Susmitha Rajan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Susmitha Rajan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 0 |
ஜன்னலோரம் அமர்ந்து
சாரலை ரசித்தேன்,
என் மீது தெளித்த
சாரல் சிதறியது,
உன் நினைவாய் என்னுள்ளே...!
உன் நினைவைத் தூண்டி,
இயற்க்கையும்
இம்சை செய்கிறது...!
அஸ்தமிக்கும் சூரியன்
அருகினில் நீ,
வெட்கத்தில் சிவந்த வானம்
நடுங்கிய என் கைகள்
உதறிய என் வார்தைகள்...!
மறக்கவில்லை
அந்த நாளை,
இதுவரை முயற்சித்தும்
தோற்றுப் போகிறேன்,
தோற்கும் நிமிடம்
தொலைந்துப் போகிறேன்...!
என் கைகளில் படிந்த
உன் ரேகைகள்,
நம் கதைகள் சொல்லுதடி
தினமும்...!
என் செவிகள் மட்டும் கேட்கும்
சங்கீதங்களாய் உன் சிரிப்பு,
வெற்றிடமாய் இருக்கும்
உன் இதயத்திற்குள்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது...!
மண்ணில் தவழும் என் மடி மீன்..
பத்துமாத தவத்தில் பூத்த என் விண்மீன்..
உன் சேஷ்டைகளில் வேதனைகள் தான் மறந்திருக்கிறேன்..
உன் கொஞ்சல் மொழி கேட்கவே காத்திருக்கிறேன்..
ஒற்றை துளி உன் விழியில் கசிந்திடவே..
ஓராயிரம் முறை என் உயிரும் சிதைகிறதே..
புட்டிப்பால் கொடுத்து உன்னை வதைக்க மாட்டேனே..
பாசம் குழைத்து உனக்கு உயிரமுதூட்டி வளர்த்திடுவேனே..
மங்கையவள்
மலராய் மலர்ந்து
மணமுடிக்க காத்திருக்க..
பெண்ணவள் மனம்தனை மறந்து
பொன்னினை முன்னிறுத்தி
மணமுடிக்க முயற்சிக்கும்
வியாபார சங்கமமாய்
திருமணங்கள் இப்போது...
நிறம் வேண்டும்
மனம் வேண்டாம்..
பொன் வேண்டும்
பெண்ணின் குணம் வேண்டாம்...
வீடு வேண்டும்
அதில் அன்பு வேண்டாம்..
என்று பொருளினை மையப்படுத்தி
வணிகமயமாக்கப்பட்ட உலகில்
வியபாரமயமாக்கப்ப்பட்ட திருமணங்கள்...
உறவுகள் கூடி நடக்கும்
திருமணங்கள் நகர்ந்து,
கோடிகள் கூடி நடக்கின்றது...
இருமனம் இணையும்
ஓர் சடங்கு...
அதை மாற்றி
பணம் என்னும் சகதியில் இணையும்
பிணங்களாய் திருமணம்....
பெண்ணென்றால்
ஏன் இத
கத்தியின்றி ரத்தமின்றி
எனக்குள்ளே
யுத்தம் ஒன்று நடக்குதடி..
நீ இன்றி
கடக்கும் காலங்கள்
காயங்களை தருகுதடி..
சிரித்து திரிந்த
தருணங்கள் எல்லாம்
சோகம்தனை தெளிக்குதடி..
விரல் கோர்த்து
நாம் நடந்த சுவடுகளெல்லாம்
வேதனைகள் தருகுடடி..
கண்ணிரண்டில்
கத்தி வைத்து
கொல்கிறாய் என்னை..
கனவுகளில் வலிக்கிறது
அழுகிறேன் பச்சிளம் குழந்தையாய்
வலிகளை வருணிக்க வார்த்தைகள் ஏதும் இன்றி..
என்னை விட்டு
விலகி சென்றாய்
அதற்கு காரணங்களும் பல தந்தாய்..
ஆனால் உன்
நினைவுகள் மட்டும் என்னுள் நிலைத்து
நிலைகுலைய செய்யுதடி பெண்ணே..
பிறப்பின் அர்த்தம் அறிந்தேன் உன்னால்
ஆன
கத்தியின்றி ரத்தமின்றி
எனக்குள்ளே
யுத்தம் ஒன்று நடக்குதடி..
நீ இன்றி
கடக்கும் காலங்கள்
காயங்களை தருகுதடி..
சிரித்து திரிந்த
தருணங்கள் எல்லாம்
சோகம்தனை தெளிக்குதடி..
விரல் கோர்த்து
நாம் நடந்த சுவடுகளெல்லாம்
வேதனைகள் தருகுடடி..
கண்ணிரண்டில்
கத்தி வைத்து
கொல்கிறாய் என்னை..
கனவுகளில் வலிக்கிறது
அழுகிறேன் பச்சிளம் குழந்தையாய்
வலிகளை வருணிக்க வார்த்தைகள் ஏதும் இன்றி..
என்னை விட்டு
விலகி சென்றாய்
அதற்கு காரணங்களும் பல தந்தாய்..
ஆனால் உன்
நினைவுகள் மட்டும் என்னுள் நிலைத்து
நிலைகுலைய செய்யுதடி பெண்ணே..
பிறப்பின் அர்த்தம் அறிந்தேன் உன்னால்
ஆன
சிரித்துக் கொண்டே
அழுகின்றேன்..
பேசிக் கொண்டே
மௌனமாய் நிற்கின்றேன்..!
கூட்டத்தில் நின்று கொண்டே
தனிமையை உணர்கின்றேன்..
கண்ணீரிலும்
ஆறுதல் தான் தேடுகின்றேன்..!
கண்மூடி ஒரு கனம்
யோசித்தேன்..
அக்கனப்போழுதை
வார்த்தையாய் வரைகின்றேன்..!
புரியாமல் அறியாமல்
பேசி சென்றாய்,
வலிக்கவில்லை என்று
பொய் சொல்லி ஒதுங்கி நின்றேன்..!
உன்னை மறக்க நினைத்து
என் மனதை தயார் செய்தேன்..
என் மனதோ
என்னை வெறுக்க முடிவு செய்தது...!
புரிந்து கொள்ளாமல்,
பல நீ பேசினாலும்..
புரிந்து கொண்டு
பொறுமையாய் காத்திருக்க சொன்னது என் மனம்..!
வலி தரும்
வார்த்தைகள் பேசி செல்கிறாய்..
வலித்த
என்னை பற்றி
கவியெழுது என்று இதயம்
விரும்பியது...!
என்ன செய்துவிட்டேன்
எனக்கெதற்கு கவி என மூளை
விவாதம் செய்தது...!
என்ன செய்தேன் நான்...?
அனுதினமும்
அக்கிரமம் நிறைந்த உலகில்
அனுசரித்து அமைதியாய் செல்லும்
அற்ப வாழ்க்கை மட்டுமே வாழ்கிறேன்...!
கலவரங்களுக்கிடையில்
கண்களை மூடி
குருடனாய்
இருட்டினில் வாழ்க்கை...!
பிறந்தேன்...
பள்ளி பருவம் முடித்தேன்...
கல்லூரியில் நுழைந்தேன்...
வெளியேறினேன் நான்காண்டுகள் பிறகு...
வெற்றி பெற்றுவிட்டதாய்
எண்ணி கொண்டேன்...
இது வெற்றியா...???
"பகுத்தறிவு சொல்லித்தரா
ஒரு கல்வி.."
அதை கற்றதற்கு பெருமைப் படுவதா..?
இது சாதனை என்ற
இருள் சூழ்ந்த இவ்வுலகம்...
மௌனம் சுமந்த என் வரிகள்...
விளையா நிலமாய்,
ஒரு வெற்றிடம் நமக்கிடையே தோன்றிட... அவ்வெற்றிடத்தில் தொலைய தொடங்கிய நம் காதல்....
சுகங்களில் தவழ்ந்த நாட்கள்...
சுழன்று மாறிட...
"சோகங்களின் சுவடுகள் கொண்டு,
சுவாசிக்க துவங்கினேன்"
இது எனக்கு மட்டும் இல்லை,
என்னவளே உனக்கும் தானே...
"ஆணாய் பிறந்ததால் வலி மறைத்துக்கொள்வேன்,
பெண்ணாய் பிறந்து நீ படும் பாட்டை நினைத்து வருந்துகிறேன்"
உன் கண்ணீரிலோ,
இல்லை
என் கண்ணீரிலோ,
கரைந்து விடுமோ நம் காதல்..?
"நாம் போட்ட காதல் கணக்கு
பொய்யாகி...
காலத்தின் கணக்கில்
நம் காதல் சிக்கி சிதைந்ததே"
சிரித்
நண்பர்கள் (6)

சீர்காழி சபாபதி
சென்னை

சித்ராதேவி
விருத்தாச்சலம்

ஆய்க்குடியின் செல்வன்
ஆய்க்குடி - தென்காசி

mohamed usama
krishnagiri
இவர் பின்தொடர்பவர்கள் (6)
இவரை பின்தொடர்பவர்கள் (6)
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

காதல் சொன்ன...
kavithasan
30-Mar-2025

காதல் சொல்ல...
kavithasan
30-Mar-2025
