செஞ்சூரியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செஞ்சூரியன்
இடம்:  தமிழ் தேசம்
பிறந்த தேதி :  12-Jun-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Sep-2012
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  14

என்னைப் பற்றி...

நான் ஒரு ஏழை விவசாயி என்பதை தவிர எனக்கு அடையாளம் எதுவுமில்லை .

என் படைப்புகள்
செஞ்சூரியன் செய்திகள்
செஞ்சூரியன் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2015 10:09 am

சிட்டுகுருவி திங்கநெல்லு இல்லை – சிறு
பட்டுப்பூச்சி தங்கஇடமும் இல்லை !
ஆட்டுமாட்டு கூட்டத்திற்கும் இங்கே – வெறும்
கட்டாந்தரை தவிர ஏதும் இல்லை !

மரமும்நீரும் அழிந்துபோகும் முதலில் – நல்ல
மீனும்உப்பும் ஒழிந்துபோகும் கடலில் !
மனிதன்என்ற மிருகத்தின் வெறியில் – இந்த
மாண்புமிக்க உலகம் அழியும் கதியில் !

காசுதேடி சொத்துதேடி ஓடி – இங்கு
மாசுபட்டு கிடப்போர்கள் கோடி !
கூசும்குணம் எள்ளளவும் இன்றி – பொய்
பேசும்மனம் படைத்தோரும் கோடி !

யுத்தம்செய்து கெட்டுப்போனார் பாதி – காம
மத்தம்கொண்டு செத்துப்போனார் மீதி !
மொத்தமாக ஊரையுண்டு வாழும் – பேடி
எத்தர்களின் ஆட்சியில் தான் பூமி !

மேலும்

மண்ணில் கால்பதித்து விண்ணில் புது உலகம் தேடும் மனிதனில் அற்புதமான புவியிலுள்ள புத்தனை அறியாது. வளங்கள் எல்லாம் செல்வங்களாக மாறிய மனதில் தினம் தினம் கொலை புரிகிறான் புத்தனை. புத்தனாக எனக்கொரு புவி வேண்டும். அற்புதமான பார்வை பதிவு. அருமை தோழரே 13-Aug-2015 12:09 pm
மண்ணில் கால்பதித்து விண்ணில் புது உலகம் தேடும் மனிதனில் அற்புதமான புவியிலுள்ள புத்தனை அறியாது. வளங்கள் எல்லாம் செல்வங்களாக மாறிய மனதில் தினம் தினம் கொலை புரிகிறான் புத்தனை. புத்தனாக எனக்கொரு புவி வேண்டும். அற்புதமான பார்வை பதிவு. அருமை தோழரே 13-Aug-2015 12:00 pm
மனதின் ஆதங்கம் நெருப்பாய் எரிகிறது. வரிக்கு வரி சாட்டையடி. அழுத்தம் திருத்தமான வார்த்தைகள் படைப்பை முழுமையாக்குகிறது. தீ பரவட்டும்.அழுக்கை எரிக்கட்டும். சுகம் மலருட்டும். 16-Jul-2015 6:52 pm
இரண்டு வருடமாக நீயும் புத்தனாக வேண்டும் என்றுதான் எழுதிக் கொண்டிருக்கிறாய். என்ன செய்வது உன்னால் ஆக முடியாது. இப்படி புலம்பத்தான் இயலும். //டெல் தெம்.... ஐ வில் கில் தெம்...!// இப்படி எல்லாம் கொல வெறியில் இருந்தா எப்படி புத்தனாவே..?? இந்த கொலைவெறியோட புத்தனாக வேண்டும் என்று நீ கூறினால் புத்தன் கூட துப்பாக்கியைத் தூக்கி சுட ஆரம்பிச்சிடுவான். 08-Jun-2015 8:51 pm
செஞ்சூரியன் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 6:09 pm

வீடுவிட்டுக் காடுபோக வேண்டும் – அங்கே
விருந்துபல உண்டுமகிழ வேண்டும்
கூடுவிட்டு ஆவிப்போகும் முன்னே – நான்
கொள்ளையெழில் கண்டுமகிழ வேண்டும் !

கிண்ணத்து மதுவென்று மயக்கும் – சின்ன
வண்ணத்துப் பூச்சிகள் வேண்டும் !
வண்டோடும் விட்டிலோடும் கலந்து – நான்
கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும் !

நதிதொட்டு வருகின்ற தென்றல் – என்
நலம்கேட்டுக் குளிர்விக்க வேண்டும்
வான்விட்டு வந்தந்த நிலவு – என்
வாலிபத்தை தீமூட்ட வேண்டும் !

தென்றல்தொட்டு நழுவுகின்ற தூறல் -என்
முன்றல்வந்து கோலம்போட வேண்டும்
செடிமுகத்தில் சிரிக்கின்ற பூக்கள் – சுக
சேதிகேட்டு வாய்மலர வேண்டும் !

சாரல்தரும் ஏழுநிறம் போது

மேலும்

அழகிய கவிதை.... 10-Jun-2015 3:08 pm
மிக அருமையாகவும் அழகாகவும் இருக்கின்றது, வாசிக்கும்பொழுதே சந்தத்தேனின் இனிப்பு அமுதம்போல் இனிக்கின்றது. அய்யா அகன் அவர்கள் கூறியதைப்போல்... இதாற்குமேல் என்னச் சொல்வதென்று தெரியவில்லை. அருமையான கவிதை. 08-Jun-2015 3:51 pm
சில சந்தங்கள் ஓசை நடையில் ஒத்துவரின் ஏற்புடையதென்பது வழுவமைதி அல்லவா ??? இப்படிப்பட்ட வழுவமைதிகளெல்லாம் மறந்துபோய்விட்டது எனக்கு!! அமைதிக்காகப் புறக்கணிக்கப்படுபவை வழுவல்ல என்பதும் யானறியா ஒன்று. 08-Jun-2015 10:05 am
தந்தனத்தான் தந்தனத்தான் தானா - தந்த சங்கதிகள் அத்தனையும் தேனா மந்தநிலை மாய்ந்துபோகும் மன்னா - நீ சொல்ல வந்த பாதைவழி போனா அசத்தல் கவிதை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 08-Jun-2015 6:35 am
செஞ்சூரியன் - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2014 7:54 am

நாவலன் தீவென்று நற்பெயர் கொண்டு
நாற்திசையும் நன்புகழ் வென்ற
குமரிக் கண்டம் காப்பதற்கு
காவலன் யாருமில்லையென்று
நீ காவு வாங்கினாயோ
ஏ....கடலே.!


ஏழுதெங்க நாடு ஏழுமதுரை நாடு
ஏழுமுன்பலை நாடு ஏழு பின்பலை நாடு
என்றெல்லாம் எம் தமிழர் ஆண்ட
நாற்பத்தொன்பது நாடுகளையும்
நாசகரமாய் வயிற்றில் போட்டாயே
உன் பசி அடங்கியதா சொல்
ஆழ்கடலே.!


பாய்ந்தோடி நிலமெங்கும்
பயிர் செய்த "பறுளி"யாற்றையும்
குன்றில் பிறந்து குவளயம் தவழ்ந்து
குலம் காத்த "குமரி"யாற்றையும்
நீ குடித்துப் போனாயே
நீலக் கடலே.!


நெடுவானம் தொட்டுப் பார்த்து
நெடுநாட்கள் உயர்ந்து நின்ற
"குமரிக்கொடு" மலையையு

மேலும்

அருமை நண்பரே....! 19-Sep-2014 8:31 am
உங்கள் வருகையும் உங்கள் ஆசையும் மகிழ்வு நன்றி தோழரே 26-Aug-2014 8:49 pm
குமரி கண்டத்தின் அழிவே தமிழ் இனத்தின் பேரழிவு, அதன் பிறகுதான் தமிழன் தனது இருப்பை இழந்துவிட்டான். குமரி கண்டம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்து இருந்தால், இந்த மொத்த உலகிற்கும் பேரரசனாகவும். வல்லரசனாகவும் தமிழன் மட்டும்தான் இருந்து இருப்பான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (குமரி கண்டத்தை எண்ணும்பொழுது, மீண்டும் ஒரு பூமி சுழற்சி வந்து, மீண்டும் இமயம் நீரில் மூழ்கி குமரி வெளியில் வராதா என்ற ஒரு மாய ஆசைகூட மனதில் தோன்றுகிறது. சொல்ல முடியாது தோழரே... உலகம் போகிற போக்கைப் பார்த்தால், நன்னீர் .03 என்ற அளவில் மட்டும்தான் இருக்கறது என்று கூறுவதை பார்த்தால், உலக வெப்பத்தின் தாக்கத்தையும் வறட்சியையும் பார்த்தால், அடுத்த உலகப் போர் தண்ணீர் காகத்தான் என்பதை நினைத்துப் பார்த்தால்,... கடலை இவர்கள் நன்நீராக்கியே குடித்துவிடுவார்களோ என்று தோன்றுகிறது. அதனால் அப்பொழுது கடலும் வற்றிவிட்டால் குமரி கண்டம் வெளியே வந்துவிடாதோ என்றுகூட வினோத எண்ணம் மனதில் முளைக்கத்தான் செய்கிறது. (இயற்கையின் சீற்றத்தால் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்தானே தோழரே.....)... 49 நாடுகளை ஆண்ட தமிழனுக்கு, உலகில் உருவான முதல் மனித இனத்திற்கு, உலகெங்கும் பறந்து வாழ்கிற பெரிய இனமான 12 கோடிக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒரே ஒரு நாடுகூட இல்லையே என்பதுதான் மிகுந்த வருத்தமான விடயமாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது. ஆனால் தமிழ் இனத்திற்கு மட்டும் நாடு இல்லை, தமிழனின் மிகப்பெரிய நாடு இந்திய பெருங்கடலுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கிறது. குமரி கண்டத்தில் தமிழனின் தொன்மையான வரலாறு அழிந்தது போக, மீதி இன்னும் இருக்கிறது. மூழ்கிப்போன லெமுரியாவின் (குமரி கண்டத்தின்) எஞ்சிய ஒரு சிறு பகுதியான இலங்கை தமிழனின் பூர்வீக நாடாக இருந்தது. அதுதான் தமிழனுக்கான தன்னாட்சிகொண்ட தமிழ்நாடாக திகழ்ந்தது, ஆனால் அங்கேயும், ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம் என்பதைப்போல், ஒண்டி பிழைக்க வந்த சிங்களவனை பாவமென்று சோறு போட்டு அடைக்கலம் தந்ததற்கு, அவன் தமிழனையே அழித்துவிட்டான். குமரிக்கண்டத்தை பற்றி நியாபகமூட்டியதற்கு மிக்க நன்றிகள் தோழரே... 25-Aug-2014 10:54 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே 25-Aug-2014 9:35 am
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) agan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-May-2014 12:06 pm

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்..!

தளத்தில், சிறுகதைகள் எழுதும் தோழர்களுக்கு,ஒரு நல்ல வாய்ப்பு..!

தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் போடி-மாலன் அறக்கட்டளை இணைந்து,சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப் படுகிறது.!

சிறுகதைகள் எத்தனைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

கதைகளை தெளிவான கையெழுத்தில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.அல்லது மின் அஞ்சலிலும் அனுப்பலாம்.

தேர்வு செய்யப் படும் முதல் மூன்று இடங்கள் பெற்ற கதைகளுக்கு, எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில், கவுரவமான பரிசுத் தொகையும் உண்டு.

அனுப்ப வேண்டிய முகவரி-

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை

மேலும்

வணக்கம் தோழமையே..! நலமாக இருக்கிறீர்களா.? விடுகையில் மின் அஞ்சல் முகவரி அனுப்பியுள்ளேன். கிட்டவில்லையெனில், தெரிவியுங்கள்.மீண்டும் அனுப்பி வைக்கிறேன்.! வாழ்த்துக்கள்.! 07-Jun-2014 8:32 pm
தகவலுக்கு நன்றி தோழரே .மின்னஞ்சல் முகவரி அனுப்புவீர்களா . 07-Jun-2014 12:55 pm
மிக்க நன்றி தோழர் சரவணா..! நலம்தானே..? 04-Jun-2014 1:11 pm
அருமை... !! நல்ல பதிவு. 04-Jun-2014 9:32 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
yathvika komu

yathvika komu

nilakottai
agan

agan

Puthucherry

இவர் பின்தொடர்பவர்கள் (4)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
yathvika komu

yathvika komu

nilakottai
agan

agan

Puthucherry

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே