என்னை கொல்கின்றது

காற்றுக்காக மட்டுமா
ஜன்னலை

திறந்து வைத்தேன்?

உன் நினைவையும்
விரட்ட அல்லவா?

காற்றோ உள்ளேயும்,
வெளியேயும் சுதந்திரமாக

உன் நினைவு மட்டும்
வெளியேறாமல்.

ஜன்னலில் தொங்கும்
திரைசீலைப் போல

விலகி விலகி வந்து
ஒட்டிக்கொள்கின்றது

எனை கொல்கின்றது.
#sof_Sekar

எழுதியவர் : #sof #sekar (16-Nov-16, 9:43 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 687

மேலே