மதுரகவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மதுரகவி
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Apr-2015
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  4

என்னைப் பற்றி...

எனது பெயர்.கழுகரை.ந.கார்த்திகேயன். நான் தமிழை பழனியில் பயின்றேன். இப்பொழுது மத்திய அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன்.

என் படைப்புகள்
மதுரகவி செய்திகள்
மதுரகவி - மதுரகவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2015 8:51 pm

நேற்று
கொட்டித்தீர்த்த மழையில்
முளைத்த காலன்
நிற்பது கம்பீரம் தான்
வீழும் வரை!

பாலைவனக் கானல் நீர்
செல்வம் இருப்பது போல்
மாயை காட்டும்
பின்னர் மறையும்!

மழை சாரலின்
வானவில் அழகுதான்- நொடியில்
மறையும்!

மேலும்

மதுரகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2015 8:51 pm

நேற்று
கொட்டித்தீர்த்த மழையில்
முளைத்த காலன்
நிற்பது கம்பீரம் தான்
வீழும் வரை!

பாலைவனக் கானல் நீர்
செல்வம் இருப்பது போல்
மாயை காட்டும்
பின்னர் மறையும்!

மழை சாரலின்
வானவில் அழகுதான்- நொடியில்
மறையும்!

மேலும்

மதுரகவி - G. Madhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2015 11:23 am

நீதிமன்றத்தில்
வழக்கொன்று
வாதத்திற்க்கு வந்தது
உண்மையை காணவில்லையென்று

பொய்கள்
ஒன்றுக் கூடி
வாதிட்டன
உண்மை நாங்களென்று

காணாமல் போன
உண்மையை கண்டுபிடிக்க
உத்தரவிட்டார் நீதிபதி

பொய்கள் கூடி பேசி
தங்களுக்குள்
உயர்ந்த பொய்யை
உண்மை வேடமிட்டு
கூட்டி வந்தனர்....

பொய்களின்
வாதபலத்தால்
உண்மை கிடைத்ததாய்
தீர்ப்பு வாசித்தார் நீதிபதி

பொய்கள் கூடி
நீதிபதிக்கு வாழ்த்துரைக்கையில்

தன்
கண் கட்டை அவிழ்த்து
தராசினை தூர எறிந்துவிட்டு
நீதிமன்றம்
விட்டு வெளியேறினால்
நீதி தேவதை.....

பாண்டிய இளவல்(மது. க)

மேலும்

அருமை.. 23-Jun-2015 11:36 pm
நல்ல கவிதை , பொருள் , நடை தோழரே ..எழுத்து பிழைகளை திருத்திக் கொள்ளுங்கள் . தொடருங்கள் 20-May-2015 7:47 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-May-2015 8:13 pm

அவன்,
கந்தலான
கச்சைக்காரன் !
சோற்றின் மீது
இச்சைக்காரன் !
சுருங்கச் சொன்னால்
பிச்சைக்காரன் !

அவன்,
ஒவ்வொரு வேளையும்
உணவுக்காக
வெம்புகிறான் !
எப்படியும்
மகேசன்
படியளப்பானென்று
நம்புகிறான் !

அவனுக்கு,
வாழ்வென்பது
காற்றிலாடும்
ஊசல்தான் !
வயிற்றுக்கும்
அவனுக்கும்
அனுதினமும்
பூசல்தான் !
அவன்,
வசிப்பிடம்
ஒரு தேநீர்க்கடை
வாசல்தான் !

அவன்,
ஒரு நாளும்
குளித்ததில்லை !
சோறுண்ண
யாரும் அவனை
விளித்ததில்லை !
வயிறார
அவனும் உண்டு
களித்ததில்லை !.

உடம்பில்
இல்லை
முடம் !
இன்னும்
இருக்கிறது
திடம் !
ஆனாலும்,
உழைப்பு கூடாதென்று
அவனுக்கு ஓர்
அடம் !

தொடக்கத்தில்

மேலும்

// ஒரு பிச்சைகாரனிடம் இந்த கவிதையை படித்துக் காட்ட வேண்டும் என்று .... // இந்தப் படைப்பின் நாடி நரம்பு ரத்தம் சதை யாவும் யாசிப்பது இதைத்தான் ........! எனினும் நான் சற்று பயந்த சுபாவம் என்பதால் பிச்சைக்காரர்களிடம் செல்ல பயமாக உள்ளது ... ஒருமுறை கும்பகோணம் சூரியனார் கோவிலுக்குப் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது கையேந்தி நின்ற ஒரு சிறுவனுக்குப் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு இளையராஜா பாடலொன்றை முணுமுணுத்தபடியே நடந்து கொண்டிருந்தேன் .....சற்று நேரத்தில் என்னைச் சுற்றி ஒரு புழுதிப் படலம் கிளம்பியது ..உற்றுப்பார்த்தால் பத்துப் பதினைந்து பேர் என்னைச் சூழ்ந்து கொண்டு கையேந்திக் கொண்டிருந்தார்கள் ............ அகவே கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி ...... 22-May-2015 6:02 pm
சொந்தமில்லாதவனுக்கு சந்தம் சேர்த்து கவிதை எழுதிய அண்ணா க்ரிஷ்ணதேவின் வரிகள் யாவும் நெருங்கிய சொந்தமானது அவனுக்கு ....எனக்கு ஒரு வருத்தம் சூழ்ந்து விட்டது எப்படியாவது ஒரு பிச்சைகாரனிடம் இந்த கவிதையை படித்துக் காட்ட வேண்டும் என்று .... தாழ்த்தி உயர்த்தி உயர்த்தி தாழ்த்தி மொத்தத்தில் வாழக்கையில் யாவரும் கடந்து வருகிறேன் அந்த தொழிலை செய்துதான் என்று முடித்திருபதும் கூட அவனுக்கு சாதகமாக அழகு அண்ணா ... 22-May-2015 3:34 pm
ம்ஹூம் .........அது நடக்காது .....நடக்கக்கூடாது .........! இம்மாத தேர்வுப் பட்டியலில் நான் எதிர்பார்த்த ......தாகு ......ராம்வசந்த் ..........சரவணா ........சேயோன் யாழ்வேந்தன் .....சற்றுத் தேவலாம் போல இருக்கிறது .......! 21-May-2015 10:45 pm
அதுதானே வேண்டும் தோழி ............ தங்கள் கருத்தும் அந்தளவுக்கு அதீத மகிழ்வைத் தருகிறது நன்றிகள் 21-May-2015 10:39 pm
மதுரகவி - மலர்91 அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

---------------------------
எழுத்து நண்பர்களே,
சில ஆண்டுகளுக்கு முன்பே மேலே உள்ள வரிகள் என் மனதில் வேரூன்றியது. என்னால் அதன் தொடர்ச்சியை எழுதமுடியவில்லை. விருப்பம் உள்ளவர்கள் அந்த வரிகளை ஒரு முழுமையான கவிதையாக்குங்கள். எழுத்து ஆசிரியர் குழு நல்ல படைப்புகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பரிசு கிடையாது. பாராட்டு மட்டுமே கிட்டும்

மேலும்

முடிவை அறிவிக்கும்படி ஆசிரியர் குழுவையே வேண்டியிருந்தேன். அவர்களுக்கு மடல் அனுப்புகிறேன் 31-May-2015 12:43 pm
முடிவு அறிவிக்கப் படவில்லையே இன்னும்! 31-May-2015 12:10 pm
நன்றி நண்பரே 21-May-2015 1:52 pm
இவ்விதமான போட்டிகளால் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அமையும். 20-May-2015 8:19 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Apr-2015 9:48 am

அப்பாவுக்கும்
சித்தப்பாவுக்கும்
ஆகாது
சின்னச் சின்ன
சண்டைகள்
சின்னச் சின்ன
உரசல்கள்
எப்போதும்
இருந்து கொண்டிருக்கும்
அப்பாவுக்குத்
தெரியாமல்
சித்தப்பா வீட்டில்
டிவி பார்ககப்போவோம்
நானும்
தங்கையும்
ஒரு
சொத்துப் பிரச்சனையில்
வாய்ச்சண்டை முற்றி
அரிவாள் எடுத்து
வெட்டப்போனார்
சித்தப்பாவை
அப்பா
அவ்வப்போது
இழையோடிக்கொண்டிருந்த
பேச்சுவார்த்தையும்
அதன்பிறகு
முற்றிலும் அறுந்துவிட
தங்கையின்
திருமணப் பத்திரிகையில்
மறக்காமல்
விடுபட்டுப்போனது
சித்தப்பாவின் பெயர்
ஓடிப்போயின
பத்து வருடங்கள்
அப்படியே
சித்திக்குப்
பேசிவிட ஆசைதான்
சித்தப்பாத

மேலும்

சிறப்பான படைப்பு 04-May-2015 3:52 pm
சிவப்பாக வழிந்தது சித்தப்பாவின் பாசம் ! // மரணங்கள் மனிதரை உணரவைக்கும் , கவி உணர்த்தியது தேவ், வாழ்த்துக்கள் // 01-May-2015 11:45 pm
மரணம் இணைத்துவிடுகிறது சொந்தங்களை ! இன்னும் "அன்பு" உயிர்த்திருப்பதை நினைவூட்டி ! 29-Apr-2015 10:59 am
உணர்வுகளின் உணர்வாக நிறைகிறது வெ. ரா தங்கள் கருத்து .......... வருகையில் மகிழ்ந்தேன் ........! 29-Apr-2015 9:43 am
மதுரகவி - எண்ணம் (public)
27-Apr-2015 11:03 pm

எனது கவிதையைப் படித்தவுடன் தங்களது கருத்தினைத் தெரிவிக்கவும்.

மேலும்

ராம்? "எஎமகாத கள்" ரம்முக்கு பழிவாங்கலா? 28-Apr-2015 1:07 pm
இ இ இ ..........! எனினும் ராம் இந்த எண்ணத்தில் இருக்கும் அப்பாவித்தனம் என்னை ஈர்த்தது ....! 28-Apr-2015 10:34 am
உங்கள் சித்தப்பா மாதிரி ..இதை படித்து விழுந்ததில் எனக்கும் தக்காளி சட்னி ...தேவ் நீர் ஒரு எமகாதகள் . 28-Apr-2015 10:29 am
நீங்கள் இவ்வளவு வெள்ளந்தியாகப் பேசுவது எனக்குப் பிடித்திருக்கிறது நண்பா ..... 28-Apr-2015 10:22 am
மதுரகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2015 10:50 pm

எங்கே போனது
பரிதி உதயமாகும்
முன்னெழும் பழக்கம்
எங்கே போனது?

இல்லம் வருவோர்
மனம் குளிரும்படியான
விருந்தோம்பல்
எங்கே போனது?

சுற்றம் சூழ
அகமும்,புறமும்-மகிழ
கொண்டாடிய பண்டிகைகள்
எங்கே போனது?

அகண்ட ஆறுகளும்
அதன் வழி வந்த
கால்வாய்களும்
எங்கே போனது?

சுட்டெரிக்கும்
வெய்யிலின் தாக்கம்
தணிக்கும் மரங்கள்
எங்கே போனது?

மண்ணைப் பொன்னாக்கி
கொடுத்த விளைநிலங்கள்
எங்கே போனது?

எங்கே போனது?
ஐந்தாண்டுகளுக்கு கொருமுறை
வாக்கு சேகரிக்கும்
அரசியல்வாதி கைகளிலும்
அதிகாரம் செய்யும்
அதிகாரிகளிடத்தும்
விஞ்ஞான வளர்ச்சி கண்டு
மயங்கிக் கிடக்கும்
மக்களால

மேலும்

இழந்தவற்றை நினைவூட்டும் கவிதை அருமை. 28-Apr-2015 4:08 pm
மதுரகவி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2015 10:08 pm

பரிதி உதயமாகும்
முன்னெழும் பழக்கம்
எங்கே போனது?

இல்லம் வருவோர்
மனம் குளிரும்படியான
விருந்தோம்பல்
எங்கே போனது?

சுற்றம் சூழ
அகமும்,புறமும்-மகிழ
கொண்டாடிய பண்டிகைகள்
எங்கே போனது?

அகண்ட ஆறுகளும்
அதன் வழி வந்த
கால்வாய்களும்
எங்கே போனது?

சுட்டெரிக்கும்
வெய்யிலின் தாக்கம்
தணிக்கும் மரங்கள்
எங்கே போனது?

மண்ணைப் பொன்னாக்கி
கொடுத்த விளைநிலங்கள்
எங்கே போனது?

எங்கே போனது?
ஐந்தாண்டுகளுக்கு கொருமுறை
வாக்கு சேகரிக்கும்
அரசியல்வாதி கைகளிலும்
அதிகாரம் செய்யும்
அதிகாரிகளிடத்தும்
விஞ்ஞான வளர்ச்சி கண்டு
மயங்கிக் கிடக்கும்
மக்களால்
தொலைந்து போனது..................?

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
மேலே