S K MURUGAVEL- கருத்துகள்

எச்சமும் எண்ணிய இலக்கினை எட்டிட
அச்சம்தரு வதுதந்தை யாம்.

கருவும் உருவாக கருவை காணும்
கருவியை களைய நன்று.

இன்னலை தந்து இவ்வுலகை அழிப்போர்
இருந்தும் இல்லாத பிணம்.

உழைப்பதே உயிரென்று எண்ணியவன் வாழ்க்கை
களைப்பின்றி கனிவாகி விடும்.

உழவு செழிக்க கற்றோரும் கழனியில்
கால்பதிக்க சாத்திய மாம்.

சத்துவம் ராஜசம் தாமசம் மூன்றும்
கொண்டதே மனித குணம்

அறிவு அழிவுக்கு வேராம் மாசுநீங்க
அறிவுக்கு வேண்டும் தடை

பஞ்சும் நெருப்பும் பற்றாமல் இருக்க
நெஞ்சில் வேண்டும் திடம் .

கருவில் உருவாகி மனத்தில் பதிவாகும்
எதுவும் தாய்க்கு சேய்.

வராத பூச்சாண்டியை வருகிறா னென்று
குழந்தைக்கு சோறுட்டும் தாய்.

கருத்துக்கு நன்றி

வாடுங்கால் வளந்தரும் சேமிப்பு கார்தரும்
கோடையில் வான்சென்ற நீர்.

பூதமது அழித்து புவியழகு காணின்
சேதமது காணும் உலகு.

அருமை......

நீரிருக்கு மிடமெலாம் நீர்வசிக்கு மிடமாயின்
பெய்தும் பெய்யாத மழை.

வெண்பனி தாங்கி பசும்புல்லும் வென்றதே
மண்மீது அழகியெனும் விருது.

மலருள் மலரும் காதல் மலருங்கால்
கண்ணால் காணப் படும்.

ஆழியில் கருவாகி விண்ணில் உருவாகி
மண்ணில் விளையாடும் மழை.

அருமை....

கவிகாவியம் இன்னிசை இலக்கியம் கவிநடை
அறியாது வருவது அன்பு.

குணம்நாடி குற்றம்நாடி கொண்ட குலம்நாடி
பணம்நாடி கொள்வது அன்பு.


S K MURUGAVEL கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே