என்னவளிடம் சில கேள்விகள்

காதலில் நிஜம் எதுவென நான் கேட்டேன்
கண்கள் என்றாள் என்னவள்
காதலில் சுகம் எதுவென நான் கேட்டேன்
உனக்காக காத்திருக்கும் மனம்
என்றாள் என்னவள்

காதலில் வரம் எதுவென நான் கேட்டேன்
உன் காதல் என்றாள் என்னவள்
காதலில் பிரிவு எதுவென நான் கேட்டேன்
பிரிவே இல்லை என்றாள் என்னவள்

காதலில் சோகம் எதுவென நான் கேட்டேன்
எனக்கு முன்னே உன் மரணம் என்றாள்
என்னவள்
காதலின் குழந்தை எதுவென நான் கேட்டேன்
கவிதை என்றாள் என்னவள்

காதலின் நிழல் எதுவென நான் கேட்டேன்
உன் காலடி சுவடுகள் என்றாள் என்னவள்
காதலில் பெரிய ரணம் எதுவென நான் கேட்டேன்
உன் மரணம் எனக்கும் என் மரணம் உனக்கும்
என்றாள் என்னவள்

காதலில் எதிரி எதுவென நான் கேட்டேன்
நாம் தான் என்றாள் என்னவள்
காதலில் உயிர் எதுவென நான் கேட்டேன்
என்னில் நீ உன்னில் நான் என்றாள் என்னவள்

எழுதியவர் : rudhran (6-Jul-10, 7:06 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 586

மேலே