep-2015 10:45 am
அடக்கத்தோடு ஆரவாரமில்லாமல் நடுநிலையாளர் சியாமளா ராஜசேகர் தமிழ் இலக்கியப் பயணம் வாழ்க வளமுடன். நன்றியும் பாராட்டும் உங்களுக்கு. 07-Sep-2015 4:20 am
கீதாஞ்சலி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2015 7:43 am

அவசரமான சுகாதாரமற்ற
சுயநல சூழலில்
பொறுமை நம்மில் பலருக்கும்
பாகற்காய் தான் ....

வரிசையில் நிற்க
பொறுமை இல்லை

உறவுகளை உன்னதமாக்க
பொறுமை இல்லை

பேருந்திற்காக காத்திருக்க
பொறுமை இல்லை

முடிவுகளுக்காக காத்திருக்க
பொறுமை இல்லை

பொறுமையாய் இருக்க
பொறுமை இல்லை

பெற்ற செல்வங்களுக்கு நேரம் செலவிட
பொறுமை இல்லை ..

அன்பு காட்ட
பொறுமை இல்லை

கணவன்மார்களிடம்
விவாதிக்க பொறுமை இல்லை

நிகழ் கால பொறுமை இன்மை
எதிர் கால இருள் ...

கடவுளிடம் வேண்டினேன்
எனக்கு பொறுமையை கொடு
ஆனால்
சீக்கிரம் கொடு என

அதற்கும் பொறுமை இல்லை

பொறுமை
கோபத்தில்
கதாநாய

மேலும்

deep analysis hats off ஹரி ..................... 06-Sep-2015 9:19 am
பொறுமை...... மனக் கொட்டகையில் அடங்காமல் திமிறுகின்ற நினைவுக் குதிரைகளுக்கு மாட்ட முயலும் - கடிவாளம்....!! இயலாமை என்ற போலி கடிவாளம் இந்த பொறுமை என்ற கடிவாளங்களின் இடையிடையே விரவிக் கிடப்பதால்..... பாவம்....மனித உயிர்கள்...... சரி எது தவறு எது எனப் புரியாமல் சகித்துக் கொள்வதையே பொறுமை எனப் புரிந்து கொள்கிறது....... அனுபவம் இல்லா சோம்பேறிகளுக்கு இயலாமை என்பது பொறுமையாகிறது.... அறிவில் தெளிந்த மானுடர்க்கு இதயத்தில் அமைதி பொறுமையாகிறது.... அடைந்தே தீருவேன் என்பவர்க்கு அழகிய இலக்கு பொறுமையாகிறது..... அழிந்தே தீருவேன் என்பவருக்கு ஆகாத அகக் கயமை பொறுமையாகிறது.....!! எனவே பொறுமை என்பது பதுங்குவது என்று சொன்னால்....... பாய்வதால் ஏற்படுவது ஒரு பலியாக இருக்கக் கூடாது - அது பலர் வாழ்வதற்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்....... என பொறுமையின் பரிமாணங்களை கொண்டு பாதை அமைத்து எட்டிய தூரம் வரை என் அறிவை பயணிக்க வைத்த இந்த அருமையான பொறுமைக் கவிதை செழுமை.....!! நன்றி 06-Sep-2015 1:29 am
ஆம் உண்மை நன்றி 05-Sep-2015 11:30 pm
இது அவசர உலகம் .யாருக்கும் எதற்கும் பொறுமை இல்லை விளைவு பதட்டம் .பரபரப்பு.பொறுமையை அந்தந்த சூழலில் cultivate பண்ணியே வளர்க்கவேண்டும் .சின்னச் சின்ன விஷயங்களுக்கு Iritate ஆவதை தவிர்த்தால் பொறுமை வளரும் .இந்த இரிடேஷனால்தான் கணவன் மனைவியிடத்தில் குடும்பங்களில் பூசல் ஏற்படுகிறது. யாவற்றுள்ளும் பொறுமை வடிவில் உறைபவளே வந்தனம் வந்தனம் என்று தேவியைப் போற்றும் ஒரு துதியுண்டு . நல்லறிவுரைக் கவிதை வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 05-Sep-2015 10:49 pm
கீதாஞ்சலி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 10:51 pm

அணிகலன் அல்ல ....
கரப்பான் பூச்சி கலன்....

நகை சுவையல்ல
நகைச்சுவை தான்
ஆரோக்யமான சுவை ..

இந்த அணிகலனை செய்ய
செய் கூலி இல்லை
சேதாரம் இல்லை
ஆச்சாரி இல்லை

பெரும்பாலான கணவர்கள்
இல்லத்திலேயே செய்து விடுவார்கள் ....

மேலும்

thank you so much sir 16-Apr-2015 10:59 pm
gud creativity...u think differently.. 16-Apr-2015 10:55 pm
அப்படியா ஓகே ஓகே இப்போதான் ஹாப்பி.......... 10-Apr-2014 3:28 pm
பயம் வேண்டாம் ..... ஏற்கனவே ஒருவர் புக் செய்து விட்டார் .ஹாப்பி ஆ ........ 10-Apr-2014 3:00 pm
கீதாஞ்சலி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2014 11:07 pm

கருவில் இன சுமை
பள்ளியில் கல்வி சுமை
கல்லூரியில் காதல் சுமை
வாழ்க்கையில் இன்னல்கள் சுமை
பணியில் பணி சுமை
முதுமையில் தனிமை சுமை
இறப்பில் வலிகள் சுமை

பின் எது தான் சுவை ?

சுமைகளை சுவையாக
மாற்றும் மன வலிமை தான் சுவை !

மேலும்

கடவுள் கண் திறப்பார் 16-Apr-2015 10:57 pm
"சுமைகளை சுவையாக மாற்றும் மன வலிமை தான் சுவை !" ----- ஒஹ்...எவ்வளவு உன்னதமான வரிகள். சுமைகளை பற்றியே எப்பொழுதும் புலம்பி திரியும் மனிதர்களுக்கு இவ்வரிகள் ஒரு சாட்டையடி...!! அருமை அருமை அம்மாஆஆஆஆஆ.......இவ்வரிகளை ஏற்றுக்கொள்ள கடவுளிடம் மனவலிமையை வேண்டுகிறேன். நன்றி அம்மா! 16-Apr-2015 10:52 pm
நன்றி புனிதா 22-Apr-2014 7:10 pm
மிகவும் அருமை தோழமையே... 22-Apr-2014 4:40 pm
மேலும்...
கருத்துகள்

மேலே