எழில்வேந்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  எழில்வேந்தன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2015
பார்த்தவர்கள்:  531
புள்ளி:  30

என்னைப் பற்றி...

கவிஞர், ஆராய்ச்சியாளர் , வழக்கறிஞர், சமூக ஆர்வலர். அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியலில் முனைவர் பட்டம், அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம், சட்டவியலில் இளம்கலை பட்டமும் பெற்றுள்ளேன்.

' பாதையோரத்துப் பாரிஜாதங்கள்’
' வெளிச்ச விழுதுகள் ' என்னும் இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிடப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தையொட்டி புது டில்லியில் இந்திய அரசு நடத்தும் ' தேசிய பன்மொழிக் கவியரங்கத்தில் ' பங்கேற்க 1995ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்க் கவிதையாக 'ஆலமரம்' தேர்ந்தெடுக்கப் பட்டது. (ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு கவிதை மட்டுமே). இக்கவிதை பதினெட்டு தேசிய மொழிகளில் இந்திய அரசால் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

'மங்கையராய்ப் பிறப்பதற்கு', 'ஆலமரம்' , 'நதி' ஆகிய கவிதைகள் பஞ்சாபி மற்றும் கன்னட மொழிகளில் கன்னட சாகித்திய அகாதமி, பஞ்சாபி சாகித்திய அகாதமி ஆகியவற்றால் மொழி பெயர்த்துள்ளன.

பன்னாட்டு பல்கலைக் கழகங்களும் கலை இலக்கிய அமைப்புகளும் நடத்தும் உலக மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கங்களிலும் மாநாடுகளிலும் ஆராய்ச்சி உரைகள் நிகழ்த்தி வருகிறேன். அனைத்துவகை ஊடகங்களிலும் என் படைப்புகளும் பங்கேற்பும் தொடர்ந்து வருகின்றன. மனித உரிமைகள், பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகவியல் ஆகிய தளங்களில் என் பார்வையும் பணியும்.

என் படைப்புகள்
எழில்வேந்தன் செய்திகள்
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2015 1:12 pm

பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப

மேலும்

காற்றின் பக்கங்களில் ****கவிதைகள்..கவிதைகள்..! நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும் ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி... 31-Aug-2015 6:20 pm
அன்புள்ள கவித்தா சபாபதி, தங்கள் கவிதை 'காற்றின் கவிதைகள்' 3 பத்திகளில் அமைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பத்தியிலும் அளவடிகள் (4 சீர்கள் கொண்டது) ஐந்து உள்ளன. ஐந்தாவது அடி 3 பாட்டிலும் தனித்து பொதுவாக வருகிறது. எனவே ஒவ்வொரு பாடலையும் முதல் 4 அளவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கலிவிருத்தம் என்று வருகிறது. பூக்கள் மணமெழுத புல்லாங்குழல் இசையெழுத ஈக்கள் எதுகையிட இலைகள் மோனையிட கீற்று தவிப்பெழுத கிளிகள் பேச்செழுத ஊற்று சிலிர்ப்பெழுத உயிர்கள் மூச்செழுதும் காற்றின் பக்கங்களில் கவிதைகள் கவிதைகள்! ஐந்தாவது அடியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒரு உதாரணம் தருகிறேன். நான் இத்தளத்தில் நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று முதல் பாடல்: அனைத்து பாடல்களும் கழிநெடிலடியாக ஆறு சீர்களில் அமைந்த 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும். 4 சீர்கள் - அளவடி; 5 சீர்கள் - நெடிலடி 6 சிர்களும் அதற்கு மேலும் - கழிநெடிலடி ஐந்தாவது அடியும் ஆறுசீர்கள் - தனியாக 'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை' என .பொதுவாக ஒவ்வொரு பாடலிலும் அமைந்திருக்கும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் 1 அன்புடன், வ.க.கன்னியப்பன் 29-Aug-2015 9:43 pm
இயற்கை யாவும் இசைந்து இசைக்கிறது உங்கள் கவி தனில் சந்தங்களினால்... கவிதை கண் முன்னே யாவையும் உணரச் செய்கிறது... அருமையான படைப்பு... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கவிதை படைப்புகள்.. 29-Aug-2015 5:48 pm
தாங்கள் இக்கவிதைப் பற்றிய ஆய்வை பகிர்ந்தால் மகிழ்ச்சியுடன், ஆவலுடன் கண்டு பயனுறுவேன் ஐயா 29-Aug-2015 11:45 am
எழில்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 11:18 pm

இருட்டில் பிறந்தவளே,
எங்கே இருக்கின்றாய்.

அன்பிற்கினிய எங்கள்
அருமை மகள் சு(த)ந்தரியை
அடைத்து வைத்துள்ளார்கள் என்று
உன்னைப் பெற்றவர்கள்
என்னிடம் பிராது கொடுத்துள்ளார்.

பத்திரிக்கை விளம்பரத்திற்குப்
பணம் காசு இல்லை என்று
ஏழைகளின் வழக்கறிஞன்
என்னிடத்தில் வந்துள்ளார்.

நீ
சுகப் பிரசவத்திலா
சுடர் முகம் காட்டினாய்.?

கருவறையில் கொடி சுற்றக்
கட்டுண்டு கிடந்தாயே.
உன்னை விடுவித்த மருத்துவச்சிகள்
இங்கே விலா நோக குமுறுகின்றார்.

நீ
ஈன்றவரை நோக்கி என்றேனும்
எழுந்தோடி வருவாய் என
அதீத நம்பிக்கையுடன்
ஆவலாய் இருந்தாராம்.

வருடங்கள் தானே வந்து போயின
நீ வரவில்லையே.
உன்னைப் ப

மேலும்

மிக சிறப்பான படைப்பு தோழரே... நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 12:58 am
அழகான கவிதை ஆழமான பாடுபொருள் 16-Aug-2015 9:42 am
எழில்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 10:16 pm

இருட்டில் பிறந்தவளே,
எங்கே இருக்கின்றாய்.
அன்பிற்கினிய எங்கள்
அருமை மகள் சு(த)ந்தரியை
அடைத்து வைத்துள்ளார்கள் என்று
உன்னைப் பெற்றவர்கள்
என்னிடம் பிராது கொடுத்துள்ளார்.

பத்திரிக்கை விளம்பரத்திற்குப்
பணம் காசு இல்லை என்று
ஏழைகளின் வழக்கறிஞன்
என்னிடத்தில் வந்துள்ளார்.

நீ
சுகப் பிரசவத்திலா
சுடர் முகம் காட்டினாய்.?

கருவறையில் கொடி சுற்றக்
கட்டுண்டு கிடந்தாயே.
உன்னை விடுவித்த மருத்துவச்சிகள்
இங்கே விலா நோக குமுறுகின்றார்.

நீ
ஈன்றவரை நோக்கி என்றேனும்
எழுந்தோடி வருவாய் என
அதீத நம்பிக்கையுடன்
ஆவலாய் இருந்தாராம்.

வருடங்கள் தானே வந்து போயின
நீ வரவில்லையே.
உன்னைப் பெற

மேலும்

எழில்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2015 11:22 pm

கண்ணீர் சிந்தாதே
கைவசமில்லை கைக்குட்டை
கவிதைப் பூக்களை அனுப்புகிறேன்.

மேலும்

அருமை தோழா 07-Sep-2015 5:49 pm
நன்று நண்பரே தொடரவும் 11-Aug-2015 1:32 am
எழில்வேந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2015 11:20 pm

பாலை வனத்திலும்
பார்வையில் தெரியும்
குளிர் நிலா.

மேலும்

உண்மைதான் தோழரே.. பார்வையின் சிறப்பே அதுதான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 12:37 am
எழில்வேந்தன் - தர்ஷ்னா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 11:38 pm

முன்னுரை முடிவுரைக்கு மாற்று வார்த்தைகள் எவை?... அல்லது அதே பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டா..???

மேலும்

நன்றி தோழரே... 13-Aug-2015 11:31 pm
தாங்கள் கூறியிருப்பது சரி தான்.. நூலாசிரியர் முன்னுரை எழுதுவார்.. மற்றொரு இலக்கியவாதி அந்நூலுக்கு முகவுரை எழுதுவார். 13-Aug-2015 12:42 am
தோழியே ! ' பீடிகை' என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.... 1) முகவுரை 2) பீடம் 3) பூந்தட்டு 4) தேர்த்தட்டு 5) அரியணை 6) கடைத்தெரு 7) அணிகலச்செப்பு 8) முனிவர் இருக்கை 13-Aug-2015 12:25 am
எனக்கு சிறு சந்தேகம் வந்துவிட்டது சகோதர சகோதரியே...... நாம் நூல் எழுதுகிறோம் என்றால் அந்நூலின் தொடக்கத்தில் நாம் எழுதுவது முன்னுரை எனவும் நம் நூலுக்காக வேறொருவர் விமர்சனம் போல் எழுதுவது முகவுரை எனவும் நான் நினைத்திருந்தேன்.... அது சரியா ? தவறா ?... மேலும் "பீடிகை"என்பதன் பொருள் என்ன? கூறுங்களேன் 10-Aug-2015 10:47 pm
எழில்வேந்தன் - எழில்வேந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2015 12:39 pm

அய்யா, நீங்கள்
அக்கினிக் குஞ்சுகளை
அடைகாத்த சூரியன்
நாங்களோ
மின்மினிகளுக்காக ராத்திரியானவர்கள்.

நீங்கள் பேசத் தொடங்கினீர்கள்
ஆயிரம் வால்ட் பல்புகளாய்
இதயங்கள் எல்லாம் பிரகாசமடைந்தன.
நாங்கள் ஆயிரம்
பல்புகள் எரிந்தால்தான்
பேசவே வருகிறோம்.

நீங்கள் தமிழ்க் குடும்பத்தின்
தந்தையாய் இருந்தீர்கள்
நாங்கள்
அவரவர் குடும்பத்தின்
அப்பாவை இருப்பதிலேயே
அக்கறையாய் இருக்கிறோம்.

நீங்கள்
கூட்டத்துக்கு வருகிற தலைகளை
கணக்கெடுத்துக் கொண்டிருக்காமல்
சிங்கமாய் முழங்கி செம்மாந்து நடந்தீர்கள்.

நாங்கள்
வாக்குகளின் எண்ணிக்கையைக்
கணக்கிட்டுக் கொண்டுதான்
வார்த்தைகளை உதிர்க்கிறோம்.

நீங

மேலும்

நீங்கள் பேசத் தொடங்கினீர்கள் ஆயிரம் வால்ட் பல்புகளாய் இதயங்கள் எல்லாம் பிரகாசமடைந்தன. நாங்கள் ஆயிரம் பல்புகள் எரிந்தால்தான் பேசவே வருகிறோம். பகுத்தறிவு பத்திரமா இருக்கிறது. அருமை நண்பரே.. சபாஷ்.! இன்றைய நிலையையும் சாமானியனின் மனதையும் அப்பட்டமாக எழுதியிருக்கிறீர். 07-Aug-2015 3:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
நிஷா

நிஷா

chennai
மேலே