எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கழியும் வாழ்நாளெல்லாம்
என் கடைசி ஆசை இதுவென்றே
தினமொரு ஆசையோடு
மனிதனின் பயணம்
என் தொலைதூர பயணத்தில் கண்களுக்கு தென்பட்ட பாதையும் நீதான் பாதியில் என்னை தள்ளி விட்ட பாறையும் நீதான் ....... பார்த்து கொண்டே இருக்கிறேன் ..... பத்திரமாய் தூக்கி விடுவாயா என்று .......
பேசினால் கேட்பதற்கு யாருமில்லை
சிரித்தாள் பேசுவதற்கும் யாருமில்லை
பார்த்தவர்கள் பைத்தியம் என்று கல்லால் அடித்தார்கள் .... எனக்கும் அப்படித்தான் தோன்றியது பைத்தியக்காரர்கள் பைத்தியத்தின் சந்தோசத்தையும் நிலைக்க விடுவதில்லை ....
நான் மட்டுமல்ல
நெருங்கிய அத்தனை உறவுகளும்
என்னை போல் தான் ...
தான் நேசிப்பவரை
தான் நேசிப்பது போல்
தன்னை மட்டும் ...
அவர் நேசிக்க வேண்டுமென்கிற
சுயநலம் இருக்கத்தான் செய்கிறது
இயல்பான பட்சத்தில்
செலுத்துவதும் எதிர்பார்ப்பதும்
அன்பென்கிற பொழுது
சுயநலமும்
சுவையாகத்தான் தெரிகிறது ...
கேட்டதோ படித்ததோ நானறியேன் ஆனால் பிடித்தது :
தவறை செய்தவனும் நீதி கேட்கிறான்
நல்லதை செய்தவனும் நீதி கேட்கிறான்
கண்கள் மூடிய நீதி தேவதையின் முன் நீதியும் வழங்கப்படுகிறது
விட்டு கொடுத்து போவதால் மட்டுமே நீதிகள் அனைத்தும் நடு நிலையாக்கப்படுகிறது .... உண்மைகளால் அல்ல
ஒவ்வொருவரும் ஒருவரைப்பற்றி குறை சொல்வதென்றால் கிளம்பி விடுகிறார்கள் ... குறை சொல்வது தவறில்லை அதற்கு நாம் தகுதியானவர்கள் தானா என்பதை யோசிப்பதே இல்லை ....
வாழ்கையின் பாதையில்
தேடல்கள் யாவும் அனுபவமாகிறது !
அனுபவத்தின் முடிவில்
நிலைக்கும் நிஜங்கள் யாவும்
நினைவுகளாகிறது!
நினைவின் தவிப்பில்
வலி தரும் பிரிவும் ,சுகமும்
அரிதாரம் பூசியபடியே
அடுத்த பிறவியிலும் மாறுதலடைகிறது ....!
இதில் நிஜமெது? பொய் எது ?
கேட்டதில் பிடித்தது ...
எல்லையில்லாத அன்பென்று எதுவும் இல்லை .... நிறைய பேர் சொல்கிறார்கள் அவன் /அவள், அவர்கள் மேல் எல்லையில்லாத அன்பை வைத்துவிட்டேன் மறப்பதற்கு முடியவில்லையென்று ஆனால் அது உண்மையில்லை குறிப்பிட்ட ஒரு எல்லையின் மீது அன்பு வைத்தால் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் இருந்து விட நேர்கிறது மறப்பதற்கு முடியாமல் ....
எல்லைகளை தகர்த்தெரிந்தால் எல்லாம் சாத்தியமே ...
படித்ததில் பிடித்தது ..............
வாழ்க்கையில் ஒருவரை விட நாம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒன்றை செய்வதை விட உனக்கு தெரிந்த ஒன்றை சிறப்பாக செய் நடக்க வேண்டியது நிச்சயம் நடக்கும் ....
நெஞ்சங்களின் வாழ்த்துக்கள்
இடைவிடாமல் இசைத்துக்கொண்டிருக்கும்
இனிய திருநாளில் ..
பூக்களின் உதவி தேடாமல்
வார்த்தைகளின் உதவி நாடியே
நானுமொரு வாழ்த்துரைக்க வந்துள்ளேன் ...
வண்ணங்கள் வீசியே
வந்ததொரு நாள்
சத்தங்கள் நீட்டியே
நரகாசூரன் வதைக்கப்பட்ட நாள்
குயிலும், மயிலும்
சிங்காரச்சோலையும்
சிற்றின்பம் காணும்
தீபத்திருநாளாம் தீபாவளித்திருநாளில் ,
எண்ணங்கள் உயிர்ப்பித்து
ஏற்றத்தாழ்வுகள் முறியடித்து
வளமான தேசத்தை
உருவாக்கும் முயற்சியில்
பாதைகள் மாற்றியே
புதியதொரு பொன்னாளாய்
புகையில்லா நன்னாளாய்
புன்னகையோடு கொண்டாட
இயற்கையோடு நானும் விரும்பியே
வாழ்த்துகிறேன் ... (...)