கடனும் கணிதமும்

பள்ளியில் பயிலும் போது
கணித வகுப்பில்
கடன் வாங்கி கழித்தல்
பயிற்சியின் போது
கடன் வாங்க தெரியாமல்
விழித்தும்
சில நேரங்களில்
வாங்கிய கடனை மறந்து விட்டு
விடையை தவறாக எழுதி
ஆசிரியரிடம்
நம்மில் பலரும்
அடிவாங்கி இருப்போம்...!!

ஆனால்
வாழ்க்கை என்னும் பள்ளியில்
குறைந்த வருமானத்தில்
குடும்பம் நடத்தும்
சூழ்நிலையில் சிலரும்
வரவுக்கு மீறிய செலவு
செய்வதினால் சிலரும்
கடன்களை
அஞ்சாமல் வாங்கி
குவித்து விடுகிறார்கள்...!!

பின்னாளில்
வாங்கிய கடனை
அடைக்க முடியாமல்
பலரும் திண்டாட்டம்
அடைகின்றார்கள்.

முதலில் இந்த பிரச்சனை
சில இடங்களில்
அடிதடி சண்டையில்
தொடங்கி, பின்னர்
நீதிமன்ற வழக்காக மாறி
வாழ்க்கையே துயரத்தில்
முடிந்து விடுகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Sep-22, 8:51 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 196

மேலே