பழ முத்துக்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பழ முத்துக்குமார் |
இடம் | : ஜலகண்டாபுரம், சேலம் மாவட் |
பிறந்த தேதி | : 04-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 12 |
தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்ளும் கோடிகளில் ஒருவன்
கவலைகள் மறந்து
உன்னை நேசிக்கும்
உன் உயிரானவன்
நெஞ்சின் மீது சாய்ந்து
உன் விழிகளை
மூடிக் கொள் பெண்னே..
என் நெஞ்சத்தை மஞ்சமாக்கி
உந்தன் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்..!
உன் ஏகாந்த பார்வை என் மேல் விழுந்திட வேண்டும்...
உன் உணர்வில் என் உணர்வு கலந்திட வேண்டும்...
உன் விரலோடு என் விரல் கோர்த்திட வேண்டும்...
உன் தோல் மேல் என் தலை சாய்திட வேண்டும்...
உன் மார்பில் என் முகம் பதித்திட வேண்டும்...
என் உயிர் ஓட்டம் உன்னில் நான் கண்டிட வேண்டும்...
என் மூச்சு உன் மூச்சில் கலந்திட வேண்டும்...
உன் விழியில் என் பிம்பம் நான் கண்டிட வேண்டும்...
உன்னில் நான் கரைந்திட வேண்டும்....
உன் மடியில் நான் துயில் கொள்ள வேண்டும்...
அந்த நொடி என் ஆயுள் முடிந்திட
வேண்டும்....
முடிந்தாலும் முற்று
பெறாதது....
அழிவு என்ற ஒன்றை
அறியாதது....
எல்லோர் உள்ளங்களிலும்
ஓய்வு இன்றி
ஓடிக்கொண்டிருப்பது...
எந்த சூழ்நிலையிலும்
நம்மால்
விட்டு விலக முடியாதது....
ஆயிரம் வலியை
கொடுத்தாலும் என்றாவது
அவை அனைத்தையும்
நினைத்து ரசிக்க
கூடியது....
நம் உடல் மண்ணில்
புதையும் வரை
நம்மில் இருந்து
பிரிக்க முடியாதது...
என்றும் அழியா
சுடர் ஒளியாய்
நம்முள்
சுடர் விட்டு கொண்டிருப்பது.....
உன்னில் என்னில் இருப்பது .....
புருவங்கள் உயர்ந்திடாது
உன் புன்னகை காணாமல்
இமை இரண்டும் கலந்திடாது
உன் அழகை பாராமல்
கார் குழலில் தேன் கலந்து
கன்னத்தில் முத்தமிட
ஓரமாக வீசும் பார்வை
யாரைத்தான் கொன்று விட
விழி இரண்டு போதாதே....?
விழித்தேன்!
ரசிக்க எத்தனை விழிகள் வேண்டுமென்று.
நிலப்பரப்பாய் நீ விழுந்தாய்
உனை சூழ்ந்து கடலானேன்.
வந்து வந்து மோதிச்செல்கின்றேன்
காதல் இன்னும் தொடர்கிறது.
மறுக்காமல் அனுமதிக்கிறாய்
உன் ஆசை எனக்கும் புரிகிறது.
ஒரு நாள் ஒன்றாய் இணைவோம்
அதுவரை நம் காதல் கடற்கரையாய் நீளட்டும்
பொய்யல்ல
மெய்யே சொன்னேன்
என் மனம்
உன்னிடம் சொன்னேன்
சொன்ன உடன்
அக்கினி வெயிலில்
பனித்துளி பறந்தது
வேறில்லா செடியினில்
செம்பருத்தி பூத்தது
எத்தனை கணைகள் கேள்விகளாய் வந்தாலும்
என்னிடம் பதில் இல்லை "ஏன் பிடித்தது"
எந்த மருந்திற்கும் அடிபணியவில்லை
உன் மீது தீராத "பித்து பிடித்தது"
சொல்லாமல் மறுத்து விட்டேன்
சொல்ல வந்ததை சொல்லி விட்டேன்
வெட்கம் கொண்ட
உன் விரல்கள் பட்டுவிட
பட்டுப்போன மரமும்
பட்டாம் பூச்சி படர பசுமை செழிக்கும்!
ஒரு கண்ணீரின் அழுகை
யாருக்குத் தெரியும்
சிறு புன்னகையின் சிரிப்பு
யார் கேட்கப் புரியும்
மழைத்துளி நனைய நினைப்பது போல்
தென்றல் தொட காற்று விரும்புவது போல்
நீள்கின்ற பயணம் நீ எனக்கென........
"இருளில் பார்த்த குருடன் கதை"
வறுமையில் பிறந்து விட்டோம்
விதி செய்த சதியென்று
பிஞ்சு மனம் கதறுதடா!
வண்ண உடை அணியோமோ?
ஒப்பனைகள் செய்யோமோ?
என்று வரும் அந்தச் சூழலென்று
ஏங்கி நிற்கும் குழந்தை மனம்!
யார் இதற்கு பொறுப்பு?
படைத்த கடவுளா?
ஈன்றெடுத்த பெற்றோரா?
உதறி விட்ட உறவுகளா?
காணாத அரசுகளா?
இல்லை வீணர்கள் சொல்லும் விதியா?
"இதில் தனி யாரும் இல்லை"
தன் மதமே வாழ வேண்டும்
தன் ஜாதியே முன்னேற வேண்டுமென்று
தள்ளி நின்றும்
தடுத்துக்கொண்டும்
தானும் முன்னேறாது
மற்றோரும் முன்னேற விடாது
கண்டும் காணாமல் அமைதியாய் இருக்கும்
சமுதாயமே இதற்குப் பொறுப்பு
ஏழை - பணக்காரன்
வறுமை - செழுமை
இடையில் இருப்பது சிற
*******************************
குளிர் நிலவே
என் கொடி மலரே...
*******************************
அழகிய சாலையோரம் ;
அதிகாலை நேரம்;
வண்ணக்கோலம் போடும்;
மயில் போல் அசைந்தாடும்;
முழுமதியாய் உன்னைக் கண்டேன்....
கண்ட நொடியே,
தென்றலையும் ; திங்களையும் வெறுத்தேன்...
உண்ணவும்;உறங்கவும் மறுத்தேன்....
தேவையில்லாமல் சிரித்தேன்...
முழுமையாய் உன்னுள் சிக்கித்தவித்தேன்...
சில தருணம்,
கொட்டும் அருவியும் ; வெற்றுப்பாறையும்
சேர்ந்தது போல,
உந்தன் காதல் பார்வை
என்னைக் கொல்ல,
அதை அறிந்தும் அறியாதது போல் நீ செல்ல,
என் மனம் அதையும் ரசித்தது மெல்ல....
உன் பார்வை போதுமே,
உன் மனதை
ஒரு நாள் அயர்ந்து
தூங்கிவிட்டேனாம், அவளுடன்
தினமும் நேரத்தைச்
செலவளிப்பதை மறந்து...
என் மீது கோபித்துக்கொண்டாள்
அவள் (நள்ளிரவு)
-செ. பொன்நிலா