பெண்மை

கருவறையிலிருந்து
ஆசையோடு வந்தேன்
என் பாலினம் பார்த்ததும்
முகம் சுளித்தது இந்த உலகம்
சிலுவையில் அறையப்பட்டது
என் சுதந்திரம்
ஆணிகளை விடுவித்து
இளைப்பாற வந்தேன்
மீண்டும் மூன்று முடிச்சு
சிறையில் சிக்கிக்கொண்டேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Mar-18, 8:32 am)
Tanglish : penmai
பார்வை : 131

மேலே