புரியாதவனா -நீ

என்னவனே ....
நாமாக இருந்த நாம் ...
நானாக தனிமையில் ....
இருக்க வைத்தவனே ....
தனிமை கொடுமை ...
புரியாதவனா -நீ ....?

என்னை சுற்றிலும் ....
ஒரு ஒளிவட்டம்போல் ....
இருப்பதெல்லாம் ....
உன்னை பற்றிய எண்ண ....
அலைகளே .....!!!

உன் வருகைக்காக ....
காத்திருக்கும் என்னை ....
அருவிபோல் அழ வைத்திடாதே ....
நீ வருவாய் அருகில் மீண்டும் ...
அமர்வாய் - என் கண்கள் ....
உன்னை தேடியபடியே
ஏங்கிக்கொண்டிருக்கும் ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Mar-16, 7:58 pm)
பார்வை : 71

மேலே