தமிழ் மகள் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் மகள் |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 19-May-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 368 |
புள்ளி | : 31 |
தமிழ் எனது பெயரில் முதல் பாதி அந்த தமிழின் மகள் நான் ஆதலால் எனது பெயர் தமிழ்மகள்.இது என் தந்தை சொன்னது.!!
பாண்டிய நாட்டில் பிறந்தது
இந்த
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!!
அவன்
பூக்களின் புதல்வன்
தாவரங்களின் தோழன்
கருப்பு வைரம்
சூரியனை செரித்தவன்
புதுக் கவிதையின் ஆணி வேர்..!!
தமிழின் காவலனே
நீ
கற்பனை சிறகேறி
கனவுலகை அளந்தவன்
தென்றலை துணைக்கழைத்து
முக்காலத்திலும் சுற்றியவன்
அலைகளின் முதுகேறி
தொடுவானத்தை தொட்டவன்..!!
உன்
விரல் எழுதாத
பாடு பொருளுண்டோ
குரல்
முழங்காத கவியுண்டோ..!!!
இந்த
காற்று மண்டலமெங்கும்
ஒலிக்கிறது உன் கானம்..!!!!
உன்
காதல் கீதங்கள்
இளைஞர்களின் தேசியகீதம்
சோக கீதங்கள்
கண்ணீருக்கு மருந்து
தத்துவங்கள்
வாழ்க்கையின் வழிகாட்டி..!!!
மலர் அழகு
வரலாற்றை தின்று செறித்த
கறையானுக்கு தெரியும்
கன்னித்தமிழில் எழுதியதால்
பனை ஓலையும்
கற்கண்டாய் இனித்ததென்று..!!
மறத் தமிழனை கண்டால்
மதக்களிறு மண்டியிடும்
வேங்கை வெகுண்டோடுமென்று..!!!!
அன்று
வாளும் உறையுமாய் தமிழர்கள்
அதோ அந்த இமயம்
தமிழ்க் கொடியை தாங்கி நின்றது
இதோ இந்த வங்காள விரிகுடா
தமிழெல்லையாய் படர்ந்திருந்தது..!!!!
இல்லையென்ற குறையின்றி
அள்ளி கொடுத்து வாழ்ந்தனர்..!!!
இன்று
இரைத் தேடிப் போன
பறவைகளைப் போல பிரிந்துள்ளோம்
நம் கோட்டையிலே
நரிகள் ஊளையிடுகிறது...!!!
ஓநாய்கள் வேட்டையாடுகிறது
தமிழ் சிங்கங்ககளை
பூனைகள் விரட்டுகிறது
புலியை விரட்டி
காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!
தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!
புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!
குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!
வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!
சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!
நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!
காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!
உன் மார்பில் மு
பரபாவ வருடம்
தை திங்கள் ஏழாம் நாள்
பிரமன் தீட்டினான்
உமா என்றொரு
உயிர் ஓவியத்தை ..!!!
புரிந்து பேசுவதில் தோழி
அறிவை புகுட்டும் ஆசான்
அன்பு கொள்வதில் அன்னை
கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சை குளிர வைக்கும்
குழந்தை குணமவளுக்கு..!!!
என் சகோதரியவளுக்கு
இன்று பிறந்த நாளாம்..!!!!
கவியெழுதி வாழ்த்திட
கம்பனை அழைத்தேன்
கம்பனோ
கற்பனையில் சிக்காத
கவிதையவள் என்றான்..!!!!
பூத்தூவி வாழ்த்திட
பூப் பறித்தேன்
பூக்களோ
புன்னகை பூ பூக்கும்
பூங்காவனமவள் என்றது..!!!
முத்துமாலை தொடுத்து வாழ்த்திட
முத்தெடுக்க போனேன்
முத்தோ
முழுமதி நிறத்தழகி
முத்து பல்லழகியவள் என்றது..!!!
தெம்மாங்கு பா
நண்பர்கள் (16)
![கவிநிலவு](https://eluthu.com/images/userthumbs/f2/snkjx_23733.png)
கவிநிலவு
Doha, Qatar
![மலர்91](https://eluthu.com/images/userthumbs/f2/njhbc_22173.jpg)
மலர்91
தமிழகம்
![Gujay](https://eluthu.com/images/userthumbs/f2/eropw_21251.jpg)
Gujay
pazhaiyar
![Santha kumar](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
Santha kumar
சேலம்
![செல்வா பாரதி](https://eluthu.com/images/userthumbs/f2/cyobi_22770.jpg)