முதல் சொல் கவிதை கொ

கொன்றைவேந்தன் ஆத்திசூடி
நன்றாய்ப் பயின்றவன் /
கொடும்பாவி
என்று பெயர் பெற்றான்/

கொடும் கோபம் கொண்டு
கடுஞ்சொல் வீசுகின்றான் /
கொள்ளை அழகுடைய
நல்ல பிள்ளை/

கொள்கை மாறியதாலே
அவனுக்கு அவப்பெயரானது /
கொச்சை வார்த்தைள்
ஏராளம் தாராளம் /

கொட்டுகின்றான்
யார் முகமும் பாராமல் /
கொடுமையிலும் கொடுமை
குலத்துக்கே கேடானப்பிள்ளை /

கொஞ்சம் கொஞ்சமென
நாசமாகிப் போனதே /
கொம்புத் தேவரின் மகனது வாழ்க்கையானது/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (27-Sep-19, 2:34 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 165

மேலே