விவசாயி வாழட்டும்..!!

வயல் காட்டில் திரிந்து
கால்கள் மறத்திருக்கும்
மண்வெட்டி பிடித்தே
கைகள் உறத்திருக்கும்
பட்டினி கிடந்தே
வயிறு மடிந்திருக்கும்
வெயிலில் சுற்றிச்சுற்றி
உடல் கருத்திருக்கும்
மெலிந்த தேகத்திர்க்குள்
உயிர் ஓடிக்கொண்டிருக்கும்
பாரத தேசத்தின்
முதுகெலும்புகள் இவர்கள்
அதனால்தான் வெறும்
எலும்பாக திரிகிறார்கள்
முதுகெலும்பை ஓடித்துவிடாதீர்கள்
மேலும் மேலும் சுமையேற்றி
உயிரைக் குடிக்காதீர்கள்...
சிறப்பான வாழ்வெல்லாம்
தேவையில்லை எங்களுக்கு
மூச்சு விட கொஞ்சம்
காற்று விடுங்கள் அது போதும்
தண்ணீர் தண்ணீர் என தவிக்க விடாதீர்கள்
இளம் பயிருக்கு நீரின்றி காய விடாதீர்கள்
காய்ந்த பயிரைக் கண்டால்
எங்கள் உயிர் சீர்குலைந்து போகும்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (5-Mar-12, 3:42 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 178

புதிய படைப்புகள்

மேலே