உனக்கும் எனக்கும் ஏன் இடைவெளி

ஓர் நுண்ணுயிரின் இணைப்பு இது
கண்ணுக்கு தெரியாத ஓர் உண்மை இது
உலகமே போராடுகின்றது !
நாட்டுக்கு நாடு இன்று இடைவெளி
ஊருக்கு ஊர் இன்று இடைவெளி
வீட்டுக்கு வீடு இடைவெளி
மனிதனுக்கு மனிதன் இடைவெளி
உறவுகளுக்குள் இடைவெளி
இடைவெளியே நம்மை இணைக்கும் காலம் வரும்.
துன்பங்கள் நிரந்தரம் அல்ல
நம்பிக்கை நம்மை கரை சேர்க்கும்
இன்று நமது தனிமை
நாளைய தலைமுறையின் உயிர்ப்பு!
தனிமையில் தன்னை உணர்வோம்
இதை தரணிக்கு எடுத்துரைப்போம் !
தன்னை அறியும் அறிவை அறிந்து
இதை தரணிக்கு எடுத்துரைப்போம்
உனக்கும் எனக்கும் இந்த இடைவெளி
கண்ணுக்கு தெரியாத ஓர் உண்மை !

எழுதியவர் : சாய் (24-Mar-20, 7:57 pm)
சேர்த்தது : சாய்
பார்வை : 145

மேலே