ந அலாவுதீன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ந அலாவுதீன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  16-Apr-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jun-2012
பார்த்தவர்கள்:  466
புள்ளி:  127

என்னைப் பற்றி...

தமிழ் மீது பற்று கொண்டவன். கவிதை இலக்கணம் தெரியாமலேயே கவிதை வடிவில் எண்ணியதை எழுத வேண்டும் என்று நினைப்பவன். வேதியியல் பட்டம் பெற்ற தனியார் நிறுவன ஊழியன். எழுத்து தளத்தில் ஈடுபாடு கொண்டவன். பணியின் நிமித்தம் அவ்வப்போது மட்டும் எழுத்து தளத்தில் தலை காட்டுபவன்.

என் படைப்புகள்
ந அலாவுதீன் செய்திகள்
ந அலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2019 3:17 pm

களிப்புற்று களைப்புற்று மீண்டு, மீண்டும்
களிப்புற்று களைப்புற்றுத் தொடரும் வாழ்வில்
களைப்பற்று களிப்புறும் தியானம் அறிந்து
களைப்பற்று களிப்புறும்நாள் எந்நாளோ?

மேலும்

ந அலாவுதீன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2019 8:54 pm

உறவென்ற நரவோடு தினமும் உழன்று
ஊர்மெச்ச வேண்டும் என்ற அவாவால்
உள்ளிருப்பதை வெளியில் காட்டாமல் மறைத்து
உத்தமனாய் காட்டி உலாவி.

நினைத்ததைப் போல் இல்லாமல் வெம்பி
வெளியில் கூறயியலாமல் அழுத்தி தெளிந்து
சோர்வாகி தலை வெடித்து தட்டுத்தடுமாறி
ஆசுவாசப் படுத்தி எழுந்து.

திறமை வளர்த்து சிறந்தவனாகி நிற்கையில்
இல்லறச் சுகத்திற்கு ஆட்பட்ட உடலால்
அடிமையாகி பெண்ணிடம் சிறைப்பட்டு சோர்ந்து
பலமிழந்து பாலகனுக்கு தந்தையாய்.

பட்ட பாடுகளால் படிப்பினை பெறாமல்
பற்பல துன்பங்களுக்கு பாதை அமைத்து
பரதேசியாய் திரிந்து பொருள் ஈட்டி
பிறப்பித்தவர்களுக்கு பிரித்து கொடுத்து.

உயிர்வாழ நினைக்கையில் உதிரம்

மேலும்

தங்கள் பார்வையிடலுக்கும் சிறந்த கருத்திற்கும் நன்றிகள் பல திரு.ந.அலாவுதீன் அவர்களே. 27-Dec-2019 11:22 am
நினைத்ததைப் போல இல்லா வாழ்வே இல்வாழ்வு. தனக்கென வாழாமல் தலைமுறைக்காக வாழ்பவர்களே தரணியில் அதிகம். தங்கள் கவிதையின் கருத்து மனதை தொட்டது. வாழ்த்துக்கள். 27-Dec-2019 9:05 am
ந அலாவுதீன் - ந அலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2019 6:44 pm

பெருமாளிடம் பக்தர்கள் கூட்டம்
மாலிடம் வாடிக்கையாளர் கூட்டம்

பெருமாளிடம் பக்தி சுரக்கிறது
மாலிடம் மகிழ்ச்சி பிறக்கிறது

பெருமாளிடம் கோரிக்கை வரம்
மாலிடம் கேளிக்கை வியாபாரம்

மனம் பேசுகிறது பெருமாளிடம்
பணம் பேசுகிறது மாலிடம்

தரிசிப்பவர் கும்பிடுவது பெருமாள்
தரிசிப்பவரை கும்பிடுகிறது மால்

நிறைய ஸ்தலங்கள் பெருமாளிடம்
நிறைய தளங்கள் மாலிடம்

கருட வாகனம் பெருமாளுக்கு
கரண்ட் வாகனம் மாலுக்கு

மனபாரம் இறங்குது பெருமாளிடம்
பொருள் பாரம் ஏறுது மாலிடம்

நடைசாற்றல் உண்டு பெருமாளிடம்
கடைசாற்றல் உண்டு மாலிடம்

லட்டு பிரசித்தம் பெருமாளிடம்
துட்டு பிரசித்தம் மாலிடம்

முடி கொடுக்கிறார்கள் பெருமாளிடம்
முடி த

மேலும்

ஆஹா fantastic ! 22-Dec-2019 9:15 am
சிறு வியாபாரிகள் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. தேவையான பொருளை சீட்டு எழுதிக் கொடுத்து வாங்குவதற்கும் நாமாக சென்று ஒவ்வொரு பொருளாக தேடி எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.பொருளை தேடும்போது நமக்குத் தேவையில்லாத பொருளையும் அல்லது எப்போதோ தேவைப்படும் பொருளையும் சேர்த்து வாங்கி வருகிறோம் என்பதே உண்மை நிலை. தங்கள் வாழ்த்துக்கு நன்றி. 19-Dec-2019 10:06 pm
உண்மையான நிலைக் குறித்து சிறந்த பதிவு 19-Dec-2019 8:37 pm
ந அலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2019 7:32 pm

புகை புற்றுநோயை உருவாக்கும்
குடிப்பது உடல் நலத்துக்கு கேடு
விளம்பரங்கள் பெரும்பாலும்
வியாபாரத்தை பாதிப்பதில்லை...

அவளுக்கும் மனசாட்சி இருக்கிறது
அவளும் எழுதி வைத்திருக்கிறாள்
அவள் வீட்டின் வரவேற்பறையில்...

அவளுக்கான வாடிக்கையாளர்கள்
கண்களில் பெரிதாய் படுமாறு
*எய்ட்ஸ் மிகக் கொடிய நோய்*

மதம் பிடித்தவர்கள் மனங்களில்
நுழைவதில்லை விளம்பரங்கள்...

மேலும்

ஆழமான வரிகள் தோழரே, அழகாக சொன்னிர்கள். 05-Jul-2020 11:31 am
ந அலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2019 6:44 pm

பெருமாளிடம் பக்தர்கள் கூட்டம்
மாலிடம் வாடிக்கையாளர் கூட்டம்

பெருமாளிடம் பக்தி சுரக்கிறது
மாலிடம் மகிழ்ச்சி பிறக்கிறது

பெருமாளிடம் கோரிக்கை வரம்
மாலிடம் கேளிக்கை வியாபாரம்

மனம் பேசுகிறது பெருமாளிடம்
பணம் பேசுகிறது மாலிடம்

தரிசிப்பவர் கும்பிடுவது பெருமாள்
தரிசிப்பவரை கும்பிடுகிறது மால்

நிறைய ஸ்தலங்கள் பெருமாளிடம்
நிறைய தளங்கள் மாலிடம்

கருட வாகனம் பெருமாளுக்கு
கரண்ட் வாகனம் மாலுக்கு

மனபாரம் இறங்குது பெருமாளிடம்
பொருள் பாரம் ஏறுது மாலிடம்

நடைசாற்றல் உண்டு பெருமாளிடம்
கடைசாற்றல் உண்டு மாலிடம்

லட்டு பிரசித்தம் பெருமாளிடம்
துட்டு பிரசித்தம் மாலிடம்

முடி கொடுக்கிறார்கள் பெருமாளிடம்
முடி த

மேலும்

ஆஹா fantastic ! 22-Dec-2019 9:15 am
சிறு வியாபாரிகள் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. தேவையான பொருளை சீட்டு எழுதிக் கொடுத்து வாங்குவதற்கும் நாமாக சென்று ஒவ்வொரு பொருளாக தேடி எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.பொருளை தேடும்போது நமக்குத் தேவையில்லாத பொருளையும் அல்லது எப்போதோ தேவைப்படும் பொருளையும் சேர்த்து வாங்கி வருகிறோம் என்பதே உண்மை நிலை. தங்கள் வாழ்த்துக்கு நன்றி. 19-Dec-2019 10:06 pm
உண்மையான நிலைக் குறித்து சிறந்த பதிவு 19-Dec-2019 8:37 pm
ந அலாவுதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2019 10:59 pm

மகள்- வாங்க சித்தப்பா என்ன திடீர்னு?

சித்தப்பா- இல்லம்மா ஊருக்கு ஒரு விஷயமாக வந்தேன்.அப்படியே போற போக்குல உன்னை ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு. அது சரி மாப்பிள்ளை எங்கே கிளம்பி ரெடியா இருக்கார்?

மகள்- அவர் போற போக்குல உங்களை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடலாம்னு
கிளம்பி ரெடியா இருக்கார்.

மருமகன்-போற போக்குல என்னை ஏண்டி கோர்த்து விடுற. ஒரு நாள் தங்கி இருந்துட்டு போகட்டுமே?

மகள் - இந்தாங்க உலகம் போற போக்குல அவங்கவங்க போற போக்குல விட்டறனும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தெரியுதா?

மேலும்

ந அலாவுதீன் - ந அலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2019 5:07 pm

காற்றடைத்த பையால் உருவானேன்
காற்றடைத்து நான்..
எனக்கென்று விதித்த வரையறையில்..

காயம்பட்டு
கசிய ஆரம்பித்தால்
கருகிவிடும் என் வாழ்க்கை..

ஓட்டையற்று இருக்கும் வரை
ஓட்டை உள்ள மனிதர்கள்
விரும்புகிறார்கள் என்னை...

உயிர்க்காற்றை நிறைத்து
உதைக்கிறார்கள் என்னை
உருண்டோடுகின்றேன் நான்..

இங்குமங்குமாய்
அலைக்கழிக்கிறார்கள்
சில நேரம் மெதுவாக
சிலநேரம் ஆக்ரோசமாக...

மாறிமாறி உதைத்தாலும்
வலி தாங்கும் இடிதாங்கியாக
பழகிவிட்டது என் வாழ்க்கை...

வழிமறித்து நிற்பவரின்
உட்புகுந்து செல்ல
உதைக்கிறார்கள்...

நிற்பவரின் கைகளில்
தஞ்சம் புகுந்தால்
மார்போடு அணைக்கிறார்
ஆறுதலாய் என்னை..

மேலும்

வாழ்க்கை எனும் விளையாட்டரங்கில் சில நேரம் உதைபடும் காற்றடைத்த பந்தாவோம், சில நேரம் உதைக்கும் வீரணவோம். சிறப்பான வரிகள். 05-Jul-2020 11:38 am
தமிழ் பேச்சை எழுத்தாக மாற்றும் தளம் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து நம்முடைய செல் மூலம் நாம் எழுத வேண்டியதை பதிவுசெய்து எழுத்து தளத்தில் காப்பி பேஸ்ட் செய்துவிடலாம். இது எளிதான வழி. என்னிடம் இப்போது கம்ப்யூட்டர் இல்லாததால் நான் இந்த முறையைத்தான் பின்பற்றுகிறேன். 15-Dec-2019 7:33 pm
நம்ம படைப்புகளை எவ்வாறு பதிவிடுவது?? 15-Dec-2019 6:14 pm
ந அலாவுதீன் - ந அலாவுதீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2019 6:51 pm

ஒத்த கருத்தோடு
ஒட்டி வாழ்வது
சமூகத்தில் எளிது.

மாற்றுக் கருத்தை
உற்ற கருத்தாய்
உருமாற்ற நினைப்பது
அவனியில் என்றும் பெரிது.

உற்ற கருத்தை
துணிந்து ஒலித்தவன் நீ...
மக்கள் நலம் வாழும்
மாற்றுக் கருத்தை
அவனியில் விதைத்தவன் நீ...

மண்ணில் மறைந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
அப்பா என்றதும்
பலசமயம்
நினைவில் வருகிறது உன் பா
ரதிஅழகின் உச்சம்
பாரதி பாட்டின் உச்சம்..

ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை பூமியில்
சமதர்மத்தை காட்டினாய்
இழிவு கொண்ட மனிதர்
இந்தியாவில் இல்லை என்று
சாதி மத பேதத்தை வெறுத்தாய்..

உயிர்கள் அனைத்தும் ஒன்று
உலகிற்கு உவமை காட்டினாய்
காக்கை குருவி எங்கள் ஜா

மேலும்

படைத்தவன் ஒருவனே. பிறரின் துன்பம் கண்டு மனம் வருந்தி அவர்களின் மேன்மைக்காக உழைப்பவர்கள் யாவரும் மேன்மக்களே. சாதிகள் இல்லையடி பாப்பா .பாரதி கூறியது தானே. 15-Dec-2019 10:13 am
அந்த பாரதியைப் பார்ப்பனன் என்று வேற்றுமைக் கிளர்ச்சி உண்டாக்கி ரசித்தார் அன்பர் கி. வீரமணி.. பாராட்டுவது அவர்க்கு பழக்கமில்லை. சும்மாவாவது இரு ந்திருக்காமல்லவா ? மக்களைப் பிரிக்கும் மாபாதக சண்டாளர்கள். பாரதி பார்ப்பனன் என்பது எல்லோரும் அறிந்தததுதானே .புதிதாக ராக்கெட் கண்டவன் போல் எகிறுகிறார். இதெல்லாம் எங்கு போய் முடியுமோ ? 15-Dec-2019 8:51 am
தங்கள் வாழ்த்துக்கு நன்றி. 12-Dec-2019 7:33 pm
அருமை 12-Dec-2019 6:15 pm
ந அலாவுதீன் - ந அலாவுதீன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2019 5:30 pm

உண்ணும் அழகைப் பார்த்து ரசித்து
தாமும் உண்டு மகிழ

உண்போரின் பின்னால்
ஒவ்வொருவரும் வரிசையாய்...

எப்போது எழுவார்கள்
என்கின்ற எதிர்பார்ப்போடு

சகஜமாய் காத்திருக்கின்றோம்
திருமண விழாக்களில்

பந்திக்கு முந்துதலின்
புதிய பரிமாணம்

மேலும்

உணவே உயிருக்கு மருந்து. மருந்திலும் சிறந்தது கல்யாண விருந்து. படைப்போ கவிஞர் ஆளுமையை காட்டுது சிறந்து . 09-Jan-2019 10:35 pm
புதிய பரிமாணம் மிக அழகு 09-Jan-2019 5:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (20)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (21)

மேலே