Neppolian - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Neppolian
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  10-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2014
பார்த்தவர்கள்:  157
புள்ளி:  22

என்னைப் பற்றி...

தளத்தின் நீண்டநாள் வாசகன்.
படைப்புலகில் தவழ ஆரம்பித்திருக்கும் சிறு குழந்தை.

என் படைப்புகள்
Neppolian செய்திகள்
Neppolian - வெ கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2014 1:25 pm

ஒரு
பரந்த வெளியினிலே
அலைகின்றேன்..!!

சிறகுகள்
இன்றி பறக்கின்றேன்..!!

நீல வானத்தின்
சாயத்தில் விழுந்து
குளித்தெழுந்து வருகின்றேன்..!!

கால தேவனின்
படகினை நான்
உல்லாசமாய் ஓட்டுகின்றேன்..!!

அடைமழை
மேகத்தின்
மறுபக்கம் அமர்ந்து
ஒழுகும் சூரியனையும்
அழகு நடைபோடும் நிலவினையும்
மின்னல் வாளெடுத்து
வம்புக்கு இழுக்கின்றேன்..!!

வேதத்தின்
உள் நுழைந்து
வேரெடுத்து வருகின்றேன்..!!

ஒளி வேகத்தின்
வேகத்தை
விவேகம் கொண்டு வெல்கின்றென்..!!

சாபம்
இங்கெனக்கு
சரித்திரம் படைப்பதுவா
சலனமின்றி போவதுவா..!!

வாதத்தின்
உள் விழுந்து
வேகத்தை குறைப்பதுவா..!!

ஓடு

மேலும்

மிக்க நன்றி :) 12-Mar-2014 6:11 am
வாழ்க்கை காதல் என அனைத்து கவிதைகளையும் சிறப்பாக எழுதுகிறீர்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் அருமைத்தோழரே! 11-Mar-2014 3:14 pm
தங்களது வாழ்த்திற்கு நன்றிகள் ஐயா..!! எண்ணத்தினை எழுதுகின்றேன், தமிழ் வளர்த்துக்கொள்ளும் எண்ணத்திலும் எழுதுகின்றேன் ஐயா..!! 10-Mar-2014 7:32 pm
உன் படைப்புக்கள் எல்லாமே உணர்வுப்பூர்வமான சிந்தனைகளாக உள்ளன ஆகவே எதைதொடுவது எதை விடுவது என்பதே சவாலாக உள்ளன.உண்மையில் சிறப்புத்தான். 09-Mar-2014 10:39 pm
Neppolian - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2014 7:35 pm

என்ன பால்காரரே இன்னைக்கி ஏன் இவ்வளவு லேட்டு

அது வந்து தூங்கிட்டேங்க

சரி சரி எத்தனை மாடு இருக்கு உங்ககிட்டே

ஒண்ணுதாங்க
அப்படியா! எத்தனை லிட்டர் பால் கறக்குது

என்னய்யா ஒரு முக்காலிட்டர் கறக்குது!

எத்தனை வீட்டுக்கு ஊத்துறீங்க‌

என்ன ஒரு இருபது வீட்டுக்கு ஊத்துறேங்க!

ஆமா பால்காரரே உங்க வீட்டு பக்கத்துல ஏதும் குடிதண்ணி குழாய் இருக்கா?

எப்படிங்க கண்டுபுடிச்சீங்க..............

மேலும்

தங்கள் வருகைக்கும் சிரிப்புக்கும் மிகவும் நன்றி தோழமையே! 04-Mar-2014 4:24 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தோழி! 04-Mar-2014 4:23 pm
தோழியின் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தோழி! 04-Mar-2014 4:22 pm
ஹா ஹா 04-Mar-2014 4:07 pm
Neppolian - காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 3:55 pm

எங்கிருந்தோ அழைக்கிறாள்
ஏன் ஒளிந்தே செல்கிறாள்
மின்னல்!

புன்னகைத்தாள்
பூப்பொழிந்தாள்
மழை!

தொட்டான் நடுங்கினாள்
தொடர்முத்தம் கொடுத்தான்
வண்டும் மலரும்!

பெற்றதில் நிறைந்தாள்
பிரிந்ததை மறந்தாள்
சூலுற்ற மலர்!

வருத்தம் பெருத்தது
வடிவம் திரிந்தது
வாழ்க்கை கனிந்தது!
== ++==

மேலும்

தொட்டான் நடுங்கினாள் தொடர்முத்தம் கொடுத்தான் வண்டும் மலரும்! //அருமை அய்யா // 13-Aug-2014 7:48 pm
அருமை அய்யா.......... 11-Aug-2014 1:25 pm
ஒவ்வொரு துளியும் அருமை ! 11-Aug-2014 1:25 pm
விம்முகிறது, வெள்ளூராரே! நெஞ்சம் -நன்றியில்! 11-Aug-2014 1:05 pm
Neppolian - பூவிதழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2014 4:57 pm

ஏ உசுர புடிங்கி போறபுள்ள
ஒத்தவார்த்த சொல்லவில்ல
உன் சொத்து பத்து ஏதுவேனா
ஒத்தசொல்லு போதும்புள்ள



இனி
சொன்னாலும் ஒருவார்த்த

சுள்ளி முளைச்சிடுமா
சுட்டமண்ணு கரஞ்சிடுமா-
சொல்லுபுள்ள
சித்திரையில் பனிவிழுமா
சுனைநீரும் கசந்திடுமா

குருவி கூடுகட்டி
கோபுரந்தான் சாஞ்சிடுமா
தேனீ கூடுகட்ட
தேக்குமரம் முறிஞ்சுடுமா

உழுது உயிர்வாழ
உசிரான நீயுமில்ல
அழுது அகம்வாழ
ஆதரவாய் நீயுமில்ல
பொழச்சு புறம் வாழ
புடிச்ச பொருளுமில்ல

உழுது பயிர்செய்ய
ஒருசொட்டு நீருமில்ல
ஊரே அழுகுதிப்போ
உன்கண்ணில் நீரேப்போ

நா
உருண்டு பேரண்டழுத கண்ணீர
ஒத்தையில திருப்பிவிட்டா
உப

மேலும்

வாசித்தமைக்கு நன்றி ! 01-Mar-2014 11:27 am
தங்கள் கருத்துக்கு நன்றி ! 01-Mar-2014 11:27 am
ஆசைப்படுங்கள் வழிபிறக்கும் கூடவே வரியும் பறக்கும் 01-Mar-2014 11:26 am
உங்களை போல கவி எழுத ஆசை.....! 28-Feb-2014 6:12 pm
Neppolian - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2014 12:39 am

கழிவென்று தெரிந்தபின்
கழிவுப் பக்கம் பாராதே
இழிவென்று தெரிந்தபின்
இகழ்ச்சியாய் நடக்காதே
நல்லதை நினைத்தால்
உன் மூச்சுக் காற்றிலும்
மனதை மயக்கும் நறுமணமே..!!

மேலும்

Neppolian - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2014 2:25 pm

உள்ளத்தில் பாசமிருந்தால்
தலையில் இருப்பது
உயிர்கொடுத்த பூக்கூடையே..!!

மேலும்

Neppolian - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2014 2:17 am

மதம் என்பது உணர்வற்ற மக்களின் உணர்வாக இருக்கிறது. இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைப் பெருமூச்சுதான் மதம். அதே சமயத்தில் அந்த வேதனைக்கும் எதிராகவும் இருக்கிறது. மதம் மக்களுக்கு அபின்...

- காரல் மார்க்ஸ்

கடந்த மாதம் சென்னையில் நடந்த இந்து மத ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியை ஒட்டி நண்பர் ஒருவர் அதை ஓஹோவென்று மிகவும் பாராட்டித் தனது கருத்தை இணையதளம் ஒன்றில் பதிவு செய்து இருந்தார். இந்து மதத்தை ஒரு மதமாகக் கருதுவது தவறு என்றும், அது ஒரு வாழ்க்கை முறை என்றும், இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் சமூக உணர்வை ஊட்டத் தவறி விட்டார்கள் என்றும், மதங்கள்தான் இந்தியாவில் சமூக மா

மேலும்

Neppolian - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2014 5:34 pm

போதிப்பவன் எல்லாம்
ஞானி ஆகமுடியாது
பேதலிப்பவன் எல்லாம்
உத்தமன் ஆகமுடியாது
காமுகன் எல்லாம்
கவிஞன் ஆகமுடியாது
சந்தர்ப்பம் கிடைத்தால்
யோக்கியனும் அயோக்கியனே..!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே