இதயத்தின் அழகே காதலின் அழகு

மலர்களே
மறைந்து விடுங்கள் ....
என்னவளின்
அழகில் வாடிவிடுவீர்கள்...!!!

நட்சத்திரங்களே
ஓடிவிடுங்கள் ...
என்னவளின் கண்
சிமிட்டலில் ஒளியை இழந்திடுவீர்

தென்றலே
வீசுவதை நிறுத்து ....
என்னவளின் ....
மூச்சு காற்றில் காணாமல் போயிடுவீர்.....!

பனிதுளிகளே
சிந்துவதை நிறுத்துங்கள்...
என்னவளின் ....
வியர்வை துளியில் மறைந்திடுவீர் ....!

குயில்களே
பாடுவதை நிறுத்துங்கள் .....
என்னவளின் ...
குரலில் ஓசையில் இழந்திடுவீர்...!

மயில்களே
தோகை விரிப்பதை நிறுத்துங்கள் ....
என்னவளின் ....
கூந்தல் அழகில் சிக்கி தவிப்பீர்கள் ...!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Aug-15, 11:37 am)
பார்வை : 88

மேலே