எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை
விலகி நெருங்கும் பூனை!
*************************************
திருவெறும்பூர் திவாகர்
முசிறி கணேசன்
மணச்சநல்லூர் ஜெயந்தி
காட்டூர் குமார்
துறையூர் சீனிவாசன்
தொட்டியம் ரேவதி
லால்குடி முத்து
மணப்பாறை தமிழரசி
இவர்கள் விரும்பி
கேட்கும் இந்த பாடல்
என்ற அறிவிப்பிற்கு பின் வரும்
அகில இந்திய வானொலியின்
பாடல் தந்த இனிமை
இன்று பண்பலை தரும்
பாடல்கள் தருவதில்லை.
* பண்பலை - FM
நவநாகரீக தமிழ்ப்பெண்
நவநாகரீக உடையில்
இடுப்பில் குழந்தை
காவிக்கண்டை ஊட்டும் அழகில்
மகிழ்ச்சி கொண்டேன்
“Finish it fully” என்றார்
வேதனை கொண்டேன்
அரக்க பரக்க அன்றும் கணினியுடன்
போரில் இருந்தேன். பின்னாலிருந்து
என் தோளில் கைகள், எவன் அவன்
என மனதுக்குள் வார்த்தைகளை தேடும்
அந்த நொடியில் திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தேன்.
வழக்கம்போல் எனக்கான பிரச்சினையுடன்
நின்றிருந்தார் மேலாளர். அப்பாடா என
மனதுக்குள் பெருமூச்சு விட்டபடி, சார் என்றேன்.
இதக் கொஞ்சம் முடிச்சுக் குடுத்துருப்பா
என சாவகாசமாய்ச் சொன்னார்.
காலக்கெடு நெருங்கும் அவ்விருத்
திட்டங்களிலும் பணிச்சுமை கழுத்தை
நெரிக்கும் வேளையில் இது கொஞ்சம்
சிரமம் என நாசூக்காய் சொல்ல எத்தனிக்கையில்
அவசரமில்லை, எனக்குத் தெரியும் உன்னால் முடியும்
எனவும், சில பல ஆங்கில மேற்கோ (...)
இரு நண்பர்கள் வெகு நாட்கள்
கழித்து சந்தித்துக் கொண்டனர்.
ஒருவர் ஐபோனில்
பேசிக்கொண்டிருந்தார்,
இன்னொருவர் சாம்சங்கில்
பேசிக்கொண்டிருந்தார்.
இறுதியில் செல்பி எடுத்து
தங்கள் நட்பை உலகுக்கு பறைசாற்றினர்.
அன்று சிறு வயதில்
பட்டாம்பூச்சி பிடிச்சு திரிகையில்,
விமானம் பறப்பதைக் கண்டு
அதிசயித்து ஓடிய நான்,
அவசர அவசரமாய் விமானம் பிடித்து
ஊர் வந்து இறங்கி பட்டாம்பூச்சி பறப்பதைக்கண்டு
அதிசயித்து நின்றேன் இன்று...
தன் கதாநாயகன் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில்
வெளியாகவில்லை என்று போராடுகிறான்,
தன் இனம் அழிக்கப்பட்டபோது தொலைக்காட்சியில்
மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருந்த
உணர்ச்சிமிக்க தமிழன்..!!!
என்ன ஒரு முரண்
நீ செல்லமாக கொஞ்சினாலும் காதல் கொள்கிறேன்
கோபமாக முறைத்தாலும் காதல் கொள்கிறேன்...!!