கவிதையாய் பழகியவள்

சரியோ தவறோ
உன் கைபிடித்து மட்டுமே
நடப்பேன் குழந்தையாக.....

எதுகையோ மோனையோ
உன்னை மட்டுமே
எழுதுவேன் கவிதையாக.....

கனவோ கற்பனையோ
உன் காதல் தடாகத்தில்தான்
பூத்திருப்பேன் தாமரையாக .....

சொல்லோ செயலோ
உன்னை மென்மையாகத்தான்
கையாளுவேன் தமிழகராதியாக.....

பசியோ ருசியோ
உன் எண்ணத்தோடுதான்
பயணிப்பேன் வாழையடிவாழையாக....

இலக்கியமோ இலக்கணமோ
உன் இல்லத்தில்தான்
இருப்பேன் முருங்கையாக.....

சுகமோ சுமையோ
உன் மடிமீதுதான்
தலைசாய்ப்பேன் அழுத்தமாக.....

பிறப்போ இறப்போ
நம்மை பிரித்துப்பார்க்க
முடியாது உயரத்தில் வைத்து
கொண்டாடுமே
இந்த கலியுக கண்கள்.....

எழுதியவர் : மேகலை (1-Feb-20, 5:44 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 359

மேலே