சீத்தாராமன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீத்தாராமன்
இடம்:  tiruvannamalai
பிறந்த தேதி :  27-Aug-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2016
பார்த்தவர்கள்:  248
புள்ளி:  6

என்னைப் பற்றி...

இன்னும் எழுதி முடிக்காத
என் கவிதையில்
நீண்டு கொண்டிருக்கிறது
நம் காதல்.. <3 <3

என் படைப்புகள்
சீத்தாராமன் செய்திகள்
சீத்தாராமன் - எண்ணம் (public)
24-Jun-2016 5:18 pm

நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய் ... !!

மேலும்

சீத்தாராமன் - sampath kolkata அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2016 8:38 pm

பெருமதில்கள் கொண்ட அரண்களைத் தாண்டி
நுரை தள்ளும் குதிரையில் வியர்த்து விறுவிறுக்க
வேகமாக வருகிரான் தமிழ் வீரனொருவன்
அரியணையில் அமர்ந்திருக்கும் அரசனிடம் பதற்றத்துடன்
தமிழினத்திற்கே ஆபத்து, கோட்டை நமதை
முற்றுகையிட்டு கைப்பற்ற வருகிறார் எதிரிகள் பலரும்
எனக்கூறி அவனும் கும்பிட்டு அகன்றான்

தமிழனித்தின் எதிரிகளின் இரத்தத்தை குடித்திட
ஏங்கும் பட்டைத்தீட்டிய வாட்களை உடனெடுத்து
பட்டறையில் பளபளக்கும் ஆயுதங்களை கையேந்தி
மறவர் வேள்வியில் பூசை செய்து படையலிட்டு
அரசனை அனுமதிக்க, அரசனும் தன்னறையில்
பால்மணம் மாறா மகனை இன்புடன் தழுவி
நாட்டை காத்திட, போருக்குப் புறப்பட்டான்

அன்புடன் அரசி கணவ

மேலும்

சங்க கால வீரத்தமிழர்களின் அழகு.., 16-Jun-2016 6:11 am
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Jun-2016 6:00 am
தமிழின் அடையாளம் என்றும் வீரியம் தான் 16-Jun-2016 6:00 am
இராசேந்திரன் அளித்த எண்ணத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jun-2016 10:38 am

கிராமியத்தின் தலை நகர பயணம்

திரைப்பட பாடலாசிரியர் திரு பிரியன் மற்றும் திரு அண்ணாமலை ஆகியோருடன்  சென்னை புத்தக கண்காட்சியில்  எனது படைப்பும் வெளியான "கவியாட்படை" நூல் வெளியீட்டு விழாவில். 

  
கிராமிய மூலையிலிருந்து முதன் முதலாக தலை நகரம் நோக்கிய பயணம் என் வாழ்வில் இன்னுமொரு உயரம். சென்னை புத்தக கண்காட்சியில் கீதம் பதிப்பகம் சார்பில் வெளியான ”கவியாட்படை” எனும் நூலில்  “எல்லாமே கவிதை” எனும் என் படைப்பும் இடம்பெற்றிருந்தது. பதிப்பக ஒருங்கிணைப்பாளர்   என்னை குடும்பத்தோடு விழாவில் கலந்துகொள்ளுங்கள் என்று மின்னஞ்சலில் அழைப்பு விடுத்திருக்க, பல பொருளாதார இடையூறுகளுக்கிடையில் கிராமம் விட்டு தலை நகரை நோக்கி முதன்முதலாக தொடர்வண்டி பயணம்.அற்புதமான அனுபவம். 


04.06.2016 அன்று தீவுத்திடலில் 3.00 மணிக்கு துவங்க வேண்டிய விழா சற்று தாமதானாலும் ஒவ்வொருவரின் கவிதைகளை அறிமுகப்படுத்திப் பேசியபோது என் படைப்பின் இருவரிகளை சிறந்ததாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றிச் சொன்னபோது வானில் பறந்தேன். 

”எல்லாமே கவிதை” எனும் தலைப்பில் இருந்த அந்த வரிகள் இதோ 

தனித்திருக்கும் வயலோர வேப்பமர அழகு கவிதை 
அதில் துணைபிரிந்த வேதனையில் கத்துங்குயிலோசையும் கவிதை 

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட திரைப்பட பாடலாசிரியர்கள் திரு பிரியன் மற்றும் திரு அண்ணாமலை ஆகியோரின் கைகளால் என் படைப்புடன் கூடிய அந்த நூலை வாங்கும்போது வானில் பறப்பதுபோன்ற உணர்வை அடைந்தேன். 

அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் நடந்த சிறு சந்திப்பில் என் படைப்பை காட்டியபோது ”கிராமியக் கவிஞர் என்றால் நீங்கள்தான் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்” என்று சொன்னபோது வானைத்தாண்டிய உற்சாகம். அந்த நூலில் இருவருமே கையெழுத்திட்டு தந்தனர். மேலும் பாடலாசிரியர் திரு அண்ணாமலை அவர்கள் தன் செல்பேசி எண்ணையும் தந்து தொடர்பு கொள்ளச் சொன்னபோது நான் கவிஞனாகி விட்டேனா .. அதற்கு தகுதியானவன் தானா என நினைக்க நினைக்க மனதுக்குள் எத்தனையோ எண்ணங்கள்..!. 

ஒருவேளை எனக்கும், திரைப்படத்துறைக்கும் ஏதோ ஒரு தொடர்பு ஏற்படுமோ என்று கூட எண்ணத்தோன்றியது. உண்மையில் ஏதோ ஒரு ஒன்றை சாதித்தது போன்ற மகிழ்ச்சி எனக்குள் பொங்கியது. சாதாரணமாக எழுதும் கவிதைக்கும், திரைப்படப்பாடல்களுக்கும் மாறுபட்ட வித்யாசம் இருப்பதை இரு பாடலாசிரியர்களும் சொன்னார்கள். அதுவும் திரைப்பட பாடல்கள் எழுத அவர்கள் எடுத்துக்கொண்ட பயிற்சிகள் பற்றியும், இவர்களின் இலாப நோக்கமற்ற எழுத்துப்பட்டறையில் கலந்துகொள்ளச் சொன்னபோதும் நான் சென்னையில் பிறக்கவில்லையே என்று மனதுக்குள் சிறுவேதனை அடைந்தேன். 

திரைப்படத்துறை என்பது சாதாரணம் என்பதில்லை முயற்சி இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொன்னார்கள். எழுதும் கவிதைகள், திரைப் படப்பாடலுக்கு வார்த்தைகளை கையாள ஒத்துழைக்கும். ஆனால் அதற்கும் இதற்கும் பல வேறுபாடுகள் என்றும் சொன்னார். எப்படி எழுத வேண்டும் என்று சொன்னபோது எனக்கும் ஆர்வம் பிறந்தது. அந்த விழா முடிந்தபின்னரும் நகர மனமில்லாமல் மெரினா கடற்கரை வழியாக மீண்டும் திரும்பியபோது ஒரு நாள் நீங்களும் பாடலாசிரியர் ஆவீர்கள் என்று அந்த கடற்கரை கடலைகள் ஒலிப்பது போன்று இருந்தது. ஆனால் அது எவ்வளவு கடினம் என்பதும் எனக்கு தெரியும். இருந்தாலும் முயற்சியை துவங்கப்போகிறேன். 

வீடு திரும்பும்போது தொடர்வண்டியிலேயே பாடலாசிரியர்கள் சொன்னபடி திரைப்படப்பாடல் பாணியில் பல்லவியை எழுதிவிட்டேன். அந்த பாடலின் பல்லவி இதோ 

ஆண்ட்ராய்ட் பெண்ணே... அழகிய தீவே 
ஆப்பிள் செல்போன் ரிங்டோன் நீயே 
ஆங்ரி பேர்டின் கோபம் ஏனோ 
அணைத்தால் வருமோ கிறக்கம் தானோ..? 

முழு பாடலையும் முடித்துவிட்டு அதை அவருக்கு அனுப்ப எண்ணியுள்ளேன். மேலும் அமெரிக்க மின்சஞ்சிகையில் ஒரு ஒப்பந்தம் மூலம் குழந்தைகள் பாடலை எழுத எனக்கு சந்தர்ப்பமும் வாய்த்திருக்கிறது. என் தமிழ் பாடல்கள் பிரெஞ்ச், செர்மானியம், ஆங்கிலம், இலத்தீன் என எல்லா மொழி பேசும் குழந்தைகளிடமும் தவழ்வதை நினைத்தால் சந்தோசமாக இருக்கிறது.மேலும் எல்லா மொழி குழந்தைகளிடமும் தமிழ் தவழவேண்டும் என்பது என் ஆசை.


மேலும்

உண்மைதான் தோழரே. என் உயரத்துக்கு காரணமே உங்களைப் போன்றோர்கள் என்பதை எங்கும் சொல்வேன்.அந்த விழாவுக்கு சென்ற ஆண்டு சென்றதை இந்த நாள் இன்னொரு விழாவில் கலந்துகொண்டு திரும்பி வந்து பதில் எழுதுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னை திரைத்துறைக்கு வரவைக்க ஊக்குவித்த திரு அண்ணாமலை அவர்கள் இன்று இல்லை என்ற சோகம் என் மனதை கனக்கச் செய்கிறது. த்ற்போதுதான் ஏறக்குறைய ஓரிரு மாதத்துக்கு முன் இந்த சிறுவயதில் இறந்துபோனார். என் வேட்டிக்கும் மதிப்புக்கொடுத்து அருகிலேயே வந்து கிராமத்தில் இருப்பவர்கள் நிறைய திரைத்துறைக்கு வரவேண்டும். அப்போதுதான் இன்னும் பல இயற்கை அழகை வார்த்தையில் கொண்டுவர முடியும் என்று உற்சாகப்படுத்தினார். கிராமத்தை மட்டுமல்ல எல்லாவற்றையும் எழுத முயற்சி எடுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப் படுத்திய கவிஞர் அவரின்றி என் பல்லவியும் அவரை நினைத்தபடி முடங்கிப் போய்விட்டது. 15-Nov-2016 10:25 pm
கிராமம்தான் இனிமையான இயற்கைச் செறிவுகளின் இருப்பிடம். அதை இந்த வயலோரக் கவிதை மூலம் சொன்னேன்.வாழ்த்துக்கு நன்றி தோழரே. 15-Nov-2016 10:00 pm
என் அன்பு நண்பரே! தாங்கள் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதற்கு இதைவிட ஒரு சான்று தேவையில்லை .அனுபவத்தை எழுத்துக்களில் கொண்டு படைப்புக்களில் சிறப்பவர் தாங்கள்.அதில் உயிர் இருப்பதால் மட்டுமே தாங்கள் படைப்புக்கள் தங்களை உயர்த்தியிருக்கிறது.தாங்கள் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டதில் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்.தாங்கள் இன்னும் நிறைய வெற்றிகளை எட்ட என்நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே! தூரம் தொலைவிலில்லை தொடருங்கள் தாங்கள் வெற்றிப்பயணத்தை !. நன்றி 13-Nov-2016 3:33 pm
வயலோர வேப்ப மரத்தினை போல உங்கள் எண்ணங்களை சுதந்திரமாக இவ்வுலகில் தவழவிடுங்கள் வாழ்த்துக்கள் 10-Jun-2016 12:14 pm
சீத்தாராமன் - எண்ணம் (public)
09-Jun-2016 7:07 am

உன்னிடம் சொல்ல வந்தும் சொல்லாமல் போன வார்த்தைகளின் வலிதான் நீ என்னிடம்
ரசிக்கும் புன்னகை...

மேலும்

சீத்தாராமன் - எண்ணம் (public)
28-May-2016 9:25 pm

தனிமையும் அமைதியும் அமிர்தம் போன்றது அதிகமாகிவிட்டால் நம்மை கொன்றுவிடும்..,

மேலும்

சீத்தாராமன் - எண்ணம் (public)
27-May-2016 7:21 pm

உன் நினைவுகளே என் கனவுகளாக..,


மேலும்

சீத்தாராமன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2016 10:17 am

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் நோட்டா ( NONE OF THE ABOVE மேலுள்ள
யாரும் இல்லை )ஐந்து லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று அதிருப்தி அல்லது எதிர்ப்பினை
சென்ற தேர்தலைவிட அதிகமாகப் பிரதிபலித்திருக்கிறது .
NOTA THY NAME IS NONE OF THE ABOVE
கேள்வி :
1. இது எதைக் கட்டுகிறது ?

2. 100 % வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ஆணையம் யாருக்குமே
வாக்களிக்காமல் செய்யும் நோட்டா சிந்தனை முற்றிலும் ஏற்புடையதா ?

3. இந்த நோட்டா வாக்காளர்கள் உள்ளத்திற்குள் நல்லதொன்றை தேர்ந்தெடுத்திருந்தால்
NARROW MARGIN --குறைந்த இடை வெளி வெற்றி தோல்விகளை மாற்றி அமைத்திருக்காதா ?

4. படு தோல்வ

மேலும்

வெற்றி தோல்வி அரசியல்வாதிகள் படும் பாடு . அதற்கு நோட்டா என்ன செய்யும் ... ? ---இது என்ன சிந்தனை அருண் ? நோட்டா பதிவாளர்கள் அந்தப் பொத்தான் இல்லாமல் இருந்தால் ஓட்டுச் சாவடிக்கு வராமல் இருந்திருப்பான். அப்படியே வந்தாலும் யாருக்காவது வாக்களித்திருந்தால் வேட்பாளர் வெற்றி தோல்விகள் மாறிப் போயிருக்கும் அல்லவா ? நோட்ட என்பது எச்சரிக்கை மணி ...எச்சரிக்கை மணி அவசியம் வேண்டும் ---ஒரு தொகுதியில் சுனாமிப் புயலாக அனைவரும் நோட்டாவில் பதிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் . யாருமே தேர்ந்தெடுக்கப் படவில்லை .மீண்டும் தேர்தலா ? சரி .நோட்டா பொத்தான் இல்லாமல் தேர்தல் நடத்த வேண்டிய வரும் . எச்சரிக்கை மணி யாருக்கு ? வேட்பாளருக்கா மக்களுக்கா ஆணையத்திற்கா ? மிக்க நன்றி அருண் வாலி அன்புடன், கவின் சாரலன் 26-May-2016 9:31 am
நோட்டவுக்கு உயிர் கொடுத்தால் நிற்கிற வேட்பாளனுக்கு பிராணன் போகிறது. ஓட்டுப் போட வா வா என்று அழைத்து யாருக்குமே ஓட்டில்லை என்ற பொத்தானையும் வைப்பது என்ன நியாயமா ? மிக்க நன்றி சீதா ராமன் அன்புடன்,கவின் சாரலன் 26-May-2016 8:56 am
வெற்றி தோல்வி அரசியல்வாதிகள் படும் பாடு . அதற்கு நோட்டா என்ன செய்யும் ... நோட்டா தேவை தான் ... நோட்ட என்பது எச்சரிக்கை மணி ...எச்சரிக்கை மணி அவசியம் வேண்டும் ... அதை அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்க வேண்டுமே தவிர எப்பொழுதும் அடித்து கொண்டிருந்தால் கவுன்ட்டர்(கவுண்ட )மணி ஆயிடும் திருமாவளவன் நின்ற தொகுதியில் 1000 நோட்டா பதிவாகியது என்று .. திருமாவளவனை விட யார் சிறந்தவர்கள் என்று தெரியவில்லை .. நானும் வாக்கு செலுத்துகிறேன் என்ற பேர்வழிகள் சிலர் இருப்பார்கள் .. அவர்களுக்கு இந்த நோட்டா இருக்கிறது இருந்துவிட்டு போகட்டும் ... !!! இது மக்கள் ஆட்சி.... 25-May-2016 5:46 pm
நோட்டாக்கு உயிர் கொடுக்க வேண்டிய ஒரு நிலை 25-May-2016 10:52 am

மாரிகால மழையினிலே
நனைந்தும் உதிராத
மலர் போன்ற கண்ணழகியே!
வெறுமையான தனது
இதயச்சுவடிகளில் உயிராகி
காதலெனும் இரேகை
தடவிய பொன் சிற்பமே!

இளவேனில் தென்றல் வீச
தளிர்கள் பந்தல் விரிக்க
தண்மையான போர்வைகளும்
என் மனதிலும் தீபம் ஏற்றுகிறது.

எல்லாப் புஷ்பமும் அழகு
ஆனால் எந்த புஷ்பமும்
உன்னை விட நயமில்லை.

உன் செல்லமான பாஷைகள்
உயிரை கொல்லும் இசையல்லவா?
இதயமெனும் கண்ணாடியில்
என் எண்ணங்கள் நிராயுதபாணியாக
கருமை நிற முகமூடியால்
மறைத்த கன்னம்
என் மனதில் நிழலாக தோன்றுகிறது.

உன் மீது கொண்ட காதல்
வியாதியாக கனவையும்
நலவையும் உணரத்தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும்
புதுமையாய

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-May-2016 2:55 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-May-2016 2:54 pm
உங்கள் ரசிப்பு என்னை வியக்கச் செய்கிறது..புதுமைகளை கூட மரபில் இணைத்து நோக்கும் கண்ணோட்டம் உங்கள் தமிழின் காதலை எனக்கு சொல்லித்தருகிறது..இலக்கியம் என்பது வேலி இலக்கணம் என்பது வெளி இரண்டுக்குமிடையில் பறக்கும் எல்லையில்லா வானத்தின் காதலன் கவிஞன் என்பதை உங்கள் இனிமையான மொழியின் கிராமியல் கலை என்றும் எனக்குள் சொல்லிக் கொண்ட இருக்கிறது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-May-2016 2:54 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-May-2016 2:51 pm
சீத்தாராமன் - பாரதி மீனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2016 1:49 pm

#தனிமையில் இருக்க பழகி கொள்கிறேன்.....
ஏனெனில்............
இதுதான் #நிரந்தரமென்று புரிந்து விட்டது...!!

மேலும்

நன்றி mohamed sarfan 26-May-2016 5:24 pm
அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 6:59 pm
சீத்தாராமன் - சீத்தாராமன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2016 1:53 pm

சாதி வெறி பிடித்த சமுதாயத்தின் எதிர்ப்பால் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் இறந்தது ‪#‎காதல்‬

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

புகழ்விழி

புகழ்விழி

கும்பகோணம்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (20)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (20)

மேலே