பெண்ணே....!!!!

💃💃💃💃💃💃💃💃💃💃💃

*பெண்ணே..!*

படபை்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

அடி பெண்ணே !
நிலவும்
உன்னிடம் இருந்து தான்
அழகு பெற்றதோ ?

மலரும்
உன்னிடம் இருந்துதான்
மணம் பெற்றதோ ?

சிலைகள் எல்லாம்
உன்னை கொண்டுதான்
செதுக்கப்பட்டதோ ?

ஓவியங்கள் எல்லாம்
உன்னை கண்டு தான்
வரையப்பட்டதோ ?

காதல் கவிதைக்கு
நீ தான் கலைமகளோ ?

காதல் காவியத்திற்கு
நீதான் தலைமகளோ ?

வண்ணங்களை எல்லாம்
வானவில்
உன்னிடம் இருந்துதான்
கடன் வாங்கியதோ ?

கடல் மீன்
உன் கண்ணில் வந்து தான்
பதுங்கியதோ ?

பூக்கும் விண்மீன்கள் எல்லாம்
உன் புன்னகையின்
மிச்சமோ ?

அடிக்கும் தென்றல் எல்லாம்
உன் மூச்சுக்காற்றின்
எச்சமோ..?

கூவும் குயில்கள் எல்லாம்
உன் குரலை
குத்தகைக்குக் எடுத்ததோ ?

வசந்தகால அழகெல்லாம்
நீ வாடகைக்குக் விட்டதோ ?

மணக்கும் பொருள் எல்லாம்
உன் கட்டழகு
கை தொட்டதோ ......?

புனிதமான இடங்கள் எல்லாம்
உன் பாதம் பட்டதோ....?


*கவிதை ரசிகன்*


💃💃💃💃💃💃💃💃💃💃💃

எழுதியவர் : கவிதை ரசிகன் (14-Jul-24, 7:38 pm)
பார்வை : 105

மேலே