பழனி குமார் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பழனி குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Oct-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2012
பார்த்தவர்கள்:  17769
புள்ளி:  10836

என்னைப் பற்றி...

என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.

கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு

" உணர்வலைகள் "

என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .

கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு

" நிலவோடு ஓர் உரையாடல் "

எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..

எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .

என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.

http://www.tamilrasiganpalanikumar.com

நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .

என் படைப்புகள்
பழனி குமார் செய்திகள்
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2025 7:57 am

விளக்கேற்றி வைத்தும்  
ஒளியிழந்து கிடக்கிறது ஏ
ழையின் வயிறு !

அரைகுறை ஆடையில் 
அரங்கேற்றம் வீதியில்வ
றுமையின் விளிம்பு  !

நேற்று பழமுதிர் சோலை 
இன்று சகாரா பாலைவனம் 
அரசியல் கட்சி மாநாடு !

காலையில் ஆரத்தழுவுதல்  
மாலையில் கீழே தள்ளுதல் 
அரசியல் விளையாட்டு !

காத்துக் கிடக்கின்றனர்
 நடுநிசியில் பசி துறந்து 
மறுநாள் முதல் காட்சி !

காலையில் சொற்பொழிவு 
மாலையில் சொற்சோர்வு
உபயம் மது மயக்கம் ! 


பழனி குமார் 

மேலும்

பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2025 7:57 am

விளக்கேற்றி வைத்தும்  
ஒளியிழந்து கிடக்கிறது ஏ
ழையின் வயிறு !

அரைகுறை ஆடையில் 
அரங்கேற்றம் வீதியில்வ
றுமையின் விளிம்பு  !

நேற்று பழமுதிர் சோலை 
இன்று சகாரா பாலைவனம் 
அரசியல் கட்சி மாநாடு !

காலையில் ஆரத்தழுவுதல்  
மாலையில் கீழே தள்ளுதல் 
அரசியல் விளையாட்டு !

காத்துக் கிடக்கின்றனர்
 நடுநிசியில் பசி துறந்து 
மறுநாள் முதல் காட்சி !

காலையில் சொற்பொழிவு 
மாலையில் சொற்சோர்வு
உபயம் மது மயக்கம் ! 


பழனி குமார் 

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2025 6:34 pm

விழி வழியாய் 

வழியும் விழிநீர் 
மீண்டும் திரும்பாது  
வந்த  வழியும் தெரியாது 
காரணம் புரியாது 
கண்ணீரும் தவித்திடும் !
செந்நீராக மாறாமல் 
நிலையறிந்து தடு‌த்திடும்  !

ஆதரவற்ற பலருக்கும்  
காதலில் தோற்றிடும் 
உண்மை உள்ளங்களுக்கும் 
பொருந்தும் இவ்வரிகள்  !   

மேலும்

பழனி குமார் - எண்ணம் (public)
22-Sep-2025 6:34 pm

விழி வழியாய் 

வழியும் விழிநீர் 
மீண்டும் திரும்பாது  
வந்த  வழியும் தெரியாது 
காரணம் புரியாது 
கண்ணீரும் தவித்திடும் !
செந்நீராக மாறாமல் 
நிலையறிந்து தடு‌த்திடும்  !

ஆதரவற்ற பலருக்கும்  
காதலில் தோற்றிடும் 
உண்மை உள்ளங்களுக்கும் 
பொருந்தும் இவ்வரிகள்  !   

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2025 8:48 am

ஊசலாடும் உயிராக 

ஊரார் தவிக்கையில 
ஊரெங்கும் சுற்றிவருது 
உண்மையோ இடமின்றி 
வாழ்ந்திட வழியின்றி 
பொய்யோ வலம்வருது 
பொய்கையில் நீராடுது !
வாய்மையோ வறண்டது 
வாழ்ந்திட  வழிதேடுது  !
ஏங்குகிறது  எதிர்காலம் 
வளரும் தலைமுறையை 
எண்ணி வருந்துகிறது !

பழனி குமார் 


மேலும்

பழனி குமார் - எண்ணம் (public)
09-Sep-2025 8:48 am

ஊசலாடும் உயிராக 

ஊரார் தவிக்கையில 
ஊரெங்கும் சுற்றிவருது 
உண்மையோ இடமின்றி 
வாழ்ந்திட வழியின்றி 
பொய்யோ வலம்வருது 
பொய்கையில் நீராடுது !
வாய்மையோ வறண்டது 
வாழ்ந்திட  வழிதேடுது  !
ஏங்குகிறது  எதிர்காலம் 
வளரும் தலைமுறையை 
எண்ணி வருந்துகிறது !

பழனி குமார் 


மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2025 10:34 pm

சிந்திக்கும்
திறனிருந்தும்
படித்தவர்்
பலரும்
பாமர
மக்களும்
பார்வை
இருந்தும்
பயணிக்கும்
பாதை
சரியென
நினைத்து
முன்னோர் மீது
பழிகூறி
மூட நம்பிக்கையில்
மூழ்கி இருப்பது
விஞ்ஞான
உலகில் விந்தை !

விண்வெளியில்
மனிதன்
தங்கிடும்
அறிவியல்
காலத்தில்
இதை காணும்
போது சிரிக்க வைக்கிறது !

ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில் !

பழனி குமார்

மேலும்

மிக்க நன்றி ஐயா . 24-Jul-2025 5:33 am
மூடநம்பிக்கைகள் காலத்தை வென்று நிற்க திரைத் துறையைப பயன்படுத்துகிறாரகள். ஆராய்ச்சிக் கூடங்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை முடிவில் @@@@@ அருமை. வாழ்த்துகள் கவிஞரே. வாட்சப்பில் மூன்று குழக்களில் பகிர்ந்துள்ளேன். 12-Jul-2025 10:43 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2023 8:54 pm

எவரொருவர் வாழ்விலும்
எல்லையிலா ஆனந்தம்
என்றென்றும் நிலைத்து
எதிரிகளென எவருமின்றி
எந்நாளும் வாழ்வாராயின்
எச்சரிக்க ஒன்றுமில்லை
எடுத்துகூற தேவையில்லை !

எஞ்சியுள்ள வாழ்க்கையில்
எதேச்சதிகாரம் கைவிட்டு
எதிர்பார்ப்பைத் துறந்தால்
எதிர்விளைவும் இருக்காது
எட்டிக்காயும் இனித்திடும் !

எதிரொலிக்கும் மனதினில்
எண்ணாதீர் வாழ்நாளை
எரிமேடைதான் இறுதி !
எதிர்வரும் காலத்தில்
எதிர்கொள்க எதனையும் !!!


பழனி குமார்
11.09.2023

மேலும்

மிக்க நன்றி ஐயா 11-Nov-2024 7:01 am
தங்கள் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது. கற்றோர் அனைவரும் நல்ல எண்ணம் கொண்டிருந்தால் உலகையே மாற்றிவிடலாம். எதேச்சதிகாரம் அதிகாரம் இருக்கும் இடத்தில். அரசியலில் நுழைவதற்கு ஒரு தேர்வு இல்லையே. 02-Nov-2024 9:00 pm
மிக்க நன்றி ஐயா , தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும் 13-Sep-2023 8:07 am
எ யில் துவங்கும் சொற்களின் இலக்கியம் எரிமேடைதான் இறுதி ! எதிர்வரும் காலத்தில் எதிர்கொள்க எதனையும் !!! -----அருமை பாராட்டுக்கள் 12-Sep-2023 5:07 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2023 7:41 am

பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !


பழனி குமார்
08.09.2023

மேலும்

தங்கள் வாழ்த்தால் என் உள்ளம் மகிழ்கிறது . 11-Sep-2023 8:48 pm
ஐயா , தங்கள் வாழ்த்துதல் என் இதயம் மகிழ்கிறது . சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி . 11-Sep-2023 8:47 pm
எதிர்பாரா மரணங்கள் ! எதிர்நீச்சல் பழகிடுங்கள் எதையும் தாங்கிடுங்கள் ! இயற்கையின் வழியில் தொடர்வோம் வாழ்வை ! ---இரங்கல் கவிதையிலும் சிறந்த அறிவுரை பாராட்டுக்கள் 11-Sep-2023 2:47 pm
மேலும்...
கருத்துகள்

மேலே