விசுவாசனை

என் காதலி என்கிற அத்தனை
செயல்பாடுகளிலும் நீ எனக்கு
எப்போதும் விசுவாசமாய் இருப்பாய் ...
காதல் வீடுகளில் கடைசி
வீட்டில் நீ குடி ஏறும் போதும் ...
அத்தனை ஆதாரங்களையும்
உன் வாசனை சொல்லிவிட்டுதான்
பின் மணக்கும்...
இந்த காதல் பிரிவு மட்டும்தான்
நடக்கும் போது சுமையாகவும்
அமரும் போது கணமாகவும் ஒருநிலை
மாற்றங்களை தருகிறது .......
அவ்வப்போது உன்னை பார்க்கும்போதுதான்
மனப்பிரார்தனைக்கான அர்த்தம் புரிகிறது ....
மீண்டும் மீண்டும் உன் விசுவாசனைக்காக
காத்திருக்கிறேன் நான் நான் நான் .......

எழுதியவர் : (30-Jun-15, 12:09 pm)
பார்வை : 57

மேலே