எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இதை பார்த்ததும் தோன்றும் கருத்துகளை இங்கு பதிவு செயுங்கள்
ஒரே வயிற்றில் பிறந்த நால்வரயும் ஒரு மனிதன் கடையில் இருந்து வாங்கி அதில் ஒன்றை உடைத்து சமைத்து சாப்பிட்டுவிட்டான்.மீதி மூன்று முட்டையும் அது இறந்த கவலையிலும் ,தாங்களும் அவ் மனிதனால் கொள்ளப்படுவோமே என்ற கவலையிலும் உள்ளது .
ஹா ஹா ஹா ஹா ஹா ........ 26-Aug-2014 12:48 am
நல்ல நண்பர்களின் குழு ! 27-Jul-2014 6:26 am
சாலை விபத்து-ப்ரியன்.............
அச்சச்சோ என்ன ஆச்சோ
ஆயுளும்தான் முடிஞ்சி போச்சோ?
வரும்போதே வேகமா வந்தான்
வளச்சி நெளிச்சி ஓட்டியாந்தான்:
தலைக்கவசம் போட்டிருந்தாலாவது
தப்பிச்சிருக்கலாமே பேராபத்திலிருந்து:
இவன நம்பி எத்தனை பேரோ
இனி யார் அவர்களை காப்பாத்துவாரோ?
(நன்றி : படம் + இந்த கவியை கிறுக்க ஊக்குவித்த Bnsha) 27-Jul-2014 1:12 am
குற்றம் இழைக்காத
அப்பாவிக்கைதிகள்
அணி வகுத்து நிற்கிறார்கள்
கொடிய மரணத்துக்காய்.
24-Jul-2014 9:23 pm
இதனை பார்த்தவுடன் உங்களுக்கு தோண்டுரும் கருத்தை பதிவு செய்யவும்
நன்று
19-Jul-2014 4:25 pm
காமம் கடந்த ஞானத்தின்
காதல் ஒன்று
இதயத்தின் வழியே
இசைக்கருவி மீட்டியது.....!
பார்வை வழி ஸ்பரிசத்தில்
இது மோன நிலையோ?
முக்தி நிலையோ? 19-Jul-2014 7:15 am
மீசை நரையுண்டும்
ஆசை நிறையுண்டு.
உன் எதிர்விசையில் மீண்டது
என் முகச்சுருக்கம்.
கொத்து கொத்தாய்
ஆசை பூத்தாலும்
என் சொத்து நீதானம்மா.....
19-Jul-2014 5:22 am
முகத்தில் முகம் பார்த்து
அகத்தில் அகம் சேர்த்து
இளமை வழிந்தோடி
முதுமை வழி தேடி
வளர் காதல் வாழும் என்றும்! 19-Jul-2014 3:19 am
இதனை வைத்து யாராவது சிறு கவிதை எழதுங்கள்
அருமை 13-Jul-2014 1:02 pm
நன்று 13-Jul-2014 12:27 pm
காதல் சுமை - ப்ரியன்
வானம்
விளக்கு அணைத்தால்
வரச்சொன்னாய் பதில்பெற
ஆறுமணிக்கு :-)
நீ வருவதற்க்குள்...
காத்திருப்புகள்
கனமாய் தோன்றுது
உலகையே நான் சுமப்பதாய்
ஆறு ஐந்திற்க்கே:-(
(நன்றி: இந்த கவியை கிறுக்க ஊக்குவித்த Bnsha) 12-Jul-2014 2:19 pm
வெட்டி எறிந்த போதும்
விட்டு விலக வில்லை
அன்னையின் பசாம் :) 12-Jul-2014 1:00 pm