கியாஸ் கலீல் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கியாஸ் கலீல் |
இடம் | : தர்ஹா நகர் |
பிறந்த தேதி | : 30-Sep-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 320 |
புள்ளி | : 40 |
Always cool..
உடும்பாக இருந்த
குடும்பாட்சி ஒன்று
தடம் புரண்ட நிகழ்வு
இடம் பெற்ற நாள் இது.
சாதி வெறி பேசி
ஆதரவு தேடியோர்
நாதியின்றிப் போக
பேதி மருந்து கொடுத்த நாள்
வெள்ளை வேன் கடத்தல்
பள்ளி வாயல் தாக்கல்
தொல்லைகள் பலவும்
இல்லாமல் போன நாள்
குடு கொண்டு வருதல்
நடு ரோட்டில் சுடுதல்
கொடுமைகள் பலவும்
விடைபெற்று சென்ற நாள்
பொல்லாத விலைகளால்
பிள்ளையை ஆற்றிலே
தள்ளிக் கொன்ற நிலை
இல்லாமல் போன நாள்
மீடியா சொல்வதை
காடையர் சேர்ந்து
மூடி மறைப்பது
ஓடி ஒழிந்த நாள்
பொது பல என்னும்
புது பலாய் கிளப்பி
சதி செய்த கோட்டா
கதி கலங்கிப் போன நாள்.
புலிகளை ஒழித்ததால்
அழியாதப் புகழ் கொண்டும்
இ
ஓரேயோர் வார்த்தை மட்டுமே,
தினம் நான் யாசகம் கேட்கிறேன்...
அதை ஏன் மறுக்கிறாய்,
நானும் சுவாசிக்கவே மறக்கிறேன்!
உன் மௌனங்களோடு
இயைந்து வாழும் அனுமதியை
என் நிஜங்கள் இன்னுமே
பெறவில்லை அன்பே...
இதயம் வலிக்கின்றது...
விழிகள் நனைகின்றது...
உயிரானவனே நீயும் - ஊமை
நாடகம் அரங்கேற்றும் நேரம்!
உன் காந்தக் கண்களோடு,
இனிவரும் காலம் யாவிலும்
புன்னகைகளின் முகவரிகள்
எழுதி போவதே இவள் அவா..
விரக்தியின் விம்பங்கள்
உன் இதழ்களில் படிந்திட
இவள் அன்பு தொந்தரவுகளே
பாதை வகுத்திடுமோ என்று,
உள்ளுக்குள் ஓர் ஐயம்!
தொல்லையென என்னை
நொடியேனும் எண்ணிவிடாதே..
அங்கே, அந்த நிமிடமே
அர்த்தமிழக
எண்ணங்களில் குடிகொண்டவனே,..
உன் கன்னத்தில் ஓர் முத்தம் வைத்து,
உன் விரல்களோடு விரல் கோர்த்து,
வரைய வேண்டும் ஓர் காதல் கோலம்...
காலத்தோடு அழியாத வண்ணமாய்!
இமைக்கும் என் கண் இமைக்குள்
ஒளிந்திருந்து முகம் காட்டும் உன்,
மார்போடு தலை சாய்த்து நானும்,
காண வேண்டும் ஓர் காதல் தேசம்...
காவியங்களோடு கலந்திடும் வண்ணமாய்!
பார்த்ததும் என் இதயம் நிறைக்கும்,
பாராவிட்டால் என் உயிரை குடிக்கும்,
ஆண்மைக்கு இலக்கணம் கூறும்,
ரகசியமாய் நான் ரசிக்கும் நீ...
என் நெஞ்சோடு காதல் சின்னமாய்!
கலைந்திடும் மேகமெல்லாம்
மீண்டும், மீண்டும் இணைந்து வந்து
முழு உருவம் பெறுவது போல்
விலகிட நினைக்கும்
உனக்குள் நான்
விடுதலை பெறாத
ஆயுள் கைதியாகவே
இருக்கட்டுமே...
உன் நினைவின்
ஓரத்தில் நான்
நிலழாகவேனும்
வலம் வருவேனேயானால்...
உன் காதல்
என் கைசேராத
கனவாகவே
இருக்கட்டுமே...
கலையாமல் அது
நீளுமானால்,
ஊன்உணவின்றி
தவம் கிடப்பேன்;
நான் உறக்கத்தையே
வரமாக வேண்டியே...
எங்கேயோ என் எண்ணங்கள்..
எதை நோக்கியோ என் பயணங்கள்..
வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே,
எத்தனையோ வாள் வீச்சுக்கள்..
வாலிபத்தின் முதற் படியிலே,
வயோதிபத்தின் அனுபவங்கள்...
வாழும் இந்த மண் மீதிலே
வஞ்சனையின் வாசங்கள்..
வெளுத்ததெல்லாம் பாலென நம்பும்
மின்னுவதெல்லாம் பொன்னென சொல்லும்
அப்பாவிகளின் அரண்மனை அதிலே
இத்தனை காலம் இறுமாந்திருந்தேன்..
சுற்றி நிற்போர் நட்புக் கரம் நீட்ட,
கூட இருப்போர் நகைசுவை பேச,
அத்தனையும் விழலுக்கிறைத்த நீராய்,
ஊமை காயங்கள் நெஞ்சிலே மீதியாய்...
பந்தி முந்தும் சிலரை போலே,
முந்தி நிற்பது துன்பம் தானோ...
வந்து தொடரும் அல்லல் எல்லாம்,
நின்று கொல்லு
கற்புள்ள கவிதையாக..
நான் என்ற ஒருத்தி..
நீயென்ற ஒருவனுக்காய்..
போர்வையாக படைத்திருக்கயில்
நடுவில் எதற்கு
காதலும் ..
கத்திரிக்காயும்.. . .???
மறுமையிலும் மணமகளாய்..
நீயிருக்க ஆசை கொள்கிறாய்
உன் கணவனுக்கு -ஆனால்
மணக்க முன் ...
மனதை மட்டும் ..
மஹ்ரமில்லாத
மண்குதிரைகளில் - ஏனோ
மரணிக்கச் செய்கிறாய்....??
உள்ளத்தின் கற்பை இழந்து
விட்டு. .
கழாவில் உனக்காக
ஒருவன் இருக்கிறான்
என்பதை மறந்து விட்டு ..
கல்போடு நீ காணும்
பகல் கனவுகளும் கற்பனைகளும்
கரைந்து விடும்..
கண்ணீராய்....!!
பெண்மையென்பது உள்ளத்தில்
பூக்கும் பூ..
அந்தப் பூ ஒரு முறை ..
ஒருவனுக்காய்..
பூக்க வேண்டும்
இதயம் நிறைந்த காதல் - தந்ததோ,
இவள் உயிரில் முறையாய் சாதல்!..
இன்னும் எதை நீ எதிர்பார்க்கிறாய்,
தருவதற்கோ என்னிடம்
இல்லை எதுவும் மீதி...
காதல் என்ற வார்த்தைக்குள்
அன்பின் வீதம் நூரென்றால்,..
கொடுத்துவிட்டேன் உனக்காய்
அதையும் தாண்டியதோர் அன்பை!
காதல் என்ற சொல்லோடு
கண்ணீரின் வீதம் நூரென்றால்,..
அதையும் மீறி அழுதுவிட்டேன்
தனிமையிலே நான் உனக்காய்!
இன்னும் எதை தான் கேட்கிறாய் என் அன்பே....
ஊரை கூட்டிச் சொல்லட்டுமா,
எனக்கும் உனக்குமான உறவை...
தயக்கம் என்னிடம் இல்லை,
தலைவனே உன்னிடம் மட்டுமே!
இன்னும் எதை தான் கேட்கிறாய் என்னவனே...
நான் உ(ன்)னை நேசிப்பது தவறென்றால்,
"இல்லை " என்பதால் வருவது ஏக்கம்
ஏக்கம் தருவது ஊக்கம்
இதனால் வராது தூக்கம்
காரணம் உயர வேண்டும் என்ற நோக்கம்
இன்றைய முதலாளிகள் எல்லாம்
அன்றைய தொழிலாளிகள் தான்
சின்ன வித்து தான் காலப் போக்கில்
வியாபித்து பெரும் விருட்சகமாகும்
உயர வேண்டும் என உலறும் உள்ளமும்
உறங்காது உழைக்கும் உடலும்
உன்னிடம் இருந்தால்
உயர்வு உனக்குத் தான்
உயர்தல் என்பது உடம்பினில் இல்லை
உழைப்பில் உள்ளது
நிகொலொஸ் ஜேம்ஸ் உடம்பு தான் என்ன
அவன் தொட்ட சிகரம் என்ன
பட்டம் எழுவதோ நூலால்
நீ எழ வேண்டும் உந்தன் காலால்
முடங்கியவன் முன்னேறியது இல்லை
முயற்சி செய்தவன் முடங்கியதும் இல்லை
சிகரம் தொட்டவர்கள
அருகே அமர்ந்து
ஆசையோடு பேசிய
அன்பு வார்த்தையெல்லாம்
அழிந்தே போனதடா - நீ
ஆதாரமின்றி எனை
அனாதரவாய் விட்டுச் சென்றதும்!
தொலைவில் இருந்து
தொடராய் சொன்ன
தொல்லைதரா கதைகளெல்லாம்
தொலைந்தே போனதடா - நீ
தோல்விகளை எனக்கு
தோழனாக்கிச் சென்றதும்!
பார்வைகள் ஒவ்வொன்றும்
பழைய கதை பேசிச் செல்ல
பார்க்காதவன் போல் நீ
பாதைதனிலே - உன்
பார்வை பதித்து போகையில்
பாவை இவள் நெஞ்சம்
பாகாய் உருகுதடா!
விழி மூடினால் உன் விம்பம்
விழித்திருந்தால் யாவும் துன்பம்
வில்லங்கமற்ற என் வாழ்வுக்கே
விடையென வந்தாய் - இன்று
விரல் விட்டு எண்ணும் நாட்களிலே
விடை தெரியா விடுகதையாகிப் போனாய்!
நண்பர்கள் (11)

ஜின்னா
கடலூர் - பெங்களூர்

fasrina
mawanella - srilanka

நிலாகண்ணன்
கல்லல்- சென்னை
