ராஜேஷ் லிங்கதுரை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜேஷ் லிங்கதுரை
இடம்:  Chennai
பிறந்த தேதி :  10-Apr-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Dec-2017
பார்த்தவர்கள்:  300
புள்ளி:  22

என்னைப் பற்றி...

ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.

பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.

என் படைப்புகள்
ராஜேஷ் லிங்கதுரை செய்திகள்
ராஜேஷ் லிங்கதுரை - சிந்தை சீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2018 1:39 pm

கட்டியவன் புட்டி தொட்டான்;
கைப்பிள்ளை உடன் என்னைக்
கைவிட்டான்!
உடலில்
உதிரம் வற்றிருந்தால்,
உயிரை உதறி சென்றிருப்பேன்!
மார்பு வற்றியது!
மகளே! உன்
வயிற்றுத் தீ நெஞ்சு பற்றியது!
மானம் விற்றேன்!
மானியம் தந்து சென்றான்!
மெய் விற்றேன்!
மொய் வைத்துச் சென்றான்!
உடல் நுழைத்த வலிகூட
வலிக்கவில்லை மகளே!
வலிக்கிறது...
என்னுடல் புசித்தவனும்
உத்தமன்
வேசமிட்டு உன்னை
வேசிமகள் என்று ஏசயிலே...

மேலும்

அருமை. தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளைத் திரட்டினால், அவற்றில் ஆண்களை நேரடியாகத் திட்டும் வார்த்தை ஒன்று கூட இருக்காது. இதுவே நாம் கடைபிடித்த பெண்ணடிமைத்தனத்துக்கு சாட்சி. அடிமைத்தளைகளில் இருந்து பெண்கள் மீண்டு வந்தாலும் இன்னும் அந்த வக்ர எண்ணம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் வலியை அருமையாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். 17-Aug-2018 4:58 pm
ராஜேஷ் லிங்கதுரை - ராஜேஷ் லிங்கதுரை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2018 4:32 pm

பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என்
கையைப்பிடிச்சவளே...

செரட்டயப்போல என் காதலையும்
பொரட்டிப் போட்டவளே...

அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன
எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே..

தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன..
ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே...

சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு
வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி..

ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம்
ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச..

கெழக்கால போற கெழடுகட்ட கூட
வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச...

பாம்பக் கண்டாலும் பயிராத என்ன - ஏண்டி
பல்லாங்குழி ஆட வச்ச...

உப்பாத்த ஓடை போல மனசுக்குள்ள பாஞ்ச ஒன்ன
உப்பப்போல கரைச

மேலும்

கோட்டிக்காரி, கோட்டிக்காரன் போல மேலும் சில வார்த்தைகளை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பாம்படம் என்ற சொல் அங்கு வழக்கில் உண்டு. பாட்டிமார்கள் அணியும் கம்மல் போன்றது, ஆனால் கம்மலை விட மிகவும் பெரியதாக இருக்கும். அதை அணிந்து காதே ஊஞ்சல் போல நீளமாக தொங்கும். இது போல இன்னும் பல வார்த்தைகள் உண்டு. பாம்படம் என்ற சொல்லை மறந்தது சற்று வருத்தமளிக்கிறது. வீட்டின் முதல் அறைக்கு ஊரில் தார்சா என்று பெயர். சென்னி என்பது சுத்தமான தமிழ்ச்சொல். சிலப்பதிகாரத்தில் சென்னி என்ற சொல் பய்னபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னி என்றால் உச்சந்தலை என்று பொருள். சென்னியைப் பெயர்த்து எடுத்து விடுவேன் என்று திட்டுவது வழக்கம். இன்று அந்த சொல் வழக்கில் இல்லை. செடிசேத்தை என்றால், பாம்பிரணை போன்ற பூச்சிகளைக் குறிக்கும் சொல். ஊரில் பாம்பிரணையை, சாம்பிராணி என்றுதான் சொல்வார்கள். கோடி என்றால் புத்தாடை என்று பொருள். கோடி என்ற சொல்லும் புத்தாடை என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. ஈரக்கொலை என்றால் நெஞ்சு என்று அர்த்தம். ஒடங்காடு என்றால் கருவேலங்காடு. மூதேவி என்ற சொல்தான் சுருங்கி மூதி என்றாகி விட்டது. கறுக்குமட்டை என்றால் பனைமட்டை. 17-Aug-2018 4:38 pm
தூத்துக்குடியில் பிறந்த ஒருவன் காதல் கவிதை எழுதினால் எப்படியிருக்கும் இருக்கும் என்ற கற்பனைதான் இந்த கவிதை. தூத்துக்குடியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதை. தூத்துக்குடி, திருநெல்வேலி தவிர பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு சில வார்த்தைகள் சற்று கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன். அர்த்தம் புரியாத வார்த்தைகளைச் சொன்னால் விளக்கமளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். கவிதையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும். https://wp.me/p9pLvW-5P 17-Aug-2018 4:36 pm
ராஜேஷ் லிங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2018 4:32 pm

பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என்
கையைப்பிடிச்சவளே...

செரட்டயப்போல என் காதலையும்
பொரட்டிப் போட்டவளே...

அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன
எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே..

தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன..
ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே...

சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு
வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி..

ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம்
ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச..

கெழக்கால போற கெழடுகட்ட கூட
வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச...

பாம்பக் கண்டாலும் பயிராத என்ன - ஏண்டி
பல்லாங்குழி ஆட வச்ச...

உப்பாத்த ஓடை போல மனசுக்குள்ள பாஞ்ச ஒன்ன
உப்பப்போல கரைச

மேலும்

கோட்டிக்காரி, கோட்டிக்காரன் போல மேலும் சில வார்த்தைகளை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பாம்படம் என்ற சொல் அங்கு வழக்கில் உண்டு. பாட்டிமார்கள் அணியும் கம்மல் போன்றது, ஆனால் கம்மலை விட மிகவும் பெரியதாக இருக்கும். அதை அணிந்து காதே ஊஞ்சல் போல நீளமாக தொங்கும். இது போல இன்னும் பல வார்த்தைகள் உண்டு. பாம்படம் என்ற சொல்லை மறந்தது சற்று வருத்தமளிக்கிறது. வீட்டின் முதல் அறைக்கு ஊரில் தார்சா என்று பெயர். சென்னி என்பது சுத்தமான தமிழ்ச்சொல். சிலப்பதிகாரத்தில் சென்னி என்ற சொல் பய்னபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னி என்றால் உச்சந்தலை என்று பொருள். சென்னியைப் பெயர்த்து எடுத்து விடுவேன் என்று திட்டுவது வழக்கம். இன்று அந்த சொல் வழக்கில் இல்லை. செடிசேத்தை என்றால், பாம்பிரணை போன்ற பூச்சிகளைக் குறிக்கும் சொல். ஊரில் பாம்பிரணையை, சாம்பிராணி என்றுதான் சொல்வார்கள். கோடி என்றால் புத்தாடை என்று பொருள். கோடி என்ற சொல்லும் புத்தாடை என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. ஈரக்கொலை என்றால் நெஞ்சு என்று அர்த்தம். ஒடங்காடு என்றால் கருவேலங்காடு. மூதேவி என்ற சொல்தான் சுருங்கி மூதி என்றாகி விட்டது. கறுக்குமட்டை என்றால் பனைமட்டை. 17-Aug-2018 4:38 pm
தூத்துக்குடியில் பிறந்த ஒருவன் காதல் கவிதை எழுதினால் எப்படியிருக்கும் இருக்கும் என்ற கற்பனைதான் இந்த கவிதை. தூத்துக்குடியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதை. தூத்துக்குடி, திருநெல்வேலி தவிர பிற ஊரைச் சேர்ந்தவர்களுக்கு சில வார்த்தைகள் சற்று கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன். அர்த்தம் புரியாத வார்த்தைகளைச் சொன்னால் விளக்கமளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். கவிதையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும். https://wp.me/p9pLvW-5P 17-Aug-2018 4:36 pm
ராஜேஷ் லிங்கதுரை - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2018 12:20 pm

பேய் இருக்க இல்லையா ?
நம்பலாமா நம்பக்கூடாதா?
இல்ல அது வருவதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கா?
இது என் மனதை வெகுநாளாக குடையும் கேள்வி....
பதில் எப்படிருந்தாலும் சரி ...

மேலும்

நம் எண்ணத்தை பொறுத்தே இந்த கேள்விக்கு பதில் அமைகிறது. 05-Aug-2018 7:00 pm
அப்படியா....... 24-Jul-2018 12:02 pm
ஊருக்குள் நிறைய பேய்கள் உள்ளன அரசியல்வாதி முதல் பேய் அவன் ஆட்டுவித்தது பலப்பேய் 19-Jul-2018 5:04 pm
சிறந்த விளக்கம் நன்றி.. 19-Jul-2018 2:44 pm
மாலினி அளித்த கேள்வியில் (public) Nathan5a854b1c08cea மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2018 3:47 pm

சங்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் பற்றிய புனைவுகள் நிறைய உள்ளதாக சொல்றாங்கோ...அது ஏன் அன்றே தமிழனால் உரு கொடுக்க முடியாமல் போச்சு...நுணுக்கமான தகவல் கிடைக்குமா?

மேலும்

அற்புதமான தகவல்கள் ...எதிர்பார்த்தத்துக்கும் மேலாக ....மிக்க நன்றிகள் 19-Jul-2018 9:57 am
எழுத்துப் பிழைகளைத் திருத்தும் முன்பே பதிலுரை பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. பிழைகளுக்கு மன்னிக்கவும். 18-Jul-2018 8:49 pm
இதில் பார்ப்பன எதிர்ப்பு எங்கிருந்து வந்தது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிவயோகி, திருமூலர் உடலில் புகுந்த பின்புதான் திருமூலருக்கு ஞானம் வருகிறது போல் கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். நான் இங்கு கவிஞர் சாரலன் கூறுவதற்கு மறுமொழி கூறவில்லை. பொதுவாக திருமூலர் பற்றிப் பரப்பப்பட்டு வரும் பொய்யான தகவல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எனது பதிலுரையை அமைத்திருக்கிறேன். மேலும் பார்ப்பனர் என்று அல்ல, ஒரு சாதியை தன்னுடைய சாதியை விட கீழான சாதி என்று கருதும் ஒவ்வொருவரும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள்தான், அவர்கள் எந்த சார்ந்தவர்களாக இருந்தாலும். மேலும் கடவுள்கள், சித்தர்கள் தொடங்கி சாதாரண மனிதர்கள் வரை பிராமணயமாக்குதல் என்று காலந்தோறும் நடந்து வரும் ஒன்றுதான். முருகன் குறவர் இனத்தை சேர்ந்தவன், அவனுக்கு ஏன் பூணூல் அணிந்தது போன்ற படங்கள் உருவாக்கப்படுகின்றன? சிவனுக்கு உருவமே கிடையாது என்பது நமது கோட்பாடு. ஆனால் சிவன் படம் உருவாக்கப்பட்டு அதற்கும் பூணூல் அணிவிக்கப்படுகிறது. பிள்ளையார் படத்தில் ஏன் பூணூல் ஏன்? தெரிந்தால் விளக்கவும்? ஆதிசங்கரர், ராமானுஜர் துவங்கி பாரதியார் வரை, சூத்திரர் என்று முத்திரை குத்தப்பட்ட பலரை பிராமணர்களாக மாற்றிய வரலாறு நமக்குத் தெரியும். மேலோட்டமாகப் பார்த்தால், நல்லது செய்தது போலத்தான் தெரியும். ஆனால் மறைமுகமாகப் பார்த்தால் இந்த சாதி மாற்றம் என்பது ஆதிசங்கரர், ராமானுஜர், பாரதியார் ஆகியவர்களின் மேல்சாதி மனநிலையையே காட்டுகிறது. அவர்கள் எல்லா சாதியையும் சமதளப் பார்வையோடு அணுகுபவர்களாக இருந்திருந்தால் அவர்கள் சூத்திரர்களாக மாறியிருக்க வேண்டும். சூத்திரர்களை பிராமணர்களாக மாற்றுவதென்பது, உயர்சாதி மனநிலையன்றி வேறில்லை. சாதி எதிர்ப்பு என்பது எல்லா மட்டத்திலும் தேவைப்படுகிறது. அதைப் பார்ப்பன எதிர்ப்பு என்று அந்த வட்டத்தை பெரியாரைப் போல நான் குறிக்கிக்கொள்ள விரும்பவில்லை. அதே போல் இன்னொரு முதன்மையான செய்தியையும் பதிவு செய்ய விரும்புகிறேன். எல்லா ஆரியர்களும் பார்ப்பனர்கள் இல்லை, அதேபோல் எல்லா பார்ப்பனர்களும் ஆரியர்களும் இல்லை. குறுந்தொகையில் "ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண்நெற் றொலிக்கும்." என்ற வரிகள் வருகின்றன. இது கயிற்றில் ஆடிப் பிழைப்பு நடத்தும் ஆரியர்களின் ஒரு பிரிவினரைக் காட்டுகிறது. ஆகவே ஆரிய எதிர்ப்பு என்றாலே பார்ப்பன எதிர்ப்பு என்ற பார்வை தவறு. 18-Jul-2018 8:45 pm
நிச்சயம் வாசித்து என் கருத்துக்களை சந்தேகங்களை பகிர்ந்து கொள்கிறேன். நன்றி... 18-Jul-2018 10:18 am
ராஜேஷ் லிங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2018 2:59 pm

நடுகல் என்ற முதல் கோயில்

இயற்கை வழிபாடுதான் உலகின் முதல் வழிபாடு அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மதத்தின் துவக்கம் என்பது அதுதான். இது எல்லோரும் அறிந்த உண்மைதான். நாம் சற்று முன்னோக்கி செல்வோம். அது மக்கள் குழுவாக வாழத் தொடங்கிய காலம். உணவுக்காகவோ, உறைவிடத்துக்காகவோ, பிற குழுக்களைத் தாக்க வேண்டிய கட்டாயம். அதில் வீரமாக சண்டையிட்ட மனிதர்கள் ஞாபகார்த்தமாக ஒரு கல் நட்டு வைக்கப்படும். அதன் பெயர் நடுகல்.

அங்கு வாழ்ந்த மக்கள் அந்த நடுகல்லினால் சில நன்மைகள் நடப்பதாக நம்பினார்கள். அதன் முடிவாக அந்தக் கல்லுக்கு சில வழிபாட்டு முறைகள் வந்து சேர்ந்தன. பின் போருக்கு செல்வதற்கு முன்பு அந்தக

மேலும்

ராஜேஷ் லிங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2018 12:49 pm

எழுத்துக்கள் இல்லாத மொழி

"பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit).

இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்

மேலும்

ராஜேஷ் லிங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2018 5:27 pm

இந்த பூமியில், தனது மரபணுவில் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்ட எந்த ஒரு உயிரினமும், தான் சுத்த சைவம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. மரபணுவில் சைட்டோப்ளாசத்தைக் கொண்ட தாவரங்கள் மட்டுமே, சூரிய ஒளியின் உதவியால் தனக்குத் தேவையான உணவைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள இயலும். மற்றபடி, மனிதர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் அசைவம் தங்கள் உணவில் சேர்வதைத் தவிர்க்க முடியாது.

யார் சைவம் கிடையாது?

காயம்பட்ட விரலை வாயில் வைத்து, ரத்தத்தைக் குடிக்கும் யாரும் சைவம் கிடையாது.

பாலைத் தயிராக்கிய கோடிக்கணக்கான பாக்டீரியாவையும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் யாரும் சைவம் கிடையாது.

மிருகங்களின் க

மேலும்

ராஜேஷ் லிங்கதுரை - ராஜேஷ் லிங்கதுரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2018 2:27 pm

உருட்டி வைத்த மைதா மாவு

அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால் நாம் குறைந்தது 10 முதல் 20 கோடி வருடங்களாவது பின்னோக்கிப் போக வேண்டியிருக்கும்.

10 முதல் 20

மேலும்

தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. 31-May-2018 12:44 pm
. சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :-தங்கள் போற்றுதற்குரிய படைப்பு தேர்ந்தெடுத்த எழுத்து தள குழுவினருக்கும் பாராட்டுக்கள் வரலாற்று ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பு :--விளக்கம் போற்றுதற்குரிய தகவல் களஞ்சியம் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 31-May-2018 1:50 am
ராஜேஷ் லிங்கதுரை - ராஜேஷ் லிங்கதுரை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2018 12:24 am

Corporate தாய்


ஆயா முகத்தில் நீ கண்விழிக்க...
அலுவலக வாசலில் நான் இருப்பேன்...

தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்...
தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்....

உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்...
உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்...

தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு...
தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு...

தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை...
முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை...

வீட்டுச்சுமை வேலைக்கு தள்ளியது என்னை...
வீட்டுக்குள்ளே அந்நியமாக்கியது உன்னை...

கருவில் சுமந்த உன்னை கையில் சுமக்க நேரமில்லை...
உயிரில் கலந்த உன்னை உச்சிமுகர காலமில்லை...

அலுவலகத்தில் இருந்தாலும் ஆசை நெஞ்சம் உன்னுடன்தான்...
கணினி முகம் பார்த்தாலும் என் கண் முழுதும் உன் உருதான்...

என் கண்ணீருக்குள் கலையாத காவியம் நீ... என் உயிருக்குள் கலந்த இன்னொரு உயிர் நீ...
நம் கடன்தீரும் நாள் ஒருநாள் வரும்...உனைக் கட்டியணைத்துக் கொஞ்சும் நாளும் வரும்...

காத்திரு மகளே... இந்த Corporate தாய்க்காக...

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சத்யா

சத்யா

Chennai
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
மேலே