பெருவை கிபார்த்தசாரதி- கருத்துகள்

இசைவும் இருக்கும் இனிக்கும் கவிதை
அசைசீரில் ஆழ்ந்த அழகு

சொல்லின் அலங்காரம் சாற்றும் சுவைபட
பல்லோர் விரும்பும் படி

உங்கள் பதிவால் உளமும் மகிழ்ந்திட
எங்கள் பதிலும் இனிது

ஈற்றடியை இப்படியும் கொள்ளலாம்..

பதைக்கின்ற பாவினம் பார்

பதைக்கவைக்கும் பாவினம் பார்

தொடருங்கள், நன்றே தொடருங்கள், அருமையாகச் சொன்னீர், நானும் புதுக்கவிதை எழுதுபவரைக் குறைசொல்லவில்லை, எழுத எழுத கவிதைகள் ஊறும், ஆனால், மரபு வகைக்கு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு கவிதையின் கீழே பாவினத்தின் பெயரை ஒரு சிலர் குறிப்பிடுவது மிகவும் தவறு என்பதை நான் ஆமோதிக்கிறேன்.

அதேபோல, அடுக்குச் சொல்லை அடுக்கடுக்காக அடுக்கி, ஒரு வரிக்கும் இன்னோர் வரிக்கும் இடைவெளிவிட்டு, இரண்டாம் வரியின் ஈற்றுச் சொல்லுக்குபின் இடைக்கோடிட்டால், அது வெண்பா இலக்கணமாகி விடும் என்று சிலர் வெண்பாவைச் சிதைக்கின்றார், சொன்னால் சீறுகின்றார்..முறையாக இலக்கணம் பயிலாமல், வரிசையில் அடுக்கியதை விருத்தம், வெண்பா என்றெல்லாம் பதிவிடும்போது, அதையும் இலக்கணம் அறியாத சிலர் பாராட்டுகின்றார்.. என்ன சொல்வது, எப்படிப் புரிய வைப்பது. தொடருங்கள் உங்கள் முயற்சியை விடாதீர்...

எதையும் சரியாக ஏற்றுக் கொளாமல்
சிதைத்த தமிழின்நற் சீரைப் - புதைத்தார்
வதைக்குமவர் பாக்கள் வனைந்த தெலாமும்
பதைக்குதய்யா பாவினம் பார்

நேரிசை வெண்பா

பெருவை கி.பார்த்தசாரதி

சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, கம்பர் இவ்வாறுக் கூறுவார். "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்...என்றாராம் கம்பர்...

வெண்ணெய்நல் லூர்கொடுத்த வள்ளல் சடையனை
எண்ணத்தில் என்றுமே ஏற்று.!

வெண்ணெய்நல் லூர்கொடுத்த வள்ளல் சடையப்பர்
எண்ணத்தில் என்றுமே ஏற்று.!

குறிப்பு:: சடையப்ப வள்ள்லை, வெண்ணெய்ச்சடையன் என்றே கமபர் தன்பாடல்களில் குறிப்பிடுகிறார்.

கருத்துரைக்கு நன்றி மரபுக் கவிஞரே

நன்றி அய்ய நற்றமிழ்ப் பாவலரே

மூத்தோர்சொல் செவிமடுத்தும்
மதிக்காத இளைஞர்கள்
கூத்தாக நினைத்ததாலே
கொரோனாவும் தாக்கியதே
தாத்தாசொல் கேட்டுப்பின்
அதையொழுகி நடந்திடவே
பூத்தமலர் போலென்றும்
புவிதனிலே மகிழலாமே.!
===============
*கலிவிருத்தம்*
===============

புலனத்தில் இன்றைக்கு வருவதெல்லாம், பண்டைக் கலாச்சாரத்தைப் போற்றுகின்ற வகையிலே, சுத்தம் சோறு போடும் என்பதற்கேற்ப, அன்றாடம் பின்பற்றிய அனைத்தும் நமக்கு நன்மை பயக்கும் என்பதாகவே வலம்வருகிறது.

வீதியில் சென்று வந்தால் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு கை, கால் சுத்தம் செய்வதிலிருந்து வாசலில் சாணி தெளிப்பது வரை அனைத்தும் கிருமிகளைக் கொல்லும் என்கிற மிகப்பெரிய தத்துவத்தை இன்றுதான் உணர்ந்தது போல கட்டுரைகளும், கவிதைகளும், ஹைக்கூவும், துளிப்பாவும் வெளிவருகின்றன.

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

அடைந்திருக்கும் துன்பம் அளவிலை.! சற்றே
விடைதரக் கூடும் விரைந்து.!

குறள் வெண்பா

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

சரணடைய வைக்கும் சதி.
=======================

சதித்திட்டம் போட்டவர்கள் சைனாவே தானே
விதியும் அவரை விடாத - கதிதான்.!
பரந்த மனதில்லா பாழும் மனிதா
சரணடைய வைக்கும் சதி.!

நேரிசை வெண்பா

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

மலர்ச்சோலை மகிழ்விக்கும்....

அலப்பரையது மனிதரையது ஆட்கொண்டது அன்று..!
உலகளவிலே விரவிடுமிது உயிர்க்கொல்லியாம் இன்று ..!
பலபறவையும் விலங்கினமுமாய் பலவுயிரின வாழும்..!
மலர்சோலையு மானாலது மகிழ்வாக்குது நாளும்..!

கனி = கனி = கனி = தேமா

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

கடந்த வருடங்களில், வேறொரு தளத்தில் என் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறேன்.. ஞாபகம் வைத்துக்கொண்டதற்கு நன்றி அய்ய

அய்யா நான் வேறொரு தளத்தில் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறேன்.. புத்தாண்டில் தங்களின் ஆசி கிடைத்ததய்யா..நன்றி இனி தொடருவோம்..

கல்லும் கனியும் கனிந்த விழியாலே
சொல்லை உதிர்த்தால் சிறப்பு...

குறள் வெண்பா

ஆர்ப்பரிக்கும் கட்டழகில் ஆணழகன் கார்முடியும்

கூர்அம்புப் பார்வையழ கூட்டுமே.! - பேர்சொல்லப்

பார்த்திடத் தோன்றும் பரவச மூட்டுமாம்..!

*ஈர்த்திடும் தாடி இனிது*

=============================
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
=============================


பெருவை கிபார்த்தசாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே