மண்ணன்

நிறம் பார்த்து ஒதுக்கிய கரமே!
அளக்கர் பார்த்து அலட்சித்த கரமே!
சேறு நிலம் வேண்டாவென
வீறு கொண்டு போனாயே...
விசைப்பலகை மோகத்தால்!
வயிற்றுக்கான சோற்றைத் தான்
வடிவமைக்க இயன்றதா?
உன் மென்பொருள் மார்க்கத்தால்!
கார்ப்பரேட் மன்னனுக்குக் கை குலுக்கும் கரமே!
காலம் வரும்! இந்த
கருஞ்சேற்று மண்ணனுக்கும் கரம் கொடுக்கும் நேரம் வரும்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (11-Jun-19, 2:35 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 1515

மேலே