ராம்குமார் பாலு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராம்குமார் பாலு
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  125
புள்ளி:  6

என்னைப் பற்றி...

கவிதை எழுத வராது... ஆனால் நல்ல ரசிகன்

என் படைப்புகள்
ராம்குமார் பாலு செய்திகள்
ஜின்னா அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2015 12:44 am

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது

மேலும்

அண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... 12-Aug-2018 10:13 pm
வாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm
உண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில்! அருமை ஜின்னா அண்ணா ! 06-Jan-2018 6:24 pm
காலத்திற்கு ஏற்ற பொன்மொழிகள்....! அருமை ..... 18-Oct-2017 1:58 pm
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Oct-2015 4:18 pm

மழையில் நனைந்துவிடும்
தீர்மானத்துடன்
குடை எடுக்காமல் வெளியேறினேன்.

வானம் நிரப்பிய
கார்மேகம் கட்டியம் கூற
இப்போதோ அப்போதோ
நிகழ்ந்துவிடும் என்ற நிலையில் ..
கலாபம் விரித்து மயூரம்
நடனமிடத் தொடங்கியிருந்தது ....

காத்திருந்த அந்த
கண நெரிசல்களில்
தாமதித்து வந்தது மட்டுமன்றி
திரும்பிப் பார்த்து புன்னகை
பொழியாமல் போய்விட்டது நிலவு

அங்கே சிதறிக் கிடந்தது கனவு.


*மெய்யன் நடராஜ்

மேலும்

நன்றி 16-Oct-2015 3:14 am
சிதறிக்கிடந்தது கனவு மட்டுமா நிலவின் நினைவும்தான் 12-Oct-2015 3:56 pm
மிக்க நன்றி 12-Oct-2015 1:42 am
படைப்பு அழகு ஐயா! 11-Oct-2015 7:38 pm
ராம்குமார் பாலு - இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2015 10:53 pm

தனது மகன்கள் ஆட்டம்போட்டு
விற்றுத்தீர்ந்த நிலம் போக,
தனக்கிருக்கும் சிறிய பங்கில்
பயிரைப் பயிரிட்டு
பகலில் மழை பொய்த்தாலும்
இரவில் மழை வருமென
தனக்குத்தானே
நம்பிக்கையோடு சொல்லி

காலை முதல் கருமை வரும் வரைக்கும்
புளித்துப்போன
பழைய கஞ்சியைக் குடித்துவிட்டு,

வயதான காலத்திலும் சளைக்காமல்
மற்றவர் பசி தீர்க்க
தான் பசியோடிருந்து,
கிராமத்தில் விவசாயம் செய்யும்
உழைப்பின்
ஒட்டுமொத்தஅடையாளம்
வி வ சா யி

(இடையில் எந்த முற்றுப்புள்ளி இல்லாமல் முதல் முயற்சியாக ஒரே வரியில் எழுதியது. இது கவிதையா அல்லது இது எண்ணமா என்பது தெரியவில்லை).

மேலும்

உண்மையான வரிகள் நட்பே!! ஒரு விவசாயின் மனக்குமுறல் இக்கவிக்குள் எதிரொலிக்கிறது மிகவும் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2015 9:04 pm
நன்றி தோழரே... உங்கள் கருத்து உற்சாகப் படுத்துகிறது, 17-Sep-2015 10:18 pm
நன்றி தோழமையே..உங்களைப்போன்றவர்களின் கருத்துக்களில் இன்னும் சிறந்தவற்றைப் படைத்திட நினைக்கிறது மனது. 17-Sep-2015 10:16 pm
சிறந்த பதிவு ........ 17-Sep-2015 6:58 pm
உதயகுமார் அளித்த படைப்பில் (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Sep-2015 8:49 pm

மனிதா ...

நீ பிறந்தது
சொந்தங்களின் பந்தங்ககளை
அலங்கரிக்கவா ...?

நட்பிற்கு
பெருமை சேர்த்தோரின் பட்டியலில்
முதன்மை இடத்தினை ஆட்சி செய்யவா ...?

காதலுக்காய் மனதினில்
உலகின் எட்டாம் அதிசியத்தை
அமைத்துவிடவா ...?

நீ மாய்ந்த பின்னும்
இன்னும் மலரா விழிகளுக்காக
உன் வாழ்வினை கதையாக்க

ஒவ்வொரு பாட்டியும்
உன் சரித்திரப் பக்கங்களை
புரட்டிப் பார்க்கவா ...?

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே 19-Sep-2015 9:35 am
நல்ல படைப்பு நண்பரே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2015 12:40 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே ... 17-Sep-2015 7:43 pm
அருமை 17-Sep-2015 4:12 pm
ராம்குமார் பாலு - ராம்குமார் பாலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2015 10:56 am

சொர்கம் , நரகம்
இரண்டுமே ஒரே பிறவியில்
பார்த்துவிட்டேன்..
நீங்கள் இருந்தபோதும், இல்லாதபோதும்.....

மேலும்

மனதை தொட்டன வரிகள்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 1:47 am
ஆறுதலுக்கு நன்றி !!!! 04-Sep-2015 4:39 pm
கவலை வேண்டாம்.. மறதியை போல் ஒரு மாமருந்து இவுலகினில் இல்லை.. சென்றவர் புண்ணியம் உம்மை சேரும்.. மனதை திடமாக்குங்கள்... 04-Sep-2015 4:05 pm
கருத்துகளுக்கு நன்றி. வலியின் வெளிப்பாடே இப்பதிவு.. 04-Sep-2015 2:06 pm
ராம்குமார் பாலு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2015 10:56 am

சொர்கம் , நரகம்
இரண்டுமே ஒரே பிறவியில்
பார்த்துவிட்டேன்..
நீங்கள் இருந்தபோதும், இல்லாதபோதும்.....

மேலும்

மனதை தொட்டன வரிகள்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Sep-2015 1:47 am
ஆறுதலுக்கு நன்றி !!!! 04-Sep-2015 4:39 pm
கவலை வேண்டாம்.. மறதியை போல் ஒரு மாமருந்து இவுலகினில் இல்லை.. சென்றவர் புண்ணியம் உம்மை சேரும்.. மனதை திடமாக்குங்கள்... 04-Sep-2015 4:05 pm
கருத்துகளுக்கு நன்றி. வலியின் வெளிப்பாடே இப்பதிவு.. 04-Sep-2015 2:06 pm

புலவன் என்பதன் எதிர்ப்பால் சொல் என்ன??

மேலும்

பதிலுக்கு மிக்க நன்றி நண்பா!!! 10-Apr-2015 11:56 am
புலமி தோழரே 10-Apr-2015 11:55 am
பதிலுக்கு மிக்க நன்றி நண்பரே!! 08-Apr-2015 4:58 pm
குறமகள் இளஎயினி காக்கைப்பாடினி என்பவர்கள் போல் புலவன் புலவினி ஆகலாம் ==================ருத்ரா "pulavini" 08-Apr-2015 2:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

user photo

பூர்ணிமா

திருச்சி
கிருத்திகா

கிருத்திகா

உடுமலை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை
user photo

பூர்ணிமா

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
கிருத்திகா

கிருத்திகா

உடுமலை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
மேலே