கண்ணன் ம - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கண்ணன் ம
இடம்:  ஆத்தூர் , திண்டுக்கல்
பிறந்த தேதி :  04-Nov-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2018
பார்த்தவர்கள்:  932
புள்ளி:  126

என்னைப் பற்றி...

சிறகுகள் விற்பனைக்கு அல்ல ...

என் படைப்புகள்
கண்ணன் ம செய்திகள்
கண்ணன் ம - கண்ணன் ம அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2018 10:51 pm

“ ஆள் பார்த்து ...ஆள் பார்த்து ...
நீ அணியும் முகமூடி ...
நாள் பார்த்து வந்ததா ...?
இல்லை ....
நான் பார்த்ததால் வந்ததா....?

சித்திரத்தை பார்க்காத ...
நாளும் தான் எனக்கில்லை ...
சிங்கார சிரிப்பைத்தான் ..
காணாமல் தொலைவதில்லை ...

சொல்லாமல் வருவதில்லை ...
சொல்லித்தான் போவதில்லை ...
நீயும் தான் அருகே வந்தால் ...
எமக்கில்லை ஒருத்தொல்லை ...

நெத்தியிலே சிகப்பு நிலா ...
நீ சுமந்தா... வீதி ..விழா ....
கண்சிமிட்டும் பார்வையிலே ...
மன காயமெல்லாம் ஆறும் நல்லா....!

கருப்பு வானவில்லாய்...
புருவத்தை உயர்த்தையிலே ...
எச்சரிக்கும் அழகு கண்டு ...
எட்டி குதிக்கும் இதயமும்தான் ...
எங்க

மேலும்

கண்ணுக்குள் உன்னை நான் சுமந்திருக்கும் வரை என் வாழ்க்கையின் எக்கட்டத்திலும் தனிமையிலும் தோள் கொடுக்கும் நிழலாய் நீ வருகிறாய். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Jan-2018 7:20 pm
வாழ்த்துக்கள் !! 28-Jan-2018 11:05 pm
கண்ணன் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2018 9:42 pm

பன்முகம்கொண்டதொரு கார்பொரேட்க் காரணையெதிர்க்க

தனித்தனிமுகம்கொண்டதொரு பத்து கார்போராட்க்காரன் ஒண்ணாகிறான்..

எப்போதும் நடக்கும் முதலாளிச் சண்டையில் ...

யார்செயித்தாலும் உருளப்போவதென்னவோ ஏழைகளின் மண்டைதான் ....
--
பல ஜாலியில் வாழும் பதவிப் பைத்தியங்களுக்கிடையே

வலியையே வழியாய் சுமந்துவாழும் எம்மக்களே...

உண்மையான பலசாலி ...!!!!

மேலும்

கண்ணன் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2018 9:25 pm

இதழில்
சரி ..
கன்னத்திலுமா ...?
தேனெடுக்கும் முயற்சியில்
பட்டாம்பூச்சி

மேலும்

கண்ணன் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2018 9:17 pm
கண்ணன் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2018 10:34 pm

முக்கனியோ
எக்கனியோ
எமக்கொன்றும் வேண்டாம் ...
கணி னி ( கனி - நீ )
இருந்தால் போதும் ....!
எம்பொழுதெல்லாம்
வாழும் ...!

மேலும்

கண்ணன் ம - கண்ணன் ம அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2018 10:41 pm

தொலைந்ததை ...
தேடினேன்...
இன்னொன்று தொலைந்தது...
இரண்டையும் சேர்த்து தேடினேன் ...
மற்றோன்றும் தொலைந்தது ...

தேடுவதை நிறுத்திவிட்டு...
கண்ணாடியை பார்த்து கொண்டேன் ...

அப்பாடா ...
நான் இருக்கேன் ....

மேலும்

நன்றி ....நட்பே ... 17-Mar-2018 9:07 pm
யதார்த்தம் நட்பே ...............இவ்வுலகில் யாவும் நிலையற்றவை ............... 15-Mar-2018 12:17 pm
கண்ணன் ம - கண்ணன் ம அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2018 10:38 pm

இருப்பவன் ...
உண்ணும் ...
ஐந்து நட்சத்திர ஹோட்டல் ...

இல்லாதவன் ...
உண்ணும் ...
வான் நட்சத்திர ஹோட்டலின் முன் ...
தோற்றுப்போய்விடுகிறது ...


" இரவு நேர திறந்தவெளி....
நடை பாதை கடை "

மேலும்

இருப்பவன் ... உண்ணும் ... ஐந்து நட்சத்திர ஹோட்டல் ... இல்லாதவன் ... உண்ணும் ... வான் நட்சத்திர ஹோட்டலின் முன் ... தோற்றுப்போய்விடுகிறது ... " இரவு நேர ....திறந்தவெளி நடை பாதை கடை " "ஏழைகளின் ஸ்டார் ஹோட்டல் " 16-Mar-2018 8:24 am
கவிதை தலைப்பில் என்ன சொல்ல வருக்கிறீர்? 15-Mar-2018 10:56 pm
கண்ணன் ம - கண்ணன் ம அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2018 3:04 pm

பல ...
கெடுதல்களுக்கு நடந்தது ...
ஒரே ஒரு ...
நல்லதுக்கு நடக்கவில்லை ...

" சந்திப்பு "

மேலும்

உண்மையை உரக்கச் சொன்னீர்கள்... 11-Mar-2018 12:24 am
Nanri..puriyavaithatharkku 06-Mar-2018 4:13 pm
இ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் அவர்களை பாரத பிரதமர் பலமுறை சந்த்தித்து ( மறைமுகமாக )...கெயில் ..நியூட்ரினோ ..மீத்தேன், சூர்யா மின்திட்டம் ... போன்ற கேடுவிளைவிக்கும் திட்டங்களை தமிழகத்தில் செயல் படுத்தினார் ... ஆனால் இன்று , நீதிமன்றம் கூறிய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுகோள் விடுக்கும் அனைத்து கட்சி குழுவை சந்திக்க மறுக்கிறார் ... காரணம் ..கர்நாடக தேர்தல் ...அதைத்தான் கூறியுள்ளேன் .... 06-Mar-2018 4:12 pm
என்ன செய்வது தமிழகத்தின் நிலை அப்படி... பதவிகளின் நாற்காலிகள் நரிகளின் வசம் உள்ளபோது இரையைத்தானே எதிர்பார்க்கும் உயிரைக் காப்பாற்றவா நினைக்கும்... 06-Mar-2018 4:11 pm
கண்ணன் ம - கண்ணன் ம அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2018 10:25 pm

ராமர் கடவுளென ...
தமிழக ...
குழந்தைகளை நம்பவைக்க...
பலிகடாவானது ...

" ஒன்னும் அறியா ...வேலி ஓணான்கள் "






( ஓணானிடம் ராமர் தண்ணீர் கேட்டதாகவும் ...அதற்க்கு ஓணான் மூத்திரத்தை தந்ததாகவும் ... ஒரு புனையப்பட்ட கதை கிராமத்து சிறுவர்களிடம் பரப்ப பட்டு வந்தது ... அதன் விளைவு ...கடவுள் ராமர் என ஒப்புக்கொண்டு ...ஓணானை கல்லெறிந்து கொல்வதை பொழுது போக்காய் செய்து வருகின்றனர் ....)

மேலும்

நான் கடவுள் மறுப்பாளர் அல்ல ...குலதெய்வ வழிபாட்டை முழுமையாக நம்புபவன் .... (எத்தீஸ்ட் ப்ரிட்டன்ஷன்) 06-Mar-2018 4:05 pm
இயேசு நாதர் கூட மனிதர் தான் ...இயற்கையையும் , முன்னோர்களையும் காலம் காலமாய் வழிபட்டு வந்த நமது தமிழ் கலாச்சாரம் ...ஆரியர்களின் கடவுள் திணிப்பினை முழுமையாக ஏற்று கொண்டு ...நம் அடையாளத்தை இழந்து வருகிறது என்பதே ..நிதர்சனமான உண்மையாகும் .... ஆரியர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட மூட நம்பிக்கைகள் ஏராளம் என்பது தங்குளுக்கு தெரியாமல் இருந்துவிட போவதில்லை ... முன்பு ...ஆரியர்கள் என்ன சொன்னாலும் ஏற்று கொண்டு வாய்பொத்தி இருந்தோம் ... இன்று ...அவர்கள் செயல் படுத்தும் ஒவ்வொன்றும் துரோகத்தை பின்புலமாக கொண்டு செயல் படுவதால் ...எதிர்மறையான கருத்துக்கள் ஏராளமாக தோன்றுகிறது ... அதைவைத்தெல்லாம் ... பெயர் வாங்கும் அவசியம் எம்மக்கில்லை என்பதை தங்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் ... ராமர் கோயிலுக்காக எத்துணை கொலைகள் இந்தியாவில் விழுந்துள்ளது ...கேள்வி கேட்பவர்கள் எல்லாம் ...ஆன்டி இந்தியன் ஆக தெரிந்தால் ...அதற்க்கு நான் பொறுப்பல்ல .... கருத்துக்கு நன்றி சகோ ... 06-Mar-2018 3:59 pm
கம்பனின் இராமாயணம் படித்திருக்கிறீர்களா ? இராவணனை இராமன் போரில் வென்றபோது" மானுடம் வென்றதம்மா" என்று எழுதுகிறான் .ஏன் ? உலகம் யாவையும் படைத்தலும் காத்தலும் நீக்கலும்......அலகிலா விளையாட்டுடையான் அவர் தலைவர் என்று தெய்வ காவியமாக தன் நூலைத் துவங்கிய விருத்தக் கவிஞன் அரக்க அரசனை கவியத் தலைவன் மனைவியை வலுக்கட்டாயமாக அபகரித்துச் சென்ற கயவனை தேவன் வென்றதாகவோ தெய்வம் வென்றதாகவோ சொல்ல வில்லை . மானுடம் ---மனிதன் வென்றதாக சொல்கிறான். இராமாயணம் மனித காவியம் . எத்தீஸ்ட் ப்ரிட்டன்ஷன் கடந்த பல பத்தாண்டுகளாக பலருக்கு இங்கு பேஷனாகிவிட்டது . இதனால் ஓர் அறிவுஜீவித அடையாளம் கிடைக்கும் என்று போலிப் பாவனை செய்கிறார்கள் . இறை மறுப்போர்க்கும் இவர்கள் நன்றி யுடையவர்கள் இல்லை. மறை இறை ஏற்போர்க்கும் இவர்கள் நன்றி உடையவர்கள் இல்லை.இது வெறும் போலிப் பாவனையே ! இவர்கள் சிந்தனைக்கு இளைஞர்கள் இரையாகாமல் இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவனே காக்க வேண்டும் . 05-Mar-2018 7:33 pm
அந்த பழமொழியை தான் நான் மாற்றி கூறியுள்ளேன் ...சகோ ... 05-Mar-2018 3:15 pm
கண்ணன் ம - கண்ணன் ம அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2018 1:49 pm

கை கால்முளைத்த போது ...
சிற்பமாகவும் ...
கண்முளைத்த பின்
தேவதையாகவும் மாறியது ...


!...கல் ...!

மேலும்

பார்க்கும் கண்களின் சிறப்பு தான் அழகியல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 8:12 pm
ஓரு கல்... சிறப்பு... 16-Feb-2018 2:17 pm
கண்ணன் ம - கண்ணன் ம அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2018 9:23 pm

" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

அன்பால் ...
புட்டிப்பாலை ...
தாய்ப்பாலாக்கிய ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

நிமிந்த மார்பை சுருக்கி ...
தாய் மடிக்கு இணையாய்...
தோள்மடியில் சுமந்த...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

வந்த நகசுத்தியை...
பலமுறை சுத்தி ...
காயத்தை மாயமாக்கிய ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

விழும் நிழல் ...
சுவற்றில் மோதுவதை பார்த்து ...
பதறி எழுந்து துடித்த ...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

எதை கேட்டாலும் ...
முடியாது எனும் வார்த்தையை ...
முகத்திற்கு பின் கூட ...
சொல்லாத...
" என் அப்பா ...
எனக்கு அம்மா ..."

அடித்த

மேலும்

தாய் தந்தை போல் மண்ணில் யார் வருவார். கஷ்டம் என்னவென்று அறியாமல் வளர்த்தவர்கள் கஷ்டம் படுவதைப் பார்த்து பிள்ளை மனம் என்றும் ஏங்குகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 6:36 pm
மகிழ்ச்சி..... 31-Jan-2018 6:50 am
இதுக்குமேல சொல்றதுக்கு எதுவும்மில்லை. உங்கள் விருப்பம் . 30-Jan-2018 11:36 pm
தாயுமானவரை விட கடவுள் பெரிதல்ல.. .... நீங்களும் சிந்திக்க சகோதரி....... 30-Jan-2018 10:32 pm
கண்ணன் ம - தமிழ் பித்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2018 9:43 am

மூன்று முழம்
மல்லிகை கேட்போருக்கு
முக்கால் முழம்
புன்னகையும் சேர்த்து கட்டுகிறாள்
பூக்கடையில் ஓர் இளவரசி.

வேடமில்லா புன்னகைக்கு
விலை தர இயலாமல்
கடன் சொல்லி போகின்றனர்
வாடிக்கையாளர் யாவரும்.

பூக்கள் வாங்கினால்
புன்னகை இலவசமோ?

புருவம் சுருக்கி
இல்லையென்று தலையசைத்து
ஏதோ நினைத்தவளாய்
மீண்டும் சிரிக்கின்றாள்.

பையில் காசின்றி
உதடுகளில் குறுநகையுடன்
அவளை கடந்து போகின்றேன்.

மேலும்

நன்றி தோழர். 29-Jan-2018 9:49 pm
அருமை நட்பே.... 29-Jan-2018 9:42 pm
உண்மையான வரிகள் தோழர். 29-Jan-2018 8:34 pm
நன்றி தோழர். 29-Jan-2018 8:34 pm
மேலும்...
கருத்துகள்

மேலே