Thenmozhi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thenmozhi
இடம்:  Vellore
பிறந்த தேதி :  21-Oct-1978
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Jan-2013
பார்த்தவர்கள்:  316
புள்ளி:  11

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழ் ஆசிரியர். தமிழ் மீது காதல் உண்டு. அதைப்போலவே சமூகத்தின் மீது அக்கறையும் உண்டு . பிறந்தோம் வாழ்ந்தோம் என இல்லாமல் நாம் சமூகத்திற்கு நன்மை அளிக்கும் செயல்களை செய்ய வேண்டும்.

என் படைப்புகள்
Thenmozhi செய்திகள்
sivagiri அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2014 5:07 pm

தள்ளாடும் வயது ...
நரைத்திருந்த தலைமுடி ...
அடர்ந்திருந்த வெள்ளை தாடி ...
கையில் கோல் ஊன்றி ,
கண்களை சுருக்கி ..
வீட்டிற்க்குள் எட்டி பார்த்தார் ....
அந்த கிழவன் !

"அம்மா ... ஐயா..."
என்றொரு கனீர் குரல்!
பார்த்தவுடனே மறைந்து கொண்டேன்!

ஏன் அப்படி செய்தேன் ...?

இரப்பவர்களை கண்டுகொள்ளாமல் போவது
நமது உயிருக்குள்
ஊன்றி போய்விட்டதா ?
உதவும் எண்ணம் ஊனமாகிவிட்டதா ?

"ஐயோ பாவம் " என்று
மனது சொல்ல ,
அதை கடந்து போவோம் என்று
புத்தி சொல்ல !

மனிதம் மறந்து
இரக்கம் இறந்து
இந்த தந்திர உலகில்
நானும் ஓர் எந்திரமானேன்!

அந்த ஏழை கிழவனின் கண்களின் வழியே...
இந்த சிறைஉலகை ஒரு க

மேலும்

கடைசி வரியில் அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள் ! மிகவும் நன்றி சகோதரி :) 14-Mar-2014 12:38 pm
people are thinking If they have some more money they would like to spend to purchase some things (used are useless - accessories) nobody is thinking to spend who are all poor. koduthu petra inbathai anubavithavargalukku thaan theriyum. 14-Mar-2014 9:58 am
மிகவும் நன்றி தோழரே ! :) 10-Mar-2014 11:13 am
மிக மிக அருமை ..... 07-Mar-2014 8:50 pm
Thenmozhi - Thenmozhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 3:23 pm

வானம் பொய்த்தாலும்
புவி தன் ஈர்ப்பை குறைப்பதில்லை
வண்டு வர மறந்தாலும்
கொடிகள் பூப்பதை மறப்பதில்லை
நீ காணாவிட்டாலும்
உன் மீதான என் காதல் மறைவதில்லை
தன் இணைக்காக காத்திருக்கும்
நிலவை போல...
நானும் காத்திருப்பேன் உனக்காக .....................

மேலும்

நிலவு யாருக்காக காத்திருக்கிறது? 05-Aug-2014 1:31 pm
காதலில் காத்திருப்பு சுகமானதே..! 14-Mar-2014 7:45 pm
Thenmozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Mar-2014 3:23 pm

வானம் பொய்த்தாலும்
புவி தன் ஈர்ப்பை குறைப்பதில்லை
வண்டு வர மறந்தாலும்
கொடிகள் பூப்பதை மறப்பதில்லை
நீ காணாவிட்டாலும்
உன் மீதான என் காதல் மறைவதில்லை
தன் இணைக்காக காத்திருக்கும்
நிலவை போல...
நானும் காத்திருப்பேன் உனக்காக .....................

மேலும்

நிலவு யாருக்காக காத்திருக்கிறது? 05-Aug-2014 1:31 pm
காதலில் காத்திருப்பு சுகமானதே..! 14-Mar-2014 7:45 pm
TP தனேஷ் அளித்த கேள்வியில் (public) sankaran ayya மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Mar-2014 1:03 am

இலக்கியங்கள் பலகாதலை கூறினாலும் நம் பாவனையில் இருப்பது இருதலைக்காதல்,ஒருதலைக்காதல்
எனவேதான் தங்களிற்கு தெரிந்த காதல் வகைகை சொல்ல முடியுமா தோழர்களே ???
இது உங்கள் புலமைக்கு விடுக்கும் சவால் அல்ல என் அறிவுப்பசிக்கு கேட்கும் உணவு!!!

மேலும்

நினைவிற்கு வந்தவை உங்களுக்காக ..... 1. குறிஞ்சி --புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்) 2. பாலை --பிரிதலும் பிரிதல் நிமித்தமும் 3. முல்லை --இருத்தலும் இருத்தல் நிமித்தமும் ( காத்து இருத்தல்) 4. மருதம் --ஊடலும் ஊடல் நிமித்தமும் 5. நெய்தல் --இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்) மேலும் தெரிந்தால் கூறுகிறேன் தங்களுக்கு தெரிந்தாலும் கூறுங்கள் தோழர்களே ... 25-Mar-2014 6:47 pm
நன்றி சாரலன் 14-Mar-2014 8:36 pm
சங்க இலக்கியத்திலிருந்து வள்ளுவன் கம்பன் புகழேந்தி இளங்கோ இன்னும் பலர் இருதலைக் காதலைச் சொல்லியிருக்கிறார்கள் அதையெல்லாம் சுருக்கமாகச் சொன்னாலும் சில கட்டுரைத் தொடராக விரியும். இவைகளைப் படிப்பார் இல்லை கம்பனில் ஒருதலைக் காதல் ---சூர்பனகை ராமன் மேல் மையல் கொண்டு மூக்கு அறுபட்டது சூர்பனகையினால் ராவணன் சீதைமேல் கொண்டது ஒரு தலைக் காதல் . அண்ணன் தங்கையின் ஒருதலைக் காதலின் அட்டகாசத்தால் இனிய இருதலைக் காதலர் வாழ்வில் கண்ணீர் பெருகி ஓடியது வில்லின் வீரத்தால் காதலியின் கண்ணீரைத் துடைத்தான் காவிய நாயகன் ராமன் அகப் பொருள் இலக்கியம் காதலின் பல வகைகளைக் காட்டும் நூலகத்தில் தேடுங்கள் கிடைக்கும் . பின் இங்கு வந்து எங்களுடன் பகிருங்கள். காத்திருக்கிறோம். சிலப்பதிகாரம் ---முக்கோணக் காதல் . ஐம்பெரும் காப்பியங்களில் காதல் சொல்லப்பட்டிருக்கிறது . அவை எவை ?வலையில் கிடைக்கும் . இப்போதைய ஒருதலைக் காதல் : மனக் கடிதம் தினமும் எழுதுகிறேன் உனக்கு மௌனத்தில் உள்ளே கண்ணீர் சிந்துகிறேன் ! ----அன்புடன், கவின் சாரலன் 13-Mar-2014 9:55 pm
மகிழ்ச்சி நண்பர்களே ! நீங்கள் கூறுவது யதார்த்தமானதாக உள்ளது இருந்தும் நான் கேட்பதோ இலக்கியங்களில் கூறப்படும் காதல் வகைகளை சொல்லமுடியுமா என்று? 13-Mar-2014 5:36 pm
Thenmozhi - shanthi-raji அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 11:22 pm

ஆழ்மனதின்
வருத்தம் வெளியே
தெரியாமல் பொத்தி பொத்தி வைத்து
புன்னகைப்போரிடம் புன்னகை.....
சிரிப்பவரிடம் சிரிப்பு...

மனக்குமுறல்களை
அணை போட்டு
கட்டி வைத்திருப்பதால்
பார்ப்பவர் அனைவரிடமும்
வாங்கிய ஒரே பெயர்
சிரித்த முகம்...சீதேவி
என்ற சிறப்பு பட்டம்...

ஆனால் என்றேனும்
ஓர் நாள் தெரிய வரும்...

ரத்தக் குழாய்களில் ஏற்படும்
அழுத்தம் தாங்காமல்
நரம்புகள் சிதறும் அளவு.....

இதய அடைப்பு வரும் போது
எத்தனை வேதனை சுமந்தேன் என்பது??

மேலும்

நன்றி தோழமையே ஆறுதலுக்கு 22-Mar-2014 9:01 pm
புரிகிறது தோழி! 11-Mar-2014 11:02 pm
அப்படி என்று நம்பிக்கொள்ள வேண்டியதுதான் என்ன செய்வது??கருத்துக்கு நன்றி தோழமையே 11-Mar-2014 10:38 pm
நன்றி தோழமையே 11-Mar-2014 10:38 pm
Thenmozhi - Thenmozhi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2014 10:31 am

தேர்தலில் நிற்க குறிப்பிட்ட தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். கல்வி - வயது - நல்ல பண்பு - சமூக அக்கறை - உதவும் மனப்பான்மை - பொது தொண்டில் நாட்டம் இதை பற்றி தங்களுடைய கருத்து?

மேலும்

Kasu, Panam, Mani, dhuttu 11-Mar-2014 4:03 pm
ஹி...ஹி...ஹி... அப்படி பார்த்தல் தேர்தலில் நிற்க ஆளே கிடைக்காது..! ஆமாம்..அனைவருமே வாக்காளர்களாக இருந்தால்..????? 07-Mar-2014 3:55 pm
vanakkam thangaludaya karuththil migundha udanpaadu thozhare. nandri . 07-Mar-2014 2:58 pm
நீங்கள் சொன்ன அத்தனை தகுதிகளும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பவருக்கு வேண்டும்... ஆனால் வெற்றி பெறுவோருக்கு இந்த தகுதிகள் போதாது... இதற்கு நேர் மாறான தகுதிகள் உடையவரே வெல்கிறார்... இது மாற வேண்டும்....! 07-Mar-2014 1:47 pm
Thenmozhi - கேள்வி (public) கேட்டுள்ளார்
07-Mar-2014 10:31 am

தேர்தலில் நிற்க குறிப்பிட்ட தகுதிகள் அவசியம் இருக்க வேண்டும். கல்வி - வயது - நல்ல பண்பு - சமூக அக்கறை - உதவும் மனப்பான்மை - பொது தொண்டில் நாட்டம் இதை பற்றி தங்களுடைய கருத்து?

மேலும்

Kasu, Panam, Mani, dhuttu 11-Mar-2014 4:03 pm
ஹி...ஹி...ஹி... அப்படி பார்த்தல் தேர்தலில் நிற்க ஆளே கிடைக்காது..! ஆமாம்..அனைவருமே வாக்காளர்களாக இருந்தால்..????? 07-Mar-2014 3:55 pm
vanakkam thangaludaya karuththil migundha udanpaadu thozhare. nandri . 07-Mar-2014 2:58 pm
நீங்கள் சொன்ன அத்தனை தகுதிகளும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பவருக்கு வேண்டும்... ஆனால் வெற்றி பெறுவோருக்கு இந்த தகுதிகள் போதாது... இதற்கு நேர் மாறான தகுதிகள் உடையவரே வெல்கிறார்... இது மாற வேண்டும்....! 07-Mar-2014 1:47 pm
Thenmozhi - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Mar-2014 3:39 pm

அரசாங்கத்தில் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இருக்கும் பணியை ராஜினாமா செய்வது சரியா? தவறா?

இப்போது செய்யாமல் கல்வி ஆண்டின் இடையில் ராஜினாமா செய்ய இயலாது.

TET - ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் நிலை கேள்விக்கு உரியது.

மேலும்

அது ஏற்கனவே எந்த பணியில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தது. ஆசிரியர் அல்லாத பணி என்றால் ராஜினாமா செய்து காத்திருக்கலாம். ஆசிரியர் பணி என்றால் அரசாங்க ஆசிரியராகத்தான் இருக்கனுமா என்ன ? . ஆசிரியர் பணி என்பது உயர்வானது. அதை இப்படிப் பிரித்துப் பார்ப்பது தாழ்வானது. வெறும் சம்பளத்திற்காக மட்டும் அதிலும் அரசாங்க சம்பளத்திற்காக மட்டும் ஆசிரியர் படிப்பு அதிக செலவு செய்து படித்தவராக இருந்தால் அதற்கு அரசியலில் போய் சேர்ந்திருக்கலாம். அங்கு இதை விட வருமானம் அதிகம். வக்கத்தவன் வாத்தி. போக்கத்தவன் போலீஸ் என்ற வழக்குச் சொல் எதனால் வந்ததோ தெரியவில்லை.ஆனால் இப்போது அதற்குத்தான் மவுசு அதிகம். காலம் விரைவில் மாறும். இதில் 60 சதவீதம்கூட மதிப்பெண் வேண்டாம் என்று கொடி வேறு பிடிக்கிறார்கள். இவர்கள் எப்படி 100 சதவீத மதிப்பெண் எடுக்க குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை. இவர்கள் முதல் நாள் நூலைப் பார்த்து மனப்பாடம் பண்ணி மறநாள் மாணவர்களிடம் வாந்தி எடுப்பார்கள் போல. அதை அள்ளிக் கொண்டு மாணவர்கள் மனதில் வைத்து ஆண்டு முடிவில் தேர்வு வரை ஞாபகம் வைக்க வேண்டும். தலைவிதி. இதுக்குப் பதிலாக 2 ஆம் வகுப்பு மாணவமாணவியை 1 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தச் சொல்லலாம்.நமது வரிப்பணமாவது மிஞ்சும். நல்ல கேள்வி கேட்டமைக்கு நன்றி தோழமையே. 06-Mar-2014 12:07 am
கிடைத்தவுடன் ராஜினாமா செய்வது நலம்... 05-Mar-2014 6:39 pm
Thenmozhi - ரம்யா எம் ஆனந்த் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 9:14 am

மறப்போம் - மன்னிப்போம் இதில்
மறக்க வேண்டியவை எவை ?
மன்னிக்க வேண்டியவை எவை?
மறக்க கூடாதது எவை ?
மன்னிக்க முடியதவை எவை? தங்கள் எண்ணங்களை பகிருங்கள் நண்பர்களே ..!!

மேலும்

மறக்க வேண்டியவை:- நாம் பிறர்க்குச் செய்த உதவிகள். மறக்கக் கூடாதவை:- பிறர் நமக்குச் செய்த உதவிகள். மன்னிக்க வேண்டியவை:- பிறர் அறியாமல் செய்த தீமைகள் மன்னிக்கக் கூடாதவை:- துரோகம், நம்ப வைத்துக் கழுத்தறுத்தல், திட்டமிட்ட மோசடி ... 04-Mar-2014 9:42 am
தங்கள் கருத்துக்கு நன்றி சகோ'ஸ் 03-Mar-2014 7:42 pm
நாம் பிறருக்கு செய்த நன்மைகள் - மறப்போம். பிறர் நமக்கு செய்த தீமைகள் - மன்னிப்போம். 03-Mar-2014 5:10 pm
marapom -nam pirarku seitha udavi,manipu-pirar namaku seitha themai,marka kudathathu-pirar namaku seitha udavi,manika mudiathathu-துரோகம் 03-Mar-2014 1:50 pm
Thenmozhi - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Mar-2014 1:35 pm

பனி செய்யும் இடத்தில பிறரது குற்றங்களை கண்டு கோபத்தை வெளிப்படுத்தாதவரை ரொம்ப நல்லவர்களாக தெரிபவர்கள் தவறெனப்பட்டதை பட்டென சொல்லி விடும் போது பக்குவம் அற்றவர்களாகவும் கெட்ட பேருக்கும் ஆளாகிறார்களே?

மேலும்

பனி = பணி என மாற்றிக் கொள்ளுங்கள் . நல்லவற்றுக்கு காலம் இல்லை என்று சொல்வார்களே இப்படியான சந்தர்ப்பங்களில் இம்மொழி பொருந்துகிறது தோழரே . என்ன செய்யலாம் . நாங்கள் நல்லதை செய்துதான் மாற்ற வேண்டும் . 03-Mar-2014 5:18 pm
ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு - தெய்வப்புலவர். 03-Mar-2014 5:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (8)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

user photo

தமிழ் தாகம்...

தமிழ் தாகம்...

தாய் தமிழ் நாடு
மேலே