தபால்காரர் சிந்தித்தால்

பூவது மேனியை வருடிடும் வண்டு
வலி தாங்கியே மேனி மகிழ்ந்திடும் !!
தேனமுது தளும்பும் இதழில்
பருகிப்பின் வண்டதும் மகிழும்...!

வண்டது காணா மலரது
சந்ததி பெருக்கிட வழியேது ...!
மகரந்த சேர்க்கைக்கு உதவிட
வண்டை விடவும் வேறுவழியேது...!

மகரந்த துகளை கொண்டு சேர்த்திடும்
வண்டுக்கொரு பரிசாக
இதழ் பதித்து தேன் தரும் மலரே!!
எண்ணற்ற மானுட காதலை
சேர்த்திடும் எனக்கு ஏமாற்றமே பரிசாய் ...!!

எழுதியவர் : கனகரத்தினம் (26-Mar-14, 6:41 pm)
பார்வை : 145

மேலே