sivakumar chandrasekaran - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : sivakumar chandrasekaran |
இடம் | : Singapore |
பிறந்த தேதி | : 22-Jun-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 4 |
generous human being
மனதிற்குப் பிடித்தவரை
மணாளனாய் வரிந்திட்டேன்
மனதார சம்மதித்து
மகளென்னை வாழ்த்திடுவாய் !
இருமனமும் கலந்தபின்னே
இணைத்துவைத்தல் முறைதானே !
இடையூறாய் நீயிருந்தால்
இதயம்நூறாய் வெடித்திடுமே !
தாயேயுன் சம்மதத்தை
தயவுடனே வேண்டுகின்றேன்
தயங்குவதேன் கலங்குவதேன்
தடுப்பதெது சொல்லம்மா !
களங்கமில்லா காதல்தான்
கட்டுப்பாடு மீறலையே
கடலளவு கண்ணீர்விட்டும்
கல்மனமும் கரையலையே !
சாதிவெறி கொண்டவுள்ளம்
சம்மதிக்க மறுக்கிறதோ ?
சாகும்வரை போராடுவேன் - நீ
சரிசொலாமல் மணமுடியேன் !
சாதிக்குள்ளே மணம்செய்தால்
சாகாவரம் கிடைத்திடுமோ ?
சந்தோசம் நிலைத்திடுமோ ?
சால்பெனக்குத் தந்திடுமோ ?
அரிசி சோறு
மணக்கும் சாம்பார்
சுவைக்கும் துவையல்
ருசிக்கும் வடை பாயாசம்
பசி தூண்டுகிறது
எச்சில் ஊறுகிறது .
அப்பளத்தின் வட்டத்தில்
நங்கூரமிடுகிறது கண்கள்
இலையின் விரிப்புக்கு
ஏக்கமடைகிறது ஆசைகள்
இலை விரித்து
தண்ணீர் தெளித்தவுடன்
முந்திக்கொண்ட உப்பு
தப்பாமல் அமர்ந்துவிட்டது..!
நளப்பாகத்தின் அகரத்திற்கு
என்ன அவசரமோ ?
அழகான வரிசையில்
அலங்காரமாய் காய்கறிகள்.
இலக்கிய இலையில்
துளிப்பாக்களின் அணிவகுப்போ..!
குவித்து வைத்த சோற்றின்
தலையில் சாம்பார் வழிகிறது
வெண்மை கோபுரத்திற்கு
மஞ்சள் நீராட்டுவிழாவோ !
வட்டவட்டமாய் வடைகள்
அதன்மேல் பாயாச ஓடைகள்
வட்ட நிலாக்கள்
வெண்
எனது
மூன்றாவது தசத்தின்
வயது, விரதம் முடிக்க
விண்ணப்பம் ஒன்று
அனுப்பவைத்தது
காம தேவனுக்கு....!
விண்ணப்பம் படித்த
காமதேவன் என்னை
நேர்க்காணலுக்கு அழைத்தான்.
தேவன் :
நீ ரசிகனா ?
படைப்பாளியா?
ரசிகன் என்றேன்..!
எதை ரசிப்பாய் ?
என்றான்.
எதையும் ரசிப்பேன்
என்றேன்.
எதுவரை உன் ரசிப்பு?
வரையறை தெரியுமா?
வினவினான்
விளக்கம் கொடுத்தேன்.....
பதுமை இதழ் முதல்
இளமை மெட்டுக்கள் பாடும்
அழகிய மொட்டுக்கள் வரை.
நாசித்துளை ஏறிய மோகவாசம்
வியர்வையில் கழியும் வரை.
கழிந்த வியர்வையை என்
இதழில் சுவைக்கும் வரை.
சுவைத்த வியர்வை மிச்சத்தை
விரல்களால் தீண்டி மறுமுறை
முளைக
அழுதழுது
அடம் பிடித்தது வானம்
வண்ணப் புடைவைக்கு.
நீரிடம் கடன்பட்டு
வாங்கிக் கொடுத்தது
சூரியன்.