பல்விளக்கத் தக்க கொம்புகள் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வேலுக்குப் பல்இறுகும் வேம்புக்குப் பல்துலங்கும்
பூலுக்குப் போகம் பொழியுங்காண் - ஆலுக்குத்
தண்டா மரையாளுஞ் சாருவளே நாயுருவி
கண்டால் வசீகரமாங் காண்!

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

கருவேலினால் பல்லுக்கு உறுதியும் வேம்பினால் ஒளியும் நீர்ப்பூலாவினால் வீரிய விருத்தியும் ஆலினால் லட்சுமி கடாட்சமும் நாயுருவியால் முகவசியமும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-23, 9:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே