புதிய பாஸ்கரின் புதிய பார்வை
06-நவ-2021
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி... இங்கு
படிப்பு பல தொழில்நுட்பம்.. அது
பூக்களாய் மணக்கிறது மாணவர்
விரும்பும் வண்ணம்.. இது சேர்மன்
புதிய பாஸ்கர் கைவண்ணம்...
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி...
வசந்தங்கள் வரமாக
வளங்கள் வசமாக...
மகிழ்ச்சியுடன் மாணவர்கள்
கல்வி கற்கும் கல்லூரி...
கல்லூரி சென்று வர
நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை..
இது மாணவர்களின்
சந்தோச சாம்ராஜ்யம்... அது
கல்லூரியின்பால் மாணவர்களை
அன்பால் ஈர்க்கும்...
எல்லோருக்கும் பெருமை சேர்க்கும்..
ஆசிரியர்களின் திறமைகளில்
ஈடில்லா இனிய கற்பித்தலில்...
பாடங்கள் சிரத்தை இல்லாமல்
மாணவர்களின் சிரத்திற்கு ஏறும்...
கல்லூரியின் சதுரஅடி ஒவ்வொன்றும்
சேர்மன் புதிய பாஸ்கரின்
சீரிய கண்காணிப்பில்...
மாணவர்கள் ஆசிரியர்கள்
ஒவ்வொருவர் நலமும்
சேர்மனின் நேரடிக் கவனிப்பில்...
தென்காசியில் அமைந்த...
இந்திய அளவில்
சிறந்ததோர் கல்லூரி...
அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி... அது
வெற்றி எனும் வசந்தம்
வரவேற்கும் கல்லூரி...
கல்லூரி பெற்ற தேசியவிருது.. அது
அர்ப்பணிப்பு கலந்த
சேர்மனின் திறமை எனும்
ஒருபானை சோற்றிற்கு
ஒரு சோறு பதம்.. இதனை எண்ணி
எல்லோரும் மகிழ்வது நிஜம்...
செந்திலாண்டவர் கல்லூரி.. அது
நன்கு வரையப்பட்ட
நல்லதொரு ஓவியம்...
அர்த்தங்கள் நிறைந்த
அழகிய காவியம்...
அறிவுத் தென்றல் வீசும்
அற்புத நந்தவனம்...
புதிய பாஸ்கரின் நேர்த்தி
இதற்கெல்லாம் காரணம்...
எதிலும் புதிய பார்வை கொண்ட
புதிய பாஸ்கர்...
வற்றாத வளங்களோடு
வாழ்க பல்லாண்டு...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.
🌹👍👏💐🌹🌺🍫🎂🌹