தடைகளே வாருங்கள்
தடைகள் வந்தபோது
தாவும் சக்தி இருப்பதை உணர்ந்தேன்
இன்னல் வந்தபோது
இதயம் என்ற இடிதாங்கி இருப்பதை உணர்ந்தேன்
வலிகள் வந்தபோது
வளர்ந்த தசை நார்களில தமிழின் உறுதியை உணர்ந்தேன்
தடைகளே வரவேற்கிறேன் உங்களை என்
தன்னம்பிக்கையை வளர்த்தவர்கள் நீங்கள்....!
அதற்கு எனது நன்றி....!