காதல்
என் இதயத்திற்கும் ஏனோ வேர்க்கிறது
இமை கூட உன் முகம்
பார்க்கிறது
உன் ஒரு இதழ் முத்தம்தனை கேட்கிறது
கடல் பெரிதா நிலம் பெரிதா
எனைக் கேட்டால் நீதான் என்பேன்
கனவில் நீ வரும்போதெல்லாம் கடவுளிடம் இன்னும் கொஞ்சம் இரவல் கேட்கிறேன் இரவை
காலம் முன்னோக்கி நகர நான் மட்டும் பின்னோக்கிய செல்கிறேன் உன்னுடன் கழித்த என் இனிமையான பொழுதுகளை புதுப்பிக்க
இரவு வானை நிமிர்ந்து கொஞ்சம் பார் நட்சத்திரம் உனை பார்த்து கண் சிமிட்டும் என் கண்களாய்