M Chermalatha - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : M Chermalatha |
இடம் | : kovilpatti |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 1462 |
புள்ளி | : 148 |
நீ தடவும் தாடியாக தடவிக் கொள்ள ஆசை
உன் உதட்டின் மேல் ஒட்டியிருக்கும் மீசையாக ஆசை
உன் மார்போடு கிடக்கும் முடியாக மயங்கி கொள்ள ஆசை
நீ குளிக்கும் தண்ணீராக ஆசை
நீ துவட்டும் துண்டாகி உன் மேனியெங்கும் துவட்ட ஆசை
நீ துயில் கொள்ளும் மெத்தையாக ஆசை
உறங்கும் பொழுதும் உன்னோடு இருக்க ஆசை
உன் உடையாகி உன்னுடன் ஒட்டியிருக்க ஆசை
உன் கைரேகையாக கலந்திருக்க ஆசை
உன் இதழாக ஆசை
உன் இதழ் பட்ட எச்சிலை எடுத்து சாப்பிட ஆசை
நீ கைதொடும் பொருள் யாவும் நானாக ஆசை
உன் கைகோர்த்து உலகம் எல்லாம் உன்னுடன் சுற்ற ஆசை
நீ போகும் பாதையெல்லாம் பூமியாகி உன்னை தாங்க ஆசை
உன் காலணியாகி காலடியில் கிடக்க ஆசை
உன் மனம் வருந்தும் வேளையில்
அல்லும் பகலும் அயராது உழைத்து விட்டு
அழுத்துப்போய் வரும் உங்களுக்கு
கை கால் அமுக்கி விட்டு
அழுக்கு சட்டை எல்லாம்
பளிச்சென்று துவைத்து
பசியாற ருசியாக
பலவகை சமையல் செய்து
பாசத்துடன் நான் ஊட்டி விட
நேச மச்சானே நெஞ்சார நீ சாப்பிடுமையா !!!
பொழுது விடிஞ்சதும் நீங்க
புலப்புக்கு போகனும்ல
கலைப்புதீர காலத்துல நீங்க தூங்க
பஞ்சு தலையணை வைத்து
பாயை விரித்து வைத்து
பாசத்துடன் தாயாக
ஆரிராரிராரோவென்று
தாலாட்டு நான் பாட
என் மடியில் தலை வைத்து
மாமாவே நீ தூங்குமைய்யா !!!
அல்லும் பகலும் அயராது உழைத்து விட்டு
அழுத்துப்போய் வரும் உங்களுக்கு
கை கால் அமுக்கி விட்டு
அழுக்கு சட்டை எல்லாம்
பளிச்சென்று துவைத்து
பசியாற ருசியாக
பலவகை சமையல் செய்து
பாசத்துடன் நான் ஊட்டி விட
நேச மச்சானே நெஞ்சார நீ சாப்பிடுமையா !!!
பொழுது விடிஞ்சதும் நீங்க
புலப்புக்கு போகனும்ல
கலைப்புதீர காலத்துல நீங்க தூங்க
பஞ்சு தலையணை வைத்து
பாயை விரித்து வைத்து
பாசத்துடன் தாயாக
ஆரிராரிராரோவென்று
தாலாட்டு நான் பாட
என் மடியில் தலை வைத்து
மாமாவே நீ தூங்குமைய்யா !!!
நாங்கள் கருவறை செல்ல முடியாத கர்ப்பகிரகங்கள் தான்!
அடைக்காக்க முடியாத பெட்டை
கோழிகள் தான் _ ஆனால்
உணர்வுகள் , உணர்ச்சிகள் இல்லாத சதைப் பிண்டங்கள் இல்லை!
எங்களில் ஓடுவதும் இரத்தம் தான்!
எங்களை சீராட்ட வேண்டாம்
ஆனால் சிதைக்காதீர்கள்!!!!
இமையாக நான்
உன் கண்களை காப்பேன்
அறுசுவை உணவாக நான்
உன் இதழ்களினால் என்னை
ரூசித்து பசியாற்றுவேன்
புத்தகமாக நான்
உன் கைதீண்ட காத்திருப்பேன்
உடையாக நான்
எந்நேரமும் உன்னுடன்
ஒட்டியிருப்பேன்
காலணியாக நான்
என்றும் உன் பாதங்களை
பாதுகாத்து
காலம் உள்ளவரையிலும்
உனது காலடியில் நான்
கிடப்பேன்
உடலாக நான்
உயிராக நீ
உனக்குள் நான் எனக்குள்
நீயென
ஒருவருக்குள் ஒருவராய்
வெள்ளந்தி மனசுக்காரா
வீச்சருவா பேச்சுக்காரா
விடலபுள்ள. உன் நினைப்பில்
வெட்கட்கட்டு. தவிக்கிறேனே
கத்தி. மீசைக்காரா
கற்கண்டு. கண்ணுக்காரா
கடைகண்ணு. பார்வையில்
கவிழ்ந்து விட்டேனே
பசும்பால். வண்ணக்காரா
நேசம்வச்சா உயிரைக்கொடுக்கும்
பாசக்காரா
மோசம்செஞ்சா. உயிரயெடுக்கும்
கோவக்காரா
கருப்பசாமியாய். காத்துநிக்கும்
காவக்காரா
பாதகத்தி. உன் நினைப்பில்
பைய்தியமாகிட்டேனே
வீச்சருவா. விதவிதமாக வச்சு
வெண்பொங்கல். படையல் வச்சு
என்னை உனக்கு. காணிக்கையாக்கி
காத்திருக்கிறேன்
கனிவுடன். விரைவில். வாருமைய்யா !!!!
வெள்ளந்தி மனசுக்காரா
வீச்சருவா பேச்சுக்காரா
விடலபுள்ள. உன் நினைப்பில்
வெட்கட்கட்டு. தவிக்கிறேனே
கத்தி. மீசைக்காரா
கற்கண்டு. கண்ணுக்காரா
கடைகண்ணு. பார்வையில்
கவிழ்ந்து விட்டேனே
பசும்பால். வண்ணக்காரா
நேசம்வச்சா உயிரைக்கொடுக்கும்
பாசக்காரா
மோசம்செஞ்சா. உயிரயெடுக்கும்
கோவக்காரா
கருப்பசாமியாய். காத்துநிக்கும்
காவக்காரா
பாதகத்தி. உன் நினைப்பில்
பைய்தியமாகிட்டேனே
வீச்சருவா. விதவிதமாக வச்சு
வெண்பொங்கல். படையல் வச்சு
என்னை உனக்கு. காணிக்கையாக்கி
காத்திருக்கிறேன்
கனிவுடன். விரைவில். வாருமைய்யா !!!!
பார்க்காமலே ஒரு காதல்...
ஆனால் இது காதல் கோட்டை கதையல்ல...
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது..,
முதன்முதலில் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்ததும்,
அவன் எனக்கே உரியவனாய்
என்னருகில் இருந்ததும்
ஒரே செவ்வாய் கிழமையில்தான்...
அவன் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னால்
நான் உணர்ந்ததென்னவோ
அவன் இதயத்துடிப்பை மட்டும்தான். ..
எங்கோ எதிலோ
ஒரு புள்ளியாய் உணர்ந்த அவனை
அன்றே முடிவு செய்துவிட்டேன்
எனக்கானவன் அவன் மட்டுமே என்று...
சில திங்கள் அவனுடன் மட்டுமே
வாழ்வதாய் நினைத்து மகிழ்ந்தேன் கற்பனையில்...
பல திங்கள் வேதனையால் தவித்தேன்
உண்ணவும் உறங்கவும் முடியாமல்...
கஷ்டப்பட்டு தேர்த்தினேன் என்னை,
என்ன
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!
காலை எழுந்தவுடன் பார்க்கும் கண்ணாடியிலும் நீதான்
கைப்பேசி முழுவதும் நீதான்
தாகம் தீர்க்கும் தண்ணீரிலும் நீதான்
உண்ணும் உணவிலும் வெளிப்படுவது நீதான்
எத்திசையில் சென்றாலும் எங்கும் தெரிவது நீதான்
என் மூச்சுக் காற்றிலும் நீதான்
என்னை உயிர் வாழ வைக்கும் இதயமும் நீதான் அதன் துடிப்பும் நீதான்
கண் மூடினால் கனவிலும் நீதான்
எங்கும் நீதான் எதிலும் நீதான்
எனக்கு யாவும் நீதான் என்றும் நீதான் என் கண்மணியே!!!
எப்போதும் என்னருகில் நீயிருக்க விரும்புகிறேன்
உலகிலேயே உயர்ந்தவற்றை உனக்கு பரிசளிக்க நினைக்கின்றேன்
ஏராளம் ஆசைகளை என்னுள் உனக்காக உருவாக்குகிறேன்
காலம் எனது ஆசையை நிராசையாக்கிவிடுகிறது
நாட்கள் சென்றால் என்ன
மாதங்கள் போனால் என்ன
ஆண்டுகள் சென்றால் என்ன
பல யுகமே ஆனாலும்
கலங்காமல் காத்திருப்பேன்
எண்ணிலடங்கா என் ஆசைகளுடன்
அவையாவும் என்றாவது
ஒர் நாள் உன்னுடன் நிறைவேறும் என்று!!!!!