மனிதனிடம் கற்றது

அடுத்தவர் மோதிட வேடிக்கையாய்
அதனைப் பார்த்தே ரசித்திடுவான்,
தடுத்திட வராமல் தள்ளிநின்று
தூண்டி விடுவான் அரசியலில்,
அடுத்தே அவனிடம் வளர்ந்ததாலே
அந்த குணமே கோழிகட்கும்,
தடுக்கும் எண்ணம் இல்லாமல்
தொடர விட்டிடும் சண்டையையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Mar-17, 7:31 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 86

மேலே