நீ தான்

பின்னிரவின் முன் பனி
நீ நாம்...
யாருமற்ற சாலை
நம்மிருவருடையதானது....
கைக்கோர்த்துக்
கொள்கிறாய்..
உன் கைச் சூட்டின்
இதம் உணர்கிறேன்
நான்...

வானத்து சந்திரன்
நமக்கானது...
நீ எனக்காகிறாய்...
இந்த இரவின்
அழகைப் போலவே....

எழுதியவர் : அருள் ஜெ (1-Mar-17, 9:33 am)
Tanglish : nee thaan
பார்வை : 99

மேலே