கீர்த்தனா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கீர்த்தனா
இடம்:  Norway
பிறந்த தேதி :  07-Oct-1967
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Jan-2013
பார்த்தவர்கள்:  461
புள்ளி:  90

என் படைப்புகள்
கீர்த்தனா செய்திகள்
கார்த்திகா அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2014 3:22 pm

சிறகு உதிர்த்த இறகொன்று
சுமக்க முடியாத பிரிவின்
கனத்துடனான கல்லறைத்
தடங்களாய் உன் சுவடுகள்

நிராசையாகிப் போன
ஆசைகள் புதையுண்ட மண்ணில்
மறக்க முயலும் உன்மீதான மையல்,
அவை முட்டி எழும் விதை மொட்டுக்கள்
சில மாற்றங்களின் வித்துக்கள்

மரணங்களில் பதியனிடப்பட்ட
கல்லறைச் செடிகளில்
பூத்துக் குலுங்கும்
புது மலர்கள்
சாவின் வாசம் அறியாதவை

இறப்பின் கரங்களில்
தவழும் மலர்கள் உறங்கும்
இதயங்களுக்குச் சொந்தமாவதில்லை

துணையிழந்து போனதற்காக
அச்சமில்லை எனக்கு
இணையென்ற சொல்லுக்கு
அர்த்தம் நீயுமில்லை

உன்னில் விரும்பித் தொலைத்த
என்னைப் பிரித்தெடுத்து
தொலை

மேலும்

வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே!! 19-Oct-2014 4:52 pm
மீண்டும் நீயற்ற நானாகப் பிறந்திட வழிவிடு!! அருமை... 19-Oct-2014 12:32 pm
மிக்க நன்றி தோழி... 18-Oct-2014 8:18 am
வலிகள் மிக அருமை !! 29-Sep-2014 4:05 pm
கீர்த்தனா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 10:28 am

நந்தவனத்தின் சிறப்பு
மலர்கள்
மலர்களின் சிறப்பு
மங்கையர் கூந்தல் !
----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கீர்த்தனா ----அன்புடன், கவின் சாரலன் 08-Sep-2014 9:47 pm
மிக்க நன்றி ஜின்னா ----அன்புடன், கவின் சாரலன் 08-Sep-2014 9:46 pm
அருமை சார்! 07-Sep-2014 8:46 pm
நன்று அய்யா... 03-Sep-2014 6:36 pm
கீர்த்தனா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2014 10:23 am

வான் சிறப்பு
மழை !
பூமியின் சிறப்பு
பசுமை !

-----கவின் சாரலன்

மேலும்

வான் சிறப்பு வள்ளுவர் ஓலையில் எழுதினார் பூமியின் சிறப்பை நாம் பசுமையால் எழுதுவோம் ====கவின் சாரலன் 31-Aug-2015 3:52 pm
மிக்க நன்றி கீர்த்தனா ---அன்புடன், கவின் சாரலன் 08-Sep-2014 9:44 pm
ஆமாம் உண்மை, அருமை சார் ! 07-Sep-2014 8:44 pm
மிக்க நன்றி ஜின்னா ----அன்புடன், கவின் சாரலன் 04-Sep-2014 6:47 pm
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2014 8:42 pm

எத்தனை அழகாய்
பிரபஞ்சம் படைத்தான்!
இத்தனை நிறங்கள்
கண்ணுக்கு விருந்தாய்!
காண்பதெல்லாம் கனவல்ல
கண்முன் அதிசய ஓவியமாய்!

பட்டாம்பூச்சிச் சிறகின் நேர்த்தி!
பட்டுப்பூவின் இதழின் நேர்த்தி!
வண்ணமயிலின் துள்ளும் ஆட்டம்!
நீலக் குயிலின் இனிமைப் பாட்டு!
பச்சைக் கிளியின் கொஞ்சும் பேச்சு!
மிதக்கும் வெண்ணாரைக் கூட்டம்!

தலையசைத்தாடும் தென்னங்கீற்று!
தடையின்றிப் பாயும் வெள்ளியருவி!
தொங்கி மிதக்கும் வெண்பஞ்சு மேகம்!
பொங்கி நுரைக்கும் நீலக் கடல்!
வெண்மணல் பரத்திய அழகிய கரை!

ஓங்கி உயர் மரகத மலைகள்!
மாருதம் வீசும் மருத நிலங்கள்!
இரவினை ஆளும் நிலா மகராணி!
இவளினைச் சூழ்ந்து நட்சத்திரத் தோழ

மேலும்

இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) RamVasanth மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Sep-2014 11:43 pm

உங்களில் சிலருக்கு
கவிதையும் கதையும்
எழுதுவது என்பது
பொழுதுப்போக்கு..!
அல்லது
உணர்வுக்கு மருந்து.,

எனக்கோ...!
பெரும் அவமானங்களை
சந்தித்து, வாழ்வை வெறுத்து
இலட்சிய வெறிப்பிடித்து
ஓரே ஒரு சரித்திர
வெற்றியை வேட்டையாட
துடித்துக்கொண்டிருக்கும்
சராசரிக்கும் மேலான
காட்டுமிராண்டி எழுத்தாளன்.

“பைத்தியம்” என்றுகூட
எனை அழைத்துக்கொள்ளுங்கள்.
வருத்தப்பட எனக்கு நேரமில்லை .


## ஒரு நாள் ஒரு விரக்தியில் எழுதிய வரிகள் இவை. ஆனாலும் இவ்வரிகளில் நான் இருக்கிறேன் என்பதே உண்மை. ..!

மேலும்

மிக்க நன்றி கீர்த்தனா அவர்களே 07-Sep-2014 10:58 am
நன்றி நன்றி அண்ணா. அவமானங்கள்.. வெற்றியின் உரங்கள்.! நம்பிக்கைக்கு நன்றி அண்ணா! 07-Sep-2014 10:57 am
நன்றி அம்மா.. வலி அதை குறைக்க வழி தேடியாச்சு மா 07-Sep-2014 10:56 am
நன்றி நன்றி நண்பா.`! 07-Sep-2014 10:55 am
கீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2014 5:04 pm

நம்பிக்கைப் பெருவெளி கடந்து -அங்கே
எங்கோ அமாவாசை இருள்வெளி!!
நட்சத்திரப் புள்ளி ஒன்று வெகுதூரமாய்
ஒளி மின்னலாயும் ஒளித்தும்
தெளிவற்றுப் பார்வையில்!!!

கனத்த இருள் சாகரத்தில்
மெதுவாய் கரைந்தபடி தேடலின் வீரியம்!!
சந்தியாகாலப் புஷ்பங்கள் முகிழ் விரிப்பதென்னவோ
சந்தோசத் தருணங்களின் எதிர்பார்ப்புடன்...

விந்தையோ இல்லை விதியோ
சிந்தையில் நிறைவு சில கணம் கூட
சிலருக்கு நிலைப்பதில்லை!

கலங்கிய சித்தம் காணாமற் புதைத்து
கலந்து விடு வானில்.. யாருக்கேனும்
கனவுக் கூடு நிஜமாய்க் கட்ட உந்தன்
கனிந்த நெஞ்சத்து நட்சத்திர ஒளிப்புள்ளி
கரம் கொடுக்கும் பேறு பெற்றிருக்கலாம்!

---கீர்த்தனா---

மேலும்

மிக மிக நன்றி நட்பே.. தொடர்வேன் தங்கள் போன்றோர் ஊக்குவிப்புடன்... 05-Sep-2014 3:48 am
மிகவும் நன்றி தோழமையே! சிலருடைய கனவுக்கூடுகள் மட்டும் எவ்வளவு முயற்சித்தாலும் கட்டமுடியாமலே போய்விடுகின்றது. அந்த விரக்தியில் புதைந்து போகாமல் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்று இன்னொருவரின் கனவுக்கூட்டை நிஜமாக்க உதவும் பேறு பெற்றிருந்தால் உதவ வேண்டும், என்று உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை இந்தப்படைப்பில் வெளிப்படுத்தி இருக்கிறேன். எளிதல்ல என்பது தீர்ப்பல்ல சிலரால் எளிதாக கட்டவும் முடிகிறது. 05-Sep-2014 3:47 am
மிகவும் நன்றி தோழமையே! 05-Sep-2014 3:27 am
அருமை நட்பே... வாழ்த்துக்கள்.. தொடருங்கள்... 04-Sep-2014 6:49 pm
கீர்த்தனா - கீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2014 7:20 pm

கூட்டிக் கொள் கூட்டிக்கொள்...
பெற்றோரிடம் பாசம் நுகரும் நேரத்தினை!
வாசிப்புச்சுவாசிப்பின் அளவுகோலை!
மனிதம் கொழிக்கும் நல்மனதை!
மாண்புடன் நடக்கும் நன்மதிப்பை!
இயற்கையை காக்கும் விழிப்புணர்வை!
ஒளவை சொல்லிய நன்னெறியை!
ஐயன் சொல்லிய பாடங்களை!
இன்னும் இனியவை ஆயிரத்தை!

இனிக் கழிக்கின்ற பொருள் சொல்வேன்...
கனிவுடனே நீயும் கேள்!!
ஹார்மோன்கள் ஆட்டி வைக்கும்
இளவயது உடல்மாற்றம்!
விடம் போல குடியேறும்
மனதினிலே தடுமாற்றம்!
தடம் மாறும் எண்ணங்கள்
தடை தாண்ட இடம் தேடும்!
விடாது கருப்பு என
தொடத் துடித்து உனைத் துரத்தும்!
அடாத சகவாசம்
அடங்காமல் உனை அழிக்கும்!
விட்டுவிடாதே மொத்

மேலும்

வருகை தந்த அனைத்து நண்பர்களுக்கும் அன்புடன் நன்றி! 30-Aug-2014 11:20 pm
மிகவும் நன்றி தோழமையே ! 30-Aug-2014 11:19 pm
அருமையான சிந்தனை 30-Aug-2014 5:00 pm
மிகவும் நன்றி தோழமையே! :) 29-Aug-2014 11:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

மலர்91

மலர்91

தமிழகம்
சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி
Piranha

Piranha

Chennai
சபீக்ஷனா

சபீக்ஷனா

மும்பாய் பூர்வீகம்- மாதகல
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (44)

Irfan u.s

Irfan u.s

chennai
Vicky Vandiperiyar

Vicky Vandiperiyar

திருவனந்தபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (44)

Vicky Vandiperiyar

Vicky Vandiperiyar

திருவனந்தபுரம்
mythilisoba

mythilisoba

chennai
மேலே