Hemalatha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Hemalatha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Sep-2017
பார்த்தவர்கள்:  745
புள்ளி:  13

என் படைப்புகள்
Hemalatha செய்திகள்
Hemalatha - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2019 12:00 pm

உனது எதிரிகளின் மீதும்
எனது வாள்முனை ஒளி

மின்னலில் புணர்ந்து
புஷ்பங்கள் ஈன்றது.

கரைந்த ஓவியங்களிலிருந்து
கிளம்பிய நீல ஒளியினில்

அலைந்து தடுமாறும்
பகைவர்தம் அறிவுக்குள்ளும்

வரலாற்றில் கொட்டிக்கிடக்கும்
காலத்தின் பொன் எலும்புகளை
என் புன்னகையிலிருந்து
பொறுக்கிக்கொள்ள கடவதாக.

இனியும் வேட்கையுற்ற
எனது நம்பிக்கைகள்

அதிர்ந்து பாயாத முள்ளென
சோம்பியிருக்கலாம் நிலமடியில்.

பால்வீதி பயணத்தின்
கனவுகள் உடைந்த பாதையில்

தொடுத்துக்கொண்டிருந்த
சொற்களில் ஒளிர்ந்திடும்

புத்தனின் கருணையை
பரிதவிக்கும் உயிர்கட்கு
விலாசமாய் விட்டுவிடலாம்.

மேலும்

இங்கே சில கதைகள் பதிவு செய்தேன். அதை வேறு இடங்களிலும் கூட. நீங்கள் நல்ல நலம் என அறிகிறேன். எனது வணக்கங்கள்... 29-May-2019 7:02 pm
'புத்தரின் karunaiyai…………...விலாசமாய் விட்டுவிடலாம் '...….இதைத்தான் அந்த aangileyar அன்று செய்தனர் -கனிஷ்கான் பேழையை பர்மாவிற்கு அனுப்பி ! enge ரொம்ப நாளாச்சு ஐயாவாள் காணோமே ! 29-May-2019 2:38 pm
Hemalatha - சாஜிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2019 8:17 pm

கூந்தல்.... ஒற்றையாய் குடுமியிட்டு....இரட்டையாயி வளர்த்து...மெல்ல சடை பின்னி...மணக்க பூவிட்டு... வலம் இடம் அடிக்க நடந்து..கொண்டையிட்டு சண்டையிட்டு... விரித்து அழுது...உணர்வும் வயதும் பழுத்து....கருத்த வேடம் கலைந்து...நரை புகும்....மானுட வாழ்வியல் நூல்....கூந்தல்...

மேலும்

அழகான உவமைகள்😊 03-Jun-2019 1:44 pm
Hemalatha - Hemalatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2019 2:45 am

அப்பா வீட்டில் இல்லாத தனிமையில்
அம்மாவிடம் கழிந்த பொழுதுகள்
விநோதமானவை.
மூன்று வார்த்தைகள் பேசுமிடத்தில்
அன்று மட்டும் முப்பதை அடைத்துவிடுவாள்.

சாத்தூர் சந்தை சேவு கதைகளும்
அதன்மேல் அவள் கொண்ட அலாதிப்பிரியமும்
சுதந்திரமாக உலாவித் திரியும்.

அப்பாவின் அதட்டல்களினூடே
கண்ணாலும், புன்னகையாலும்
நாங்கள் பேசும் மொழிக்கு
அன்றுதான் அகராதி எழுதுவோம்.

பறவைகளைப் பற்றி பேசி தீர்த்துவிடுவாள்.
உலகப் பிரச்சனைகள் அனைத்திற்க்கும்
ஒரு தீர்வு வைத்துவிடுவாள்.
தன் அரசியல் நுண்ணறிவால் வாயடைத்துவிடுவாள்.

என் அம்மா ஒரு வாயாடி.

அள்ளிப்பூசிய மஞ்சளை மீறி மிளிரும்
அவள் கருந்தோல் போல்
அவள் மௌனத்

மேலும்

Hemalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2019 2:45 am

அப்பா வீட்டில் இல்லாத தனிமையில்
அம்மாவிடம் கழிந்த பொழுதுகள்
விநோதமானவை.
மூன்று வார்த்தைகள் பேசுமிடத்தில்
அன்று மட்டும் முப்பதை அடைத்துவிடுவாள்.

சாத்தூர் சந்தை சேவு கதைகளும்
அதன்மேல் அவள் கொண்ட அலாதிப்பிரியமும்
சுதந்திரமாக உலாவித் திரியும்.

அப்பாவின் அதட்டல்களினூடே
கண்ணாலும், புன்னகையாலும்
நாங்கள் பேசும் மொழிக்கு
அன்றுதான் அகராதி எழுதுவோம்.

பறவைகளைப் பற்றி பேசி தீர்த்துவிடுவாள்.
உலகப் பிரச்சனைகள் அனைத்திற்க்கும்
ஒரு தீர்வு வைத்துவிடுவாள்.
தன் அரசியல் நுண்ணறிவால் வாயடைத்துவிடுவாள்.

என் அம்மா ஒரு வாயாடி.

அள்ளிப்பூசிய மஞ்சளை மீறி மிளிரும்
அவள் கருந்தோல் போல்
அவள் மௌனத்

மேலும்

Hemalatha - Hemalatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2018 4:16 am

கால சுழர்ச்சியில் கந்தலாய் கிழிந்து
வியர்வையில் தொப்பலாய் நனைந்து
"மார்க்கெட்... மார்க்கெட்" என கதறும் ஸேர் ஆட்டோ டிரைவருக்கு
அவர் சரீரத்தின் சாயலையொத்த பழைய பத்து ரூபாய் நோட்டயே தேடித் தருகிறோம்

மேலும்

Hemalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2018 4:16 am

கால சுழர்ச்சியில் கந்தலாய் கிழிந்து
வியர்வையில் தொப்பலாய் நனைந்து
"மார்க்கெட்... மார்க்கெட்" என கதறும் ஸேர் ஆட்டோ டிரைவருக்கு
அவர் சரீரத்தின் சாயலையொத்த பழைய பத்து ரூபாய் நோட்டயே தேடித் தருகிறோம்

மேலும்

Hemalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2018 11:34 pm

காலடி உயரம் கையிலடங்கும் தேகம்
நாங்கள் சிறு குழந்தைகள் என்பதற்கு
அடையாளமாய் இது பாேதுமென்று நம்பியதுண்டு.

சீறிய குண்டுகளுக்கு தப்பிக்க தவழ்ந்தது அனைத்தும் என் மழலையின் அடையாளமே -
பயத்தின் இயலாமையென்று சிரிக்கும் உங்களுக்கு எப்படி உணர்த்துவோம் நாங்கள் குழந்தைகளென்று.

வான் மனிதனைக் காட்டி சோறுண்ண மறுத்தபோது தெரியவில்லை அவன் உண்மையென்று
சோற்று மூட்டைகள் வரும் வான் நோக்கி விழிக்கிறோம் -
நம்புங்கள் பசி உணர்ந்தாலும் நாங்கள் பிள்ளைகளென்று.

அப்பாவின் குர்தாவை அணிந்து பெரியவனாக முற்பட்டது தவறுதான்
பாெம்மையை கட்டியணைத்து கந்தலணிந்து நிற்கிறோம் -
நம்புங்கள் இரத்த புழுதிப்பூச்சில

மேலும்

Hemalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2017 10:38 pm

உனக்காக சில கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருகின்றன,
பல கவிதைகள் அரைகுறையாக எழுதவேண்டிய
கட்டாயத்தில் கிடக்கின்றன.
வெட்டவெளி மனதில்
முதல் முத்தம் முதல் கடைசிப் பார்வை வரையிலான
கற்பனை வாழ்க்கை மட்டும் தினமும் முழுமையாகவே
வாழ்ந்து வாழ்ந்து முடிக்கபடுகின்றன.

எப்படி சென்றிருக்கலாம் என்றும்,
எப்படி பேசியிருக்கலாம் என்றும்
கடந்த காலங்களை அடித்து திருத்திக் கொண்டேயிருக்கிறேன்.
இப்பொழுதெல்லாம் காதல் தோல்விகளை கலாய்ப்பதில்லை.
காதல் மரணம் சரியா தவறா என்ற விவாதங்களில்
தவறு என்றாலும் மரணத்தையொத்தது அவ்வலி
என்றே பேசுகிறேன்.

சில வாசனைகள்,
புலப்படாத சில இசைகள்
என உன்னை நினைவுபடுத்த எத்தனிக

மேலும்

காதல் என்பது சிலருக்கு சுகமானது பலருக்கு சுமைகள் நிறைந்த சுகமானது நினைவுகள் உள்ள வரை நேசித்த வாழ்க்கையை உள்ளங்கள் கனவுகளின் ஏக்கங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2017 6:15 pm
Hemalatha - Hemalatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2017 12:43 am

காற்று உறையும்,
காலையில் கதிர் மறையும்
வினோத மண்ணினிலே;
எட்டுத் தோல் கொண்ட
ஒரு மனிதன் வாழ்ந்தான்
கதகதப்பு பொந்தினிலே.

விரல் நர்த்தனக் கலையின்
நிரந்தர களைப்பினிலே,
உலகம் மறந்தாலும்
ஒளித்து வைத்திருந்தான் தாயின் உயிரை
தன் காப்பி உதிரத்திலே.

“மரண உருவம் தாவி வரும்,
தாயின் உயிரை கவ்விப்பெறும்;
கட்டித் தங்கம், கணத்த வைரம்
கொட்டிக் கொடுத்தால் ஓடி விடும்”,
புழுதியில் புரண்ட புரளி கேட்டு
அணிந்தான் பட்டையாய் ஒரு கோட்டு.

எகிப்து கம்பளம்,
பாரசீக வைடூரியம்,
வங்கக்கடல் முத்து,
எண்ணிலடங்கா சொத்து
அள்ளி அள்ளி பையில் திணித்து
போதைக் கொண்டான் பித்துப்பிடித்து.

ஊர்ஜித்து கேட்டு,

மேலும்

வாழ்க்கை ஒரு போராட்டம் நிறைந்த பாதை. அதை கடந்து போகும் ஒவ்வொரு பருவத்திலும் உறவெனும் பயணங்கள் அந்த பயணங்கள் இன்னும் நீளவேண்டும் என்று என்னும் போது விபத்தை போல் மரணம் வந்து விடுகிறது இது தான் வாழ்க்கையின் யதார்த்தம் அணைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த திருநாளாய் மலரும் தீபாவளி அமையட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 17-Oct-2017 12:56 pm
Hemalatha - Hemalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 12:39 am

காவல் தெய்வங்களின் தூதுவனே!
கள்ளங்கபடமற்ற பிள்ளைதானே என்று
அழைப்பு மணி அடித்துவிட்டு ஓடிய என்னை
காட்டிக்கொடுக்காதற்கு நன்றி.

கல் மண்ணன்றி வேறறியா என் கால்களை
உன்னை மிதிக்க அனுமதித்து
பறக்க கற்றுக்கொடுத்ததற்கு நன்றி.

கட்டுக்கடங்காமல் காதலில் தறிக்கெட்டு அலைந்தபோது
என் மீதன்றி உன் மீது, கோழைத்தனமாக
என் காதலின் பெயரைப் பச்சைக்குத்தியதை
பொறுத்ததற்கு நன்றி.

அந்தக் காதல் காலம் கடந்தப்பின்னும்,
கிறுக்கல்களை அழிக்காமல் சுமந்து நிற்க்கும்
உன் நம்பிக்கைக்கு நன்றி.

நான் வளர்ந்து கெட்டு,
இடிந்து விழுந்து அழுதபோது
என் கண்ணீரை கண்ணியம் கருதி
வெளியுலகத்திற்கு காட்டாததற்கு நன்றி.

மேலும்

//கதவுகளின் பாதுகாப்பில் ஏதோ ஓர் மாற்றம். எத்தனை அழகான உண்மை. 27-Sep-2017 5:05 pm
எதுவும் புரியாத வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் ஒரு கூட்டிற்குள் வாழ்வது போல் மனிதனின் வாழ்க்கை அதன் பின் ஒவ்வொரு கட்டமும் தனிமையின் நிழல்களில் கதவுகளின் பாதுகாப்பில் ஏதோ ஓர் மாற்றம். மனிதனின் வாழ்க்கை என்றும் அழகானது கேள்வியும் அவனே! விடையும் அவனே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 4:50 pm
Hemalatha - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ராம்குமார் மு

ராம்குமார் மு

கல்லூர் கிராமம் ,
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ராம்குமார் மு

ராம்குமார் மு

கல்லூர் கிராமம் ,
மேலே