சுப்ரபாதம்

காலைகளில்
சுப்ரபாதம் கேட்டு
எழுவதில்லை
அவன்..
காம்பவுண்டு சுவரில்
வந்து கீச்சென்று
தினமும்
கத்தி எழுப்பும்
தேன் குரல்
பறவையின் ஒலி
கேட்டே எழுவது
வழக்கம் ..
வீடு மாறிப் போகிறோம்
என்றது நேற்று அது ..
மனம் மட்டும்
மாறாதாம்..
இனி என்ன கவலை ?

எழுதியவர் : பால கங்காதரன் (15-Feb-15, 5:44 pm)
பார்வை : 94

மேலே