புதுயுகம் தேடும் பெண்ணே நீ புதர்களில் விழவேண்டாம் ஏன் பெண்ணாய் பிறந்தோமென்று நீ கவலைப்பட வேண்டாம் கடவுள் கொடுத்த பாக்கியம் பெண்ணே கருவறை தானடி கருவை சுமக்கும் பெண்ணே நீ கடவுள் தானடி விழிகளில் வழிந்திடும் கண்ணீர் வலிகளின் அடையாளம் முயற்சிகளில்லா வாழ்க்கை முற்றிலும் அவமானம் வளையல் அணியும் கைகள் வானை எட்டிப் பிடிக்கிறதே கொலுசை அணியும் கால்கள் விண்ணில் நடக்க துடிக்கிறதே பட்டம் பெற்ற பெண்ணே சிறு வட்டம் அல்ல உலகம் சோம்பலை தூக்கி எறிந்தால் உன் சோதனை காலம் விலகும் அடுப்படி மட்டும் உலகல்ல அகிலமும் உந்தன் பெயர் சொல்ல எதிர்வரும் தடையை எதிர்கொள்ள எழுந்து வா நீ வெல்ல.
வழி : Balaji Ganesh
கருத்துகள் : 0
பார்வைகள் : 3072
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [117]
- கவின் சாரலன் [45]
- Dr.V.K.Kanniappan [38]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [27]
- மலர்91 [19]



