சக்தி ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சக்தி ஸ்ரீ
இடம்:  இராஜபாளையம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jan-2014
பார்த்தவர்கள்:  234
புள்ளி:  51

என்னைப் பற்றி...

பட்டய கணக்காளர் ஆக முயற்சித்து கொண்டிருக்கும் நல்வேளையில்;
தமிழின் மீது ஆர்வம் கொண்ட தமிழச்சியாய்;
பள்ளிக்கு பின் தமிழை தொடர வழி கொடுத்திருக்கும் எழுத்து வலைதளத்தில்
விரும்பி இணைந்து சுதந்திரமாய் சுற்றிவரும் சுட்டிப்பெண்...!

என் படைப்புகள்
சக்தி ஸ்ரீ செய்திகள்
ஜின்னா அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Apr-2015 1:29 pm

உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...

உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...

பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...

மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...

உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...

இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...

நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...

உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...

நீ
கண்காட்சிக்கு செல்லும்ப

மேலும்

தம்பி என்று உரிமையாய் சொல்லுங்கள் 02-Oct-2015 6:39 am
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழரே.. அகராதி எல்லாம் இல்லை நண்பரே... ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்... ஆனாலும் என்னை விட இங்கு பலர் மிக அருமையாக எழுதி கொண்டிருக்கிறார்கள்... அவர்களையும் படித்து பாருங்கள்... 01-Oct-2015 11:31 pm
ஹா ஹா... அப்படியெல்லாம் இல்லை நண்பரே... என்னை விட மிக அழகாக எழுதும் வல்லமை இந்த எழுத்து தள கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்... நான் ஏதோ கிறுக்கி கொண்டிருக்கிறேன்... அவ்வளவுதான்... தங்கள் அன்புக்கு மிக்க நன்றி... 01-Oct-2015 11:29 pm
காதல் அகராதியோ நீங்கள் 30-Sep-2015 5:16 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2015 7:08 am

இன்றெனக்கு திருமணமாம்
என்னருகினில் மிக நெருக்கமாய்
என்னவன் முதல்முறையாக
என் விரல் பற்றிக்கொண்டு ...

அதிகமாய் வெட்கத்தில்
முகம் சிவந்துள்ளதென
காதருகினில் மெல்ல
கிசுகிசுத்தானவன்

காதலித்தவனையே
கரம்பிடிக்கிறேனின்று
கடும்போரட்டத்திற்குப்பின்
பெற்றோரின் முழுஆசியுடன் ..

** எவ்வாறு...
** என்வாழ்வில்
** வந்தானென்று
** நினைவில்லையெனக்கு

** சககல்லூரி தோழனாய்
** சரியானதொரு மழைப்பொழுதில்
** என் கண்ணில் விழுந்தானவன் ...

** நானும்
**அவனும்
** முழுவதும்
** நனைந்திருந்தோம்
** மழையிலன்று...

கெட்டிமேளம்
கெட்டிமேளம்
சப்தங்கள் ஒலிக்கிறது
சங்கீதமாய் செவிகளுள

மேலும்

வருக , வருக நண்பர் தாகு, கனா காண்பவனையே மிதக்க வைத்துவிட்டேன் எனில் உண்மையிலே மிக்க மகிழ்ச்சி தோழா , இந்த கவி சொல்லும் காதலின் கரு உண்மை , கவியின் நடையும் , கற்பனையும் என்னுள் எழுந்தது , எனது நெருங்கிய உறவு பெண்ணின் காதல் திருமணத்திற்கு சென்று வந்த பின் எழுதியது இக்கவி. தங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் கனா. 17-Apr-2015 12:27 am
நன்றி தோழி வருகைக்கும் கருத்திற்கும் 17-Apr-2015 12:22 am
மிக அருமை 15-Apr-2015 7:28 pm
ம்ம்.. இப்போது தான் நினைவு திரும்பியது.. கவிதை முடியும் வரை.. எங்கேயோ மிதந்தேன்... உணர்வுகளை 7டி கோணங்களில் அலசியது போல் இருந்தது.. சில கவிதைகளுக்கு கருத்திட ஆரம்பித்தால் ... (ரொம்ப வெட்டியா இருக்கான் போல இருக்கு என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு பின்னூட்டத்தை நிரப்ப தோன்றும் ).. இதுவும் அந்த வகை தான் நண்பரே..... அருமை... 15-Apr-2015 6:12 pm
அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2015 9:30 pm

மேகப்பெண்
சிரிக்கிறாள்
நிசமாகவே
உதிர்கிறது
முத்துக்கள் காண்.

பச்சை வண்ண
பியானோ பொத்தான்கள்
தென்னங்கீற்றுகள்.
இசைக்கிறது
அத்துளிகள் காண்.

குட்டிக் குழந்தை
கைத்தட்டி இரசிக்கிறது.
வாசலில் நடனமாடும்
சிதறலைக் காண்.

சன்னல் கம்பிகளில்
தோரணமாய் மாறிய
ஒளி ஊடுறுவும்
இலைகளைக் காண்.

மைனஸ் டிகிரி சூட்டால்
கொப்புளங்கள் வருமோ?
தேங்கு நீரில் வீங்கும்
நீ்ர்க்குமிழ் காண்.

உஸ்ஸ் என்ற
சத்தத்தில்
அணைக்கிறது
கவலைக் கங்கினை.
காண்.

சாய்வுக்
கூரை வழியே
சந்தோசமது
வாசல் முற்றத்தில்
விழுகிறது காண்.

கூட்டமெல்லாம்
விலகி நிற்க
கம்பீரமாய் நடந்துவரும்
துளி இராஜாக்கள் காண்.

மேலும்

மிக மிக அருமை ... 13-Apr-2015 3:44 pm
சாய்ந்த கூரையில் வழிவது.... சலனமில்லாமல் வாழ்கிறது உங்கள் எழுத்தில்... மிக சிறப்பு... 13-Apr-2015 8:14 am
ஆஹா அருமை தோழரே... ரசனை வெகு சிறப்பு... அதிலும் அனைத்து ரசனையும் உண்மையும் கூட... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 13-Apr-2015 12:30 am
தங்கள் ரசிப்பு அழகு...! :) :) 12-Apr-2015 10:47 pm
சக்தி ஸ்ரீ - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2015 1:58 pm

சூரியன் ……!
இதுவரை வேலை நிறுத்தம்
செய்யாத முதல் தொழிலாளி ……!

பூமி ……!
இன்னும் விளையாட்டுப்பிள்ளை
தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறாள் ……!

நிலவு ……!
கண்ணாமூச்சு ஆட்டத்திற்குச் சொந்தக்காரன்
மாதத்திற்கு பாதிநாள் ஒளிந்தே விளையாடுவான்……!

மேலும்

சிறப்பான சிந்தனை ! 12-Apr-2015 10:58 pm
அருமை..! :) :) வானம்... - ஜாதி மதம் பார்க்காத பொது மேடை...! 12-Apr-2015 10:44 pm
இயற்கை கவிதைகள் நன்று! 12-Apr-2015 10:05 pm
ஆஹா அருமை பூமி ……! இன்னும் விளையாட்டுப்பிள்ளை தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறாள் ……! ----BRAVO வாழ்த்துக்கள் ராஜா அருணாசலம் அன்புடன், கவின் சாரலன் 12-Apr-2015 5:20 pm
சக்தி ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2015 11:24 pm

கொடுத்த வாக்கு பொய்த்தபின் உள்ள மனம்;
........... அனுபவித்தால் மட்டுமே உணரக்கூடிய வலி...!

மேலும்

நன்றி... :) :) 30-Mar-2015 5:22 pm
உண்மைதான்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Mar-2015 12:36 am
சக்தி ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2015 5:54 pm

வண்ண வண்ண பூக்களாம்;
வாசனை உள்ள பூக்களாம்;
பட்டு போன்ற இதழ்களாம்;
மௌனம் தான் மொழிகளாம்;
நன்மை பல தருவனவாம்;
இரக்கம் உள்ள குணங்களாம்;
மகிழ செய்யும் குழந்தையாம்;
எதையும் தாங்கும் இதயமாம்;

அரும்பு எனும் பேதையாம்;
மொட்டு எனும் பெதும்பையாம்;
மலரும் இளம் மங்கையாம்;
அலர்ந்த பேர்இளம்-பெண் பூக்களாம்;
நன்மை நீயும் செய்தாலே;
பயமும் இல்லை அதனாலே;
தீங்கு செய்ய நினைத்தாலே;
நீயும் சாவாய் முள்ளாலே...!!!

மேலும்

நன்றி பென்ஹர்.... :) 26-Mar-2015 12:00 pm
அருமை .........அருமை .......... 23-Mar-2015 9:36 pm
சக்தி ஸ்ரீ - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Mar-2015 11:23 am

ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிக்கிறான் என்பதை எதை கொண்டு அறிந்துகொள்வது?
எப்பொழுது நம்பிக்கை வரும்?

மேலும்

கண்களும் மனதும் பேசிக்கொண்டால் போதும் வேற அதுவும் தேவையில்லை 04-Mar-2015 8:00 pm
அப்படியானால் கணவன் மனைவி வாழ கண்கள் மட்டும் போதுமா...? 04-Mar-2015 4:13 pm
அந்த ஆண் உண்மையாக விரும்பினால் அவன் கண்களில் தெரியும் ........ 04-Mar-2015 3:45 pm
இன்றைய இளைங்கர்களின் சூழல் அப்படி இருப்பதால் தெரிந்து கொள்ள விரும்பினேன்... 03-Mar-2015 6:10 pm
சக்தி ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2014 1:06 pm

தேவைப்படும்போது கிடைக்காத ஒருவரின் ஆறுதல்;
காலம் கடந்து கிடைப்பதால், பயனில்லை...!

மேலும்

கரு அருமை தோழமையே... கவிதை நடையில் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.... வாழ்த்துக்கள்.... 09-Oct-2014 6:26 pm
உண்மை ! 09-Oct-2014 3:08 pm
Nice..............!! 09-Oct-2014 2:32 pm
ம்ம்ம்... நன்றி... :) 09-Oct-2014 1:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
அராகவன்

அராகவன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (22)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (22)

user photo

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே