மறவன் என்று வாயாற சொல்லிச் சொல்லி - தமிழன் மரம் இணையாய் ஆகி விட்டான், ஐயோ பாவம்! பழம் பெருமை ஒன்றுதானே இவன் சொத்து - இவன் பகுத்தறிவை வெறுக்க பழகிக் கொண்ட வித்து. ஒற்றுமையாய் வாழ நீங்கஓடிவாங்க - என்று உளமாற அழைத்தாலும் உணர நினையான் பித்தராய் மேடையில் பிதற்றுபவனை - உடனே பெருமைப்படுத்த சிரமப்பட்டு உபசரிப்பான். எத்தர்களை பகைத்துக்கொள்ள விழையான் - மேலும் எத்தனைதான் பட்டாலும் ஏற்றமுற நினையான் கத்துவான் கால்பிடிப்பான் கதிஎன்பான் - ஆனால் கணப்பொழுதும் தனை உணர கருதமாட்டான். பிள்ளை, பெண் பெருமைதனைப் பேசமாட்டான் - ஆனால் பிறராயின் புகழ்பாட தயங்க மாட்டான் கல்லுக்கும் கட்டைக்கும் உடல்வறுப்பான் - ஆனால் கணப்பொழுதும் இனஏற்றம் விழையமாட்டான். பிரிந்துவாழும் மனப்பாங்கே இவன் பண்பு - மேலும் பிரிப்பவனைத் துதிப்பாடல் இவன் செய்யும் தொண்டு தான்உயர நேரம்வரின் தயக்கம் காட்டுவான் - ஆனால் தளராமல் உயர்த்திவிட தன்உடலை வளைப்பான். சாக்கடைதான் இவனுடலில் பாய்கின்றதோ!-அல்லது சவத்திலேதான் செந்நீரும் தவிக்கின்றதோ! பகுத்தறிவே! நீ நுழைய வழியில்லையோ! - அல்லது இந்தப் பாழ் இனத்தைக் காப்பாற்ற மனமில்லையோ! - பொன்பரப்பியான்-


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வைகள் : 87
3
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே