நன்னெறி வாழ்கவே

பூக்களின் வாசம் காற்றுள்ள
..திசையில் மட்டுமே பரவுகிறது;
ஈகை, கொடை,தர்மம் அவரவர்
..குலத்தில், மரபணுவில் வருகிறது;
நற்பண்பு, நன்மக்கள் புகழ்எட்டுத்
..திக்குகளில் பொங்கிப்பிர வகிக்கிறது;
நன்னெறியும், நன்னெறியா ளர்களும்
..பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-15, 10:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே